Tuesday, July 14, 2015

ராஜ மார்த்தாண்டன்

பின்னட்டை குறிப்பு 


காலச்சுவடு  கட்டளையின் சுந்தர ராமசாமி -75 இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவலின் நூலாக்கம் இது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1930 களில்  கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்சினையை பின்புலமாகக் கொண்டு முஸ்லிம் மக்களின் பண்பாடு வாழ்முறை சமய நம்பிக்கைகள் பள்ளிவாசல் கொடியேற்று விழா திருமணச் சடங்கு முதலானவற்றை அந்த மண்ணின் வாசத்துடன் நட்டுமை யதார்த்தமாகச் சித்தரிக்கிறது  

வயல்களில் தேக்கி வைத்திருக்கும் நீரைத் திருட்டுத் தனமாக வரப்புகளில் பிளவுகள் ஏற்படுத்தி வடித்து விடுவதை குறிக்கும் நட்டுமை  சொல் இலங்கையின் விவசாயக் கிராமங்களில் கள்ளோழுக்கத்திற்கும்  உவமையாகப் பாவிக்கப் படுகிறதுஇ  இந்தத் தலைப்பேநாவலின் மையச் சரட்டையும் குறிப்பாக உணர்த்துகிறது 


ராஜ மார்த்தாண்டன்  


No comments:

Post a Comment