கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்வியலைத்
தெளிவுறுத்தும் நட்டுமை நாவல்-
சமுகவியலடிப்படையான விமர்சன நோக்கு-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் சிறப்புக்கலைமானிப் பட்டத்தினது இறுதியாண்டுப் பரிட்சையின் ஒரு பகுதியினை புர்த்திசெய்யும் முகமாக சமர்;பபிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. 2008-2009-
ஏ.எல். முஹமட் அஸ்மத்.
துமிழ்ப்பிரிவு. மொழித்துறை கலைகலாசார பீடம்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒலுவில்.2014
இயல் - நான்கு
நான்காவது இயல்
4.0 நட்டுமை நாவலின் புனைதிறன் உத்திகள்
4.1 கதைக்கரு
4.2 கதைக்கான தலைப்பு
4.3 பாத்திரப்படைப்பு
4.4 கதை சொல்லும் பாங்கு
4.5 மொழி நடை
4.0 நட்டுமை நாவலின் புனைதிறன் உத்திகள்.
4.1 கதைக்கரு
நட்டுமை நாவலின் கதைக்கருவானது பிரதான ஒரு கதைக்கருவுடனும் சில உபகதைக்கருவுடனும் வைத்து புனையப்பட்டுள்ளது. நட்டுமை நாவலானது சமூகத்தில் காணப்படுகின்ற முறைகேடான உறவைக் குறிப்பதே பிரதான கதைக்கருவாக அமைந்துள்ளது. 1930 காலப்பகுதியில் வாழ்ந்த கிழக்கு முஸ்லிம்களினால் உயர்வாக மதிக்கப் பட்ட ‘போடி’ என்னும் நில உடமையாளர்கள்ää அவர்களுடைய வயலில் வேலை செய்யும் விவசாயிகளின் மனைவியரோடு முறைகேடான உறவை வைத்திருந்தனர். அதனை வைத்து சமூகத்தில் காணப்படுகின்ற முறைகேடான உறவினை நாவலாசிரியர் வெளிப்படுத்துகின்றார்.
இதனை‘நட்டுமை’ நாவலில் பெரிய போடியாரின் ஒரே ஒரு ஆண்வாரிசானää மகன் சின்னப்போடியார் தனது எடுபிடியான மம்மலியின் மனைவி யம்னாவுடன்ää முறைகேடான உறவினை வைத்துள்ளான். இதனை நாவலின் பின்வரும் வரிகள் எடுத்துக்காட்டும்.
“என்னத்தடி செய்ற நான்? ஏள! லாயக்கத்த அநாதி! வக்கத்தபுருசன்! ஏன்ட புருசன்ட விசுவாசத்த சின்னப்போடி வெச்சி என்னோட நாலஞ்சி தெரம் ஒறவு வெச்சிட்டான்”1
என்று யம்னா செய்னம்புவுடன் கூறுவதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
இந்நாவல் கிழக்கு முஸ்லிம்களின் தொழில்ää நம்பிக்கைகள்ää திருமணம்ää உறவு முதலான அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளது. இதனூடாக 1930 காலப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களினுடைய கலாசாரம்ää பண்பாடுகளை அறிந்து கொள்ளலாம். இதனை நாவலிலுள்ள பின்வரும் வரி எடுத்துக் காட்டும்.
“பயனியன்ட கட்ட வெட்டி தண்ணி கொண்டு போக மழுவன் கண்டத்து ஆக்கள் போறானுகள்”
என்னும் வரியானது பிரதான தொழிலான விவசாயத்தினைப் பற்றி எடுத்துரைக்கின்றது.
“இரண்டு வருடங்களுக்கு முன்னால் தாய்க்காரி கூழாவடிச் சந்தியில் உறையும் கரிவைரவன் பார்வை பட்டு திடீர் சுகவீனமுற்று காலஞ் சென்று விட்டதிலிருந்துää செய்னம்பு தாயில்லாப் பெண்ணானாள்”2
என்னும் வரிகள் அக்கால மக்களின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகின்றது.
“ஊர்வலம் பள்ளித் திடல் ஒழுங்கையில் ஏறி நெருங்கி வந்து கொண்டிருந்தது. முன்னால் வந்த மாப்பிள்ளைத் தரப்புப் பெண்களின் குரவையொலி மிக உச்சத்தாயில் வாசலில் ஒலித்தது…”
என்பதனூடாக அக்கால மக்களின் திருமண நடைமுறைகளை அறிய முடியும்.
இந்நாவலின் பிரதான கதைக்கருவாகää சமூகத்தில் காணப்படு;கின்ற முறைகேடான உறவு அமைந்துள்ளது. 1930 காலப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின் கலாசாரம்ää பண்பாடுகள் முதலானவை உபகதைக்கருவாக அமைந்தாலும்ää நாவலின் கதைப்பின்னல்ää சின்னப்போடியாரின் காதல்ää காமம்ää சண்டித்தனம்ää அதன் விளைவான சண்டைää கொலை ஆகியவற்றைச் சுற்றியும் நாவலின் கதை நகர்த்தப் பட்டுள்ளது.
4.2 கதைக்கான தலைப்பு
இந்நாவலின் தலைப்பு ‘நட்டுமை’ என்ற தலைப்பில் இடப்பட்டுள்ளது. நட்டுமை என்ற சொல் கிழக்கு முஸ்லிம்களுக்கு மிகவும் பரிச்சயமான சொல்லாக இருந்தாலும் அது பரவலாக வாசிப்புக்குரிய சொல்லாடலாக இல்லை. இத்தலைப்பினைப் பற்றி பேராசிரியர் நுஃமான் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“’நட்டுமை’ என்பது பொது வழக்கில் இல்லாத ஒரு விவசாயக் கலைச்சொல்ää கிழக்கிலங்கை அம்பாறை மாவட்ட முஸ்லிம் விவசாயிகள் மததியில் இச்சொல் வழக்கில் உண்டு. ஒரு வயலில் கட்டி வைத்த நீர் வரம்புகளில் உள்ள வெடிப்பகளால் அல்லது வேறு துளைகளால் வயற்காரன் அறியாமல் அடுத்த வயலுக்குள் கசிந்து இறங்குவதை இது குறிக்கும். ‘நட்டுமை போயிருக்கு’ என்றால் வயல் நீர் களவாக அடுத்த வயலுக்குள் இறங்கியிருக்கிறது என்று பொருள். ஆண்ää பெண் இடையிலான கள்ள உறவைக் குறிப்பதற்கும் இச்சொல் உருவகமாக பயன்படுத்தப் படுகிறது”
இந்த நாவலில் சின்னப்போடியார் முகம்மதனிபாää அவனுடைய எடுபிடியான மம்மலியின் மனைவியோடு முறைகேடான உறவை வைத்திருக்கின்றான். இதனால் யம்னா கர்ப்பவதியாகின்றாள். குழந்தையையும் பெற்றெடுக்கின்றாள்.
“அது என்ட மகன் சின்னப்போடிர புள்ள! வ்வ்வாயப் பொளக்காதிங்க வட்டான! நான் சொல்றதுதான் மெய்…அல்லா அறிய முகம்மதனிபாட புள்ள தான். அதுக்காகத் தான் நான் காணி எழுதித்தந்த…புள்ளய பாத்த ஒடன அதுக்கு முகம்மதனிவான்டு பேரும் வெய்க்கச் சொன்ன”3
என்று மீராவட்டானையிடம் ääயம்னாவின் குழந்தையைப் பற்றி பெரிய போடியார் அகமது லெவ்வை குறிப்பிட்டிருப்பதனூடாக அவர்களினிடையே காணப்பட்ட முறைகேடான உறவினை புரிந்து கொள்ள முடியும்.
சின்னப்போடியாரின் மர்மமான மரணம்ää பெரிய போடியாரை பல கோணங்களிலும் ஊகிக்க வைத்தது. இறுதியில் பெரிய போடியார் உண்மையினை அறிந்து கொள்கிறார்.
“அதான் நட்டுமை போயிருக்கெண்டு சென்னனே…நானு…கதவெளங்கல்லியா?
மம்மலிர பொண்டாட்டி யம்னாக்கு என்ட மகன் மம்மனிவா புள்ளயக் குடுத்திருக்கான்”4
என்று மீராவட்டானையிடம் பெரிய போடியார் குறிப்பிடும் பேச்சில் இருந்து யார் யாருக்கிடையில் நட்டுமை போயிருக்கென்ற உண்மையினை அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த நாவலில் உமறுலெவ்வையின் தாய் கூட ஒருவனுடன் வைத்திருந்த முறைகேடான உறவினாலேயேää உமறுலெவ்வை பிறந்தான் என்றும்ää அதனால் அவனை தகப்பன் தெரியாதவன் என்றும் ஊரிலுள்ளோர் அழைக்கின்றனர். இது கூட இருபது வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற நட்டுமையினை எடுத்துக் காட்டுகிறது. அது போலவே இந்நாவலில் ஊர்ச் செய்திகளை காவித்திரியும் செய்தி வங்கியான முக்குலத்துக் கிழவியின் வாழ்க்கையில் கூட நட்டுமை போயிருப்பதாக கூறப்படுகிறது
. காட்டவ்லியாப்பாவின் கொடியேற்ற விழாவுக்கு பொல்லடி நிகழ்ச்சியினை நடத்த வந்த பொத்துவிலைச் சேர்ந்த பீர்முகம்மது அண்ணாவியாருக்கும் முக்குலத்துக் கிழவிக்குமிடையில் கூட நட்டுமை போயிருக்கின்றது. இதனை “ஒண்ட பழைய புருசன் அண்ணாவியாரத் தேடிப் போயிராத” என்னும்மீராவட்டனையின் பேச்சில் இருந்தும்ää பொல்லடி நிகழ்ச்சியின் போது அண்ணாவியாரைää வைத்த கண் வாங்காது முக்குலத்துக் கிழவிää தன்னுடைய கடந்த கால அண்ணாவியாருடனான வாழ்க்கையில் லயித்துப் போயும் கபணப்படுகின்றாள். இதுவும் ஒரு பழைய நட்டுமை ஆகும். முகம்மதனிவாää யம்னாவுக்கும் இடையில் காணப்பட்ட உறவு புதிய நட்டுமையாகும். இந்நாவலில் காணப்பட்ட முறைகேடான உறவினைக் குறிக்க ‘நட்டுமை’ என்ற தலைப்பானது மிகுந்த பொருத்தப் பாட்டுடன் அமைந்தள்ளது என்று கூறலாம்.
4.3 பாத்திரப்படைப்பு
எந்த ஒரு நாவலுக்கும் சிறப்பினைத் தருவது பாத்திரப் படைப்பாகும். அதாவது ஆசிரியர் கூற வந்த கருத்தை தெளிவான முறையில் விளக்குவதற்கு பாத்திரங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். இந்நட்டுமை நாவலில் பெரிய போடியார்ääசின்னப்போடியார்ää மம்மலிää யம்னாää மீராவட்டானைää செய்னம்புää உமறுலெவ்வைää அத்தர்பாவா ஆகிய குறிப்பிட்ட பாத்திரங்களினூடாக ஆசிரியர் தான் கூறவந்த கருத்தினை சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நாவலில் ‘பெரிய போடியார்’ என்னும் பாத்திரம் மிக முக்கியமான பாத்திரமாக வார்க்கப்பட்டுள்ளது. இப்பாத்திரம் ஊர் மக்களால் அதிகமாக மரியாதை செலுத்தப்படும் பாத்திரமாகவும்ää இவருடைய பேச்சுக்கு ஊர்மக்களே கட்டுப்படக் கூடியவர்களாகவும் காணப்பட்டனர்.
“சபையில் பலர் இருந்தனர். நடுநாயகமாக இருந்த கயிற்றுக் கதிரையில் பெரிய போடியார் கம்பீரமாக அமர்ந்திருந்தார். சிவப்புப் பெரிய கண்டாங்கிச் சாறனுக்குள் பெரய கைபெனியனை உள்விட்டு நாலங்குல அகலத்தில் மதராசு இடைப்பட்டி அணிந்திருந்தார். அதில் பற்பல அளவுகளில் சாவிக்கொத்துகள்ää காதுக்குத்திää சிறிய கத்திää நகக்குறும்பிää நாசிக்குடைவு இவைகளுடன் விற்சுருள் சிறுகத்திகளும் தொங்கின. மழிக்கப்பட்ட தலை மீது அணிந்திருந்த துருக்கித் தொப்பியின் குஞ்சத்தில் தங்கமுலாம் மணிகள் ஆடின. கால்கள் சு10ரியமாரா மரத்தாலான மிதியடிகள். நரை கலந்த மீசை பெரிதாக வாசநெய்யிட்டு இருபக்கமும் முறுக்கி விடப்பட்டிருந்தன. வாயில் பெரிய ஜேர்மன் சுருட்டு சொருகப்பட்டு இடைவிடாது புகைந்து கொண்டிருந்தது”5
எனும் கூற்றினூடாக பெரிய போடியாரின் கம்பீரம்ää அருடைய ஆடைää ஆசனம் முதலானவற்றை அறிந்து கொள்ள முடியும்.
சின்னப் போடியார் முகம்மதனிபாää பெரிய போடியாரின் ஒரே ஒரு ஆண்வாரிசாகவும் 92ஏக்கர் காணிக்குச் சொந்தக்காரனாகவும்ääபெரிய போடியாரின் ஏனைய சொத்துக்களுக்கு உரித்துடையவனாகவும் காணப்படுகின்றான். காதல்ää காமம்ää சண்டித்தனம்ää சண்டைää கொலை ஆகியவற்றை எடுத்துக்காட்ட நாவலாசிரியர் இப்பாத்திரத்தை கையாண்டுள்ளார்.
“பெரிய போடியாருக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த மரஉரல் புட்டுவத்தில்ää பெரிய போடியாரின் ஏகபுத்திரரான ‘சின்னப்போடியார்’ முகம்மதனிபா உட்கார்ந்திருந்தான். இளைய தலைமுறையினரின் ‘மந்திர குமாரன்’ சாறம் அணிந்துää கண்ணைப் பறிக்கும் மஞ்சட் கலரில் நைலான் சட்டை நீளமாக அணிந்திருந்தான். கிராமத்து வழக்கத்துக்கு மாற்றமாக தலைமுடி கொஞ்சமாக வளர்த்து ‘சிலுப்பா’ வைத்திருந்தான். கையில் பென்னம் பெரிய ஜேர்மன் மணிக்கூடு கட்டியிருந்தான்.(மணி பார்க்கத் தெரியாது)ää இளவரசுப் புன்னகையுடன் சபையை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான்”
என்று நாவலாசிரியர் முகம்மதனிபாவின் தோற்றத்தை வர்ணித்துள்ளார்.
சின்னப் போடியார் முகம்மதனிபா. தனது எடுபிடியான மம்மலியின் மனைவி யம்னாவுடன் அவளது விருப்புக்கு மாறாக உறவு வைத்திருப்பதுடன்ää மீராவட்டானையின் மகள் செய்னம்புவின் மீது ஒருதலையாக காதல் கொள்கிறான். இந்நாவலில் விறுவிறுப்பான தன்மைää கதை கேட்கும் ஆர்வமும் இப்பாத்திரத்தினூடாகவே அதிகரிக்கின்றது என்று கூறமுடியும்.
“ஆணையிட்டான் சின்னப் போடியார். உடனே மம்மலி விரைந்தோடிப்போய் விற்கரத்தை பூட்டிää இளங்காளை மாடு கோர்த்துää கிண்கிணி மணியொலிக்க விரைவில் கொணர்ந்தான். முகம்மதனிவா ஒரே தாவலில் விற்கரத்தை மீதேறää எடுபிடி மம்மலியும் பாய்ந்தேற ‘ஹைய்ய்ய்யா’ ஒரே சுண்டுதலில் இளங்காளை முழு வேகமாய் வாசலை விட்டு வெளித்தாவிää பிரதான மணற்சாலையில் பறந்தது”
(நௌஸாத்ääஆர்ääஎம்.ää(2009)ää நட்டுமைää ப.22)
எனும் வரிகள் சின்னப் போடியார் முகம்மதனிபாவின் வீரத்தையும்ää இளமைத்துள்ளலையும் எடுத்துக் காட்டுகின்றன.
இந்நாவலிலுள்ள அடுத்த முக்கிய பாத்திரமாக மீராவட்டானையைக் குறிப்பிடலாம். இவர் பெரிய வெளிக்கண்டம்ää மழுவன் கண்டம் ஆகிய இரு வயற் பிரதேசத்துக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்ட ‘வட்டை விதானை’ யாக கடமை புரிகின்றார். இவர் ஒரு நேர்மையானவராகவும்ää இறை நேசர்கள் மீது பற்றுக் கொண்டவராகவும் காணப்படுகின்றார். பெரிய போடியாரின் மதிப்பிற்குரியவராகவும்ää நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவும் காணப்படுவதோடுää இக்கிராமத்தில் தனது பெயரை எழுதத் தெரிந்தவராகவும் இவரை வாசகர் மனதில் ஒரு பதிவினை நாவலாசிரியர் ஏற்படுத்துகிறார்.
“நான் என்னத்தச் செல்ற சின்னப் போடியார்? எனக்கிட்டத்தான் ரெண்டு மகள் இல்லியே. உள்ளதும் ஒரே மகள்…நா என்ன செய்யிற?... இத்துன பெரச்சினயும் அவளால தான் வெருது”6
என்று மீரா வட்டானை கூறுவதுää அவருடைய நடுநிலையான தன்மையினை எடுத்துக் காட்டுகிறது.
இந்நாவலில் மீராவட்டானையின் மகள் செய்னம்பு கூட ஒரு முக்கியமான பாத்திரமாக வார்க்கப் பட்டுள்ளாள். தந்தையில் தங்கியிருப்பவளாகவும்ää தனது சிறு வயதில் தாயை இழந்தவளாகவும்ää முறை மச்சான் உமறுலெவ்வையின் மீது காதல் கொண்டவளாகவும் காணப்படுகிறாள். இவளுடைய தோற்றத்தை நாவலாசிரியர்
“முருங்கைக் கிளைகளைத் தனது பதினாலு வயதுக்குரிய இளமைத துள்ளலுடன்ää எட்டித் துள்ளி துள்ளி அவள் இழுத்துச் சவட்டி முறிக்கையில்ää அவளது கணுக்காலில் கட்டியிருந்த தாமரைப்பூ கொலிசம் ‘கிலீங்…கில்லீங்’ கெனச் சிணுங்கின. சதாவும் செம்மருதாணியிட்டு ஓரமெல்லாம் சிவந்திருந்த அவளது பாதங்கள் வெளிறிச் சிவந்துää வர்ணம் காட்டின. வலது கையில் அணிந்திருந்த முகப்பணிக் காப்பும்ää இடக்கையில் பூட்டியிருந்த வெள்ளிக் கைக்கட்டும் பளீர் பளீரென மின்னின…வீட்டிலிருந்ததால்ää முக்காடு இல்லாத கூந்தலில்ää சேர்த்துக் கட்டியிருந்த கரு ஊதா நாகவள்ளிச் சிறு பூக்கள் ஒன்றிரண்டாய்க் கீழே உதிர்ந்தன. குக்கிராமத்திற்கே உரித்தான உறுதியும் கட்டிறுக்கமுமான வாளிப்பான இளமையுடல்ää வில்லென வளைந்தும் நிமிர்ந்தும் ஒத்துழைக்கää இளம் வயதுக்கான கற்பனையில் இலயித்திருந்த பெரிய கனவு விழிகளில் இனம்புரியாத மருட்சி மின்னியது. நினைவெல்லாம் தன்னை நோக்கி எய்யப்படும் பலவந்த விருப்ப அம்புகளை தடுக்க முடியாத நிலையில்ää குழப்பமான எண்ணங்களில் மூழ்கித் தத்தளித்தது”
என்று செய்னம்புவினுடைய அழகையும்ää எண்ணங்களையும் எடுத்துக் காட்டுகிறார்.
இந்நாவலின் மற்றொரு முக்கிய பாத்திரம் மம்மலி. இவன் சின்னப் போடியாரின் எடுபிடியாகவும்ää சின்னப் போடியார் எதைச்சொன்னாலும் உடனே செய்கின்ற அடிமையாகவும் நாவலாசிரியர் இவனை படைத்துள்ளார்.
“அவனது காலடியில் அவனது ‘எடுபிடி’ அடிமை மம்மலி அதிசயமாகää சால்வையும் சாறமும் அணிந்து முகம்மதனிபாவின் ஜேர்மன் மணிக்கூட்டையே பார்த்க் கொண்டிருந்தான்.(அதற்குள் சுற்றியோடும் விமானம் எப்போது ஓயும் என வியந்து கொண்டிருந்தான்.)”7
மம்மலிää சின்னப் போடியாரை எதிர்ப்பவர்களைää எதிர்க்கக் கூடியவனாகவும்ää சின்னப் போடியாருடன் சேர்ந்து அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க நினைப்பவன். தனது மனைவியுடன் சின்னப் போடியார் முறைகேடான வகையில் வைத்த உறவினை அறிந்த பின்னர்ää காட்டவ்லியாப்பாவின் கொடியேற்ற விழாவின் போது தனியே கூட்டிச் சென்றுää அவனை கொலை செய்து விடுகின்ற தன்மானம் மிக்கவனாகவும் இந்நாவலில் மம்மலி வார்க்கப் பட்டுள்ளான்.
“சின்னப் போடிய தனியாக் கூட்டிட்டுப் போய்ää அவன்ட ஈரப்பளுவுல கத்தியால குத்தி கொடல உருவி சாகவெச்சிட்டாரு என்ட புருசன்…தெரியுமா ஒனக்கு”
என்று யம்னா செய்னம்புவிடம் நடந்த உண்மையை கூறுவதிலிருந்துää சின்னப் போடியாரைää மம்மலி தான் கொலை செய்தான் என்பது உறுதியாகிறது.
நட்டுமை நாவலில் புனையப் பட்டுள்ள பெண் பாத்திரத்தில் முக்கியமான பாத்திரமாக மம்மலியின் இளம் மனைவி யம்னா வார்க்கப் பட்டுள்ளாள். இவள் சுறுசுறுப்பானவளாகவும்ää வயதில் மூத்தவர்களை மதிக்கக் கூடியவளாகவும்ää செய்னம்புவிற்கு ஆதரவாகவும் இருக்கின்றாள். இவளுடைய தோற்றத்தினை நாவலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“பத்தொன்பது வயதின் இளமை மதர்த்த உடல்ää வேலைப் பயிற்சிகளால் உறுதியான கட்டுடன் ஆரோக்கியம் வெளிக் காட்டியது. ஆயினும் வயிறு சற்றே முன் தள்ள ஆரம்பித்திருந்தது. யம்னா இரண்டு மாதக் கர்ப்பிணி”
(நௌஸாத்ää ஆர்ää எம்.ää(2009)ää நட்டுமைää ப.44)
இந்நாவலில்ää‘அத்தர் பாவா’ எனப்படும் ஒரு தீர்க்கதரிசியினையும்ää அவருடைய அருள் வாக்கு முதலானவற்றையும் நாம் அறிந்து கொள்ளலாம்.இந்நாவலிலுள்ள மக்கள்ää வாழ்க்கைää திருமணம்ää எதிர்காலம் முதலான அம்சங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்ää இவரிடம் சென்று தெரிந்து கொள்ளும் வழக்கத்தினையுடையவர்களாக காணப்பட்டனர்.
“கீழே வெற்றுத் தரையின் மீது விரிக்கப் பட்டிருந்த ஒரு மான் தோலின் மீது மஹான் அத்தர் பாவாவின் உருவம் மிக மிக அமைதியுடன் அமர்ந்திருந்தது. கண்கள் மூடியிருந்தன. ஒரு நீண்ட பச்சைச் சீலையை உடுத்தி அதனையே மேல் நோக்கி இழுத்து மேல் மூடியிருந்தார். தலைமயிர் ஜடா முடியாக வளர்ந்து நரையும் கறுப்பும் செம்பட்டையுமாகத் தாறுமாறாக நீண்டு தொங்கிக் கொண்டிருந்தன. தாடியும் மீசையும் ஒரு போதும் மழிக்கப் படாமல் இரண்டறக் கலந்து பின்னி ஒழுங்கற்றுத் தொங்கின”
எனும் கூற்று அத்தர் பாவா எனும் மஹானின் உருவத்தை நம் மனக்கண் முன் படமாக காட்டுகிறது.
இந்நாவலினுடைய பாத்திர வார்ப்புப் பற்றிää
“பொதுவாக நாவலைப் பொறுத்த வரை பாத்திரங்களின் நீட்சி ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது. இதில் நாவலாசிரியர் கவனஞ் செலுத்துவதைத் தவிர்த்துää வாசகர்களின் மனதிலிருந்நு பாத்திரங்கள் நினைவிழந்து விடாது தக்க வைத்துக் கொள்வதில் கூடிய கவனத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை இந்நாவலில் வரும் அளவான பாத்திரங்களினூடாக நாம் புரிந்து கொள்ள முடிகின்றது”8
என்று எம்.எம். எம். நூறுல் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
4.4 கதை சொல்லும் பாங்கு
நட்டுமை நாவலில் 1930 காலப்பகுதியில் வாழ்ந்த கிழக்கு முஸ்லிம் மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் கலாசாரம்ää பண்பாட்டு அம்சங்கள் பல கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். நாவலிலுள்ள உரையாடல்ää ஆசிரியர் கூற்று என பலவாறாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இந்நாவலானது ஞானமுத்து நொத்தாசியாரின் நன்கொடை உறுதி வாசிப்பில் ஆரம்பமாகிறது.
“…இத்தால் சகலருமறிக. இன்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தியாறாம் வருடம் புரட்டாதி மாதம் ஐந்தாம் திகதி வாசிக்கும் நன்கொடை உறுதி…இதனடியிற் சம்மாந்துறை முதலாம் குறிச்சி ஆதம்பாவாப் போடியார் அகமது லெவ்வைப் போடியார் ஆகிய நான் எனது ஒரே புத்திரரான ஷைகுறிச்சி அகமது லெவ்வைப் போடியார் முகம்மது அனீபா என்பவர் மீது இயல்பாகவே கொண்டுள்ள அன்பு பட்சமின்னு மென்னை ஏவும் பல முகாந்திரங்களே காரணமாக ரூபா ஆயிரத்தைந்நூறு விலை மதிப்புள்ள இதன் கீழ்க்கூறுமாதன இடாப்பில் விபரிக்குமாதனத்தைக் குறித்த அகமது லெவ்வைப் போடியார் முகம்மதனிபாவுக்கு என்னால் மாற்றவல்ல தழிக்க முடியாத அறுதி நன்கொடையாகக் கொடுத்துமொப்படைத்தும் விட்டேன்…”
(நௌஸாத்ää ஆர்ää எம்.ää(2009)ää நட்டுமைää ப.17)
இந்நாவலில் இயல்பான நடையினை நாவலாசிரியர் பயன்படுத்தியுள்ளார். உதாரணமாக
“உள்ளறையில் பெரிய போடியார் வீட்டுப் பெண்கள் கலகலத்தனர். எட்டிப்பார்த்தனர். வயற்காரர்களின் மனைவியர் சுறுசுறுப்பாக எடுபிடி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மிதுஹாம்மா அவர்களை அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தாள்”
என்னும் வரிகளை எடுத்துக் காட்டலாம்.
இந்நாவலில் சுருக்கமான உரையாடல்களே அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. இத்தன்மை கூட இந்நாவலுக்கு வலுச்சேர்க்கும் என்று கூற முடியும்.
“என்னடா மம்மலி …பேக்கத கதைக்காய்” மறுபடி கேட்டார் மீராவட்டானை.
“ஏன் காக்கா சின்னப் போடியாரு செய்னம்புவக் கேட்டா குடுக்க மாட்டீங்களா?”
“சின்னப் போடியாரு கேக்கச் சொன்னாரா உனக்கிட்ட?”
“இல்ல…ஆனா கேட்டா?”
“கேட்டா பொறகு பாப்பம்…”
இவ்வுரையாடல் கூட சுருக்கமாகவே அமைந்துள்ளது. எளிதில் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய உரையாடல் நடை அதிகமான இடங்களில் பயன் படுத்தப் பட்டுள்ளது.
நாவலாசிரியர் கிராமிய பேச்சு மொழியினை பொருத்தமான இடங்களில் கையாண்டுள்ளார்.
“டே அலி…அன்னா செய்னம்பு மச்சி நிக்கா. நான் போய் கதச்சிட்டு வாரன். நீ வெராத ஏனண்டா நீ அவள்ள வாப்பா மீரா வட்டானைக்கி அடிச்சண்டு ஒன்னுல கோவம் அவளுக்கு…நா மட்டும் போய் வாரன் நீää இப்பிடி அஞ்சலியோட நில்லு. என்னயும்டால்ää விசில் அடி செரியா?”9
உமறுலெவ்வையின் வாயிலாகää இக்கூற்றில் கிராமிய பேச்சு வழக்கினை அறிந்து கொள்ள முடியும்.
இந்நாவலில் பயன்படுத்தப் பட்டுள்ள சொற்களில்ää யதார்த்தப் பூச்சுää மாயமான ஒரு நடைää கிராமியத்தளத்தில் இயங்கும் இயல்பான கதையோட்டம் என்பவற்றைக் காணலாம். இதனை பின்வரும் வரிகள் எடுத்துக் காட்டும்.
“சனங்களின் அதிர்ச்சி ஒலிகளுக்கு மத்தியில் செய்னம்புவும் திடுக்கிட்டுப் போனாள். மீராவட்டானை நம்ப முடியாத நடுக்கத்துடன் பெரிய போடியாரைப் பார்த்தார். முக்குலத்துக் கிழவிää அதிர்ச்சியுடன் செய்னம்புவை பிடித்துக் கொண்டாள். சனங்களிடையே நின்று கொண்டு செய்னம்புவையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்த உமறுலெவ்வையின் வியப்பு தாளாமல் விறைத்துப் போனான். சனங்கள் உச்ச கட்ட வியப்புணர்ச்சியில்ää வாய் பிளந்திருந்தனர். மறுபடி பெரிய போடியார் கூடியிருந்தோர் மத்தியில்ää யாரையோ கண்களால் தேடினார்”
இந்நாவலில் இயல்பான நடைää சுருக்கமான உரையாடல்ää கிராமிய பேச்சு மொழியினை பொருத்தமாக கையாளல்ää சொற்களில் எதார்த்தப் பூச்சுää மாயமான ஒரு நடைää கிராமியத்தளத்தில் இயங்கும் இயல்பான கதையோட்டம் ஆகியவற்றினூடாக கதை சொல்லப் பட்டுள்ளது.
4.5 மொழி நடை
நட்டுமை நாவலின் மொழி நடையானது சிறப்பித்துச் சொல்லும் இயல்பானதும்ää ஜனரஞ்சகமானதாகவும் அமைந்துள்ளது. பெரிய போடியார்ää சின்னப் போடியார்ää மம்மலிää யம்னாää செய்னம்புää மீராவட்டானைää உமறு லெவ்வைää முக்குலத்துக் கிழவிää அத்தர் பாவா ஆகிய பாத்திரங்களினூடாகää வௌ;வேறு வகையான மொழி நடையினை ஆசிரியர் கையாண்டுள்ளார்.
இந்நாவலின் ஆரம்பமானதுää அகமது லெவ்வை எனப்படும் பெரிய போடியாரின் 92ஏக்கர் காணியை தனது மகன் முகம்மதனிபாவுக்கு நன்கொடையாக எழுதும் உறுதி மொழியினை எடுத்துக் காட்டுகிறது.
“…இத்தால் சகலருமறிக. இன்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தியாறாம் வருடம் புரட்டாதி மாதம் ஐந்தாம் திகதி வாசிக்கும் நன்கொடை உறுதி…இதனடியிற் சம்மாந்துறை முதலாம் குறிச்சி ஆதம்பாவாப் போடியார் அகமது லெவ்வைப் போடியார் ஆகிய நான் எனது ஒரே புத்திரரான ஷைகுறிச்சி அகமது லெவ்வைப் போடியார் முகம்மது அனீபா என்பவர் மீது இயல்பாகவே கொண்டுள்ள அன்பு பட்சமின்னு மென்னை ஏவும் பல முகாந்திரங்களே காரணமாக ரூபா ஆயிரத்தைந்நூறு விலை மதிப்புள்ள இதன் கீழ்க்கூறுமாதன இடாப்பில் விபரிக்குமாதனத்தைக் குறித்த அகமது லெவ்வைப் போடியார் முகம்மதனிபாவுக்கு என்னால் மாற்றவல்ல தழிக்க முடியாத அறுதி நன்கொடையாகக் கொடுத்துமொப்படைத்தும் விட்டேன்…”
இந்நாவலில் உலவும் பாத்திரங்களின் மொழி நடையானதுää கிராமத்து மக்களின் பேச்சு வழக்காக அமைந்துள்ளது. இதனை பின்வரும் வரிகள் தெளிவு படுத்தம்.
“இன்னஞ் செல ஆக்கள் இரிக்கானுகள்…பெரிய படிப்பாம்… ஆனா வசதி ஒண்டும் இல்ல…ஆக்களும் குழப்படிக்குப்படி ஆக்கள். மாமிர மகன் எண்டத்துக்காக ஓம் பட்டால்ää மறுகா அழிஞ்சாய்…புள்ள நீ”
(நௌஸாத்ää ஆர்ää எம்.ää(2009)ää நட்டுமைää ப.31)
இந்நாவலில் பொத்துவில் பீர் முகம்மது அண்ணாவியாருடைய பொல்லடி நிகழ்ச்சிää காட்டவ்லியாப்பாவின் கொடியேற்ற விழாவின் இறுதி நாளன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அண்ணாவியாரின் உரையாடல் மூலமாகää அவருடைய பொல்லடி நிகழ்ச்சிக்கான மொழியினை அறிந்து கொள்ளலாம்.
“போடியார்…மொதல்ல ‘கீச்சன் போர்’ அடிக்கவா…இல்ல ‘தேன் கூடா’…? என்று தன்னிரு கைகளிலும்ää கற்பனைத் தடிகளால் பிடித்துக் காற்றில் அடித்துக் காட்டியபடி கேட்டார்”
பொல்லடியின் போது பீர்முகம்மது அண்ணாவியார்
“செல்வம் பெருகிடும்;உம்மாந்துறைப் பற்றின்
செல்வம் விளங்கிடும் போடி வங்கிசமே…எ…ஏ…”10
என்று பாடுகின்றார். இவருடைய பேச்சில்ää பாடல்களில் ஒரு வகையான மொழிநடையினை ஆசிரியர் கையாண்டுள்ளார்.
தீர்க்கதரிசியாக மக்களால் நம்பிக்கை வைக்கப்பட்ட ‘அத்தர் பாவா’வினுடைய பேச்;சுக்களிலும் வேறு ஒரு வகையான மொழிநடை பயன்படுத்தப் பட்டுள்ளது.
“அருமையுள்ள பெண்ணிவளுக்கு சுருக்கும் துன்ப வினையிதாம் கொடுக்கும் கொலை பாதகங்கள்…ஆயுள் தரிபடும் காராக்கிருகம்…சு10டாக மேனியிலேää ஒன்றிரண்டாய் உதிரும்…நிசியினில் ஏறும்…இணையாகத் திரிந்தவனே பகையுறவேää மாற்றன்புடையோன்ääஈர் மாதத்தில் கைப்பற்றப் பலனுண்டு”
என்று தன்னிடம் வந்த முக்குலத்துக் கிழவிää செய்னம்பு ஆகியோருக்கு அத்தர் பாவா அருள் வாக்கு கூறுகின்றார். இந்த அருள் வாக்கில்ää ஒரு வகையான மொழிநடை கையாளப் பட்டுள்ளது.
உமறுலெவ்வைää செய்னம்பு ஆகியோரின் உரையாடல்கள் மூலமாகää கிராமிய காதலர்களின்ää காதல் மொழியினை அறிந்து கொள்ளலாம். உமறுலெவ்வைääசெய்னம்புவை ‘ஆக்கள்’ என்று சொல்லி அழைப்பதும்ää அது போல செய்னம்புää உமறுலெவ்வையை ;ஆக்கள்’ என்றழைப்பதும்ää யம்னாவிடம் கதைப்பது போல கதைப்பது கூடää கிராமியக் காதலர்களின் மொழியாகும்.
“யம்னா லாத்தா… அப்பிடியெண்டால் இப்பிடிக் கதைக்கிற ‘ஆக்கள்’ இந்தக் காட்டுப் பள்ளியில சத்தியம் பண்ணுவாகளா? என்று அவசரமாகக் கேட்டான்.”
“நம்பிக்கை இல்லாத ‘ஆக்களுக்கு’த்தான் சத்தியம் என்றது முதுகு சிரிப்புடன்…”
(நௌஸாத்ää ஆர்ää எம்.ää(2009)ää நட்டுமைää ப.66)
இந்நாவலில் காட்டவ்லியாவின் கொடியேற்ற விழா கொண்டாடப் படுகிறது. அவ்விழாவின் போதுää புதுப்புதுக் கடைகள் அவ்விடத்தில் தோற்றம் பெற்றன. அக்கடை வியாபாரிகளின்ää வியாபார மொழிகள் கூட சிறப்பாக பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனை வியாபார மொழி என்றே நாம் கூற முடியும்.
“மருதமுனையிலிருந்து ஆடை வகைகளுடன் பாடியிறங்கியிருந்தார் மௌலான முதலாளிää சந்திரபடிää மோகினிப் பட்டுää அரமண மூட்டுää அசில் பட்டுää குட்டாப் பட்டுச் சாறம்களும்ää கைத்தறிச் சாறம்களும் பற்பல வர்ணங்களில் அடுக்கியிருந்தார். சதா சிரித்துக் கொண்டிருந்தார்”
(நௌஸாத்ää ஆர்ää எம்.ää(2009)ää நட்டுமைää ப.58)
கண்டியிலிருந்துää வண்டியி;ல் தாவளம் கட்டி வந்த கிதுரு நானாவும்ää அவரது இல்லாள் பீவிää பாத்திமாவும் நவீன வெளிநாட்டுப் புடவைக் கடை பரப்பியிருந்தனர். மாடா வண்ணச் சோமன் எள்ளுப்பட்டுää முக்கடுகுச் சோமன்ää வெண்பட்டுää தோம்புப் புடவைää சுங்கொடிää மூங்கில் பட்டுää கல்குத்தா ஜவுளிகள்ää வத்தாவி நூற் சேலைகள்ää அத்துராசி அடுக்குகள் என வகையாகää சீர் சீராக அடுக்கியும் சிலதைத் தொங்க விட்டும்…”11
எனும் வரிகள் வியாரிகளைப் பற்றியும்ää வியாபாரப் பொருட்களைப் பற்றியும்ää அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்; என்ற தகவலையும் எடுத்துரைக்கின்றது.
இந்நாவலில் ‘கிளியும் கிளியும் கிண்ணரம்’ என்ற மொழிää கிராமங்களில் உடன்படும் விடயத்துக்காக பயன் படுத்தப் படுகின்றது. இது கிராமங்களில் காணப்படும் வழக்கமே.
“இவடத்த இருக்காதங்க. கொஞ்ச நாளா இவடத்த கரும் பொடையன் ஒண்டு சுத்தித் திரியிது” என்று மம்மலியிடம் யம்னா கூறுகிறாள். இவளுடைய வார்த்தையில் மறைமுகமாகக் கூறுகின்ற தன்மை காணப்படுகின்றது. ‘கரும் பொடையன்’ என்று சின்னப் போடியார் முகம்மதனிபாவையேää யம்னா குறிப்பிடுகிறாள். சில விடயங்களை மறைமுகமாக சொல்லும் மொழிநடை கிராமத்து மக்களிடம் காணப்படுகின்றது என்பதனை ஆசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். ‘வாருவக்கட்டுக்கு பட்டுக் குஞ்சத்த கட்டினாப் போல இரிக்கும்’ஆகிய ஓரிரு பழமொழிகளே இந்நாவலில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இந்நாவலின் மொழிநடையினைப் பற்றி எம்.எம்.எம். நூறுல் ஹக்
“நட்டுமை என்ற தலைப்பு தொடக்கம் இந்நாவலின் பாத்திரங்களின் உரையாடல் முறை வரை தென்கிழக்கு முஸ்லிம் மக்கள் பயன்படுத்தும் வழக்கு மொழி நடையில் கையாளப் பட்டிருப்பதுää இந்நாவலின் சிறப்புக்களில் பிரதான ஒரு விடயமாகும்”12
என்று கூறியுள்ளார்.
இந்நாவலில் வௌ;வேறு பாத்திரங்களினூடாகää வௌ;வேறு வகையான மொழி நடையினை நாவலாசிரியர் கையாண்டுள்ளார். நாவலுக்கு இத்தகைய மொழி நடை ஒரு புதிய வலுவைக் கொடுத்திருக்கிறது. எளிமையான மொழி நடையினை இடத்திற்கேற்றாற் போல பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடிக்குறிப்புக்கள்.
01. நௌஸாத்ääஆர்ääஎம்.ää(2009)ää நட்டுமைää ப.125
02. மேலதுää ப.29
03. மேலதுää ப.147
04. மேலதுää ப.148
05. மேலதுää ப.17ää18
06. மேலதுää ப.76
07. மேலதுää ப.18
08. நூறுல் ஹக்ääஎம்ääஎம்ääஎம்.ää(2010.12.15)ää‘எங்கள் தேசம்’ää ப.21
09.நௌஸாத்ääஆர்ääஎம்.ää(2009)ää நட்டுமைää ப.65
10. மேலதுää ப.97
11. மேலதுää ப.58ää59
12. நூறுல் ஹக்ääஎம்ääஎம்ääஎம்.ää (2010.10.14)ääதீரன் ஆர்.எம்.நெஸாத்தின் ‘நட்டுமை’ கடந்த
காலத்தின் நிழல் பிரதி’ ஞாயிறு தினக்குரல்ää ப.31
No comments:
Post a Comment