Wednesday, July 15, 2015

ஏ.எம்.எம். ஜாபீர்.


கிராமிய அலைகளால் இரையும் கடல் - 
நட்டுமை.(நாவல்)

ஏ.எம்.எம். ஜாபீர்.(பி.ஏ.)

0


                 தமிழ்நாடு காலச்சுவடு அறக்கட்டளை சார்பாக நடத்தப்பெற்ற அமரர் சுந்தர ராமசாமி 75 இலக்கியப் போட்டிகளிpல் நாவல் துறைக்கான போட்டியில் பங்கு கொண்ட பதினேழு நாவல்களில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட மூன்று நாவல்களினதும் விபரங்கள் பின்வருமாறு..(காலச் சுவடு இதழ் 1



                                   மூன்று நடுவர்களின் தேர்வுகள்;

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 நாவல்கள்                  நூலாசிரியர்                   அ. ராமசாமி          ந.முருகேச           கோபால            மொத்தப்
                                                                                                                      பாண்டியன்           கிருஸ்ணன்  (புள்ளிகள் 30)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

01. நட்டுமை      ஆர்.எம். நௌஸாத்                              06                   08                           09 30:23
                                  (இலங்கை) 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
02. மாண்புமிகு    அ. முகம்மது முஸ்தபா
    சம்பந்தம்          (தமிழ்நாடு) 07.5                  06                          06 30:19.5
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

03. பழையன          பழமண்
    கழிதலும்.....       (தமிழ்நாடு) 05                    05                           07 30:17

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கிழக்கிலங்கை கிராமத்தில் தற்போதிருக்கும் முஸ்லிம் சமூக அமைப்புக்கும் 1930 களில் காணப்பட்ட சமூக அமைப்புக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஏற்பட்டிருக்கும்  மாற்றத்தைக் குறிப்பாக்கிக் காட்டுகின்றது நட்டுமை.


தீரன். ஆர்.எம். நௌஸாத் அவர்களின் இந்நாவல்ää காலச்சுவடு நடத்திய அமரர் சுந்தர ராமசாமி 75 நாவல் போட்டியில் முதல்; பரிசு பெற்றதாகும்.  தமிழ் பேசுவோரிடையே உலகளாவிய ரீதியாக நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இலங்கையர் என்ற வகையில் நாம் எல்லோரும் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். 2000ம் ஆண்டு இவரது ~வல்லமை தாராயோ|  சிறுகதைத் தொகுதி கல்முனை புகவம் அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்தது. மேலும்ää ~பள்ளிமுனைக் கிராமத்தின் கதை| (2003) முஸ்லிம் குரல் வாரமலரிலும்ää ~வானவில்லிலே ஒரு கவிதை கேளு...!| (2005) ஈழநாதம் வாராந்தரியிலும்ää ~ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது| (2009) விடிவெள்ளி வார இதழிலும் தொடர்களாக வெளிவந்துள்ளன. ~நட்டுமை| நூலுருவில் வந்த இவரது முதல் நாவலாகும்.

1996 ல் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகம் அகில இலங்கை ரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் ~மலர்வு 74ää உதிர்வு 92|  என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றும்ää பிரான்ஸ் தமிழ் வானொலியும் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடத்திய அகில உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| (1999) நாடகத்திற்கு மூன்றாம் பரிசுää இலங்கை கலாசார அலுவல்கள் அமைச்சு நடத்திய அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் ~மே மாதம் முதற் பூ| (2007) குறுநாவலுக்கு முதற் பரிசுää ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் ~தாய்மொழி| (2008) சிறுகதைக்கு முதல் பரிசுää தமிழ்நாடு ஆழி பதிப்பகமும் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் ~சாகும்தலம்| (2008) கதைக்காகச் சிறப்பு ஆறுதல் பரிசும் பெற்றுள்ளார். இவ்வாறு இவர் எழுதிய அனேக கதைகள் விருதுகளைப் பெற்றமையிலிருந்து இவரது எழுத்தாளுமை புரிந்து கொள்ளப்படுகிறது.

கிழக்கிலங்கையின் ஒரு கிராமத்திலää; விவசாய நிலங்களுங்களுக்கிடையில் நிகழும் நீர்ப்பாய்ச்சல்  பிரச்சினையை பின்புலமாகக் கொண்டு அதனூடே ஒரு முக்கோண காதல் கதையும்ää ஒரு களவொழுக்கமும்  ~நட்டுமை|யில் சரித்திரச் சித்திரமாக்கப்பட்டுள்ளது. ~வயலுக்குள் நட்டுமை போயிருக்கு ....! என்றுää ~நட்டுமை| என்ற சொல்லைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மட்டுமே புரியக் கூடியதும்ää வழக்கொழிந்து வருவதுமான இத் தமிழ்ச் சொல்லைத் தனியாகப் பிரித்து நோக்கும் போது அதன் பொருளை பல்வகைமைக்குள் சிந்திக்கும் நிலை தோன்றுகின்றது. இவ் நாவலின் மூலம் நட்டுமை என்ற அந்தச் சொல் மீண்டும் உயிர் பெறுகிறது.  நட்டுமை என்பது வயல்களில் தேக்கிவைத்திருக்கும் நீரää; திருட்டுத் தனமாக வரம்புகளில் ஏற்படும் பிளவுகளினால் வோறொரு வரவைக்குள் வடிந்து விடுவதைக் குறிக்கும்.  யாரும் வடித்து விடாமலேயே நீர் தானாகää களவாக வடிந்துவிடுவதையும் குறிக்கின்றது. இச் சொல்  தவறான உறவுக்கும்  உவமையாகப் பாவிக்கப்படுகிறது.  இந் நாவலை வாசிக்கும் போது காதலுக்கும் நட்டுமை என்ற கருப் பொருள் பொருந்துவதையும் உணரலாம்.  ஏனனில் காதல் உணர்வு நிலையானது தன்னுணர்வற்ற நிலையில் அது எப்பக்கமாகவாவது வடிந்து விடுவதுண்டு. இதற்கு உதாரணமாக

~~ உமறுலெவ்வைக்குள் பரவசம் பொங்கிச் சீறியது. மனதிலிருந்த வஞ்சினங்கள் அனைத்தும் பனியாகிப் போயொழியää எண்ணம் முழுவதும் செய்னம்புவின் எண்ணங்களால் நிறைந்தது|| (பக்கம் 65)  என்றுää களவாக மனவரவைக்குள் காதல் கசிந்து இறங்கி விடுவதை ஆசிரியர் சித்தரிக்கிறார். உறுலெவ்வை வஞ்சினத்தை அணைபோட்டு வைத்திருந்தான். ஆயின் செய்னம்புவை கண்டதும் அவனையறியாமல் வஞ்சினம் வடிந்தோடி விட்டது. என்றும்  வௌ;வேறு நிலைகளுக்குப் பொருத்தமாகவும் நாவலின் தலைப்புக்கு இச் சொல் நடப்பட்டுள்ளது. தவிரää நாவலின் கதைக்களம் நெடுகிலும் நட்டுமை கசிகிறது.மேலும் கதைக்குள் கதையாக பீர்முகம்மது அண்ணாவியார்ää முக்குலத்துக் கிழவியின 1850 களின் பழங்காதல் நினைவுகளும்ää உமறுலெவ்வையின் தாயின் களவொழுக்கமும் கூட வௌ;வேறு நிலைகளுக்கும் பொருத்தமாக இயைந்து வந்துள்ளது.

நாவல் என்பது வெறும் கற்பனையை மாத்திரம் வடித்துவிடுவதல்ல @ அது ஓர் ஆய்வு! என்பதை நட்டுமை நாவல் நமக்குப் புரிய வைக்கிறது. இத் தன்மை நாவலின் ஒவ்வொரு அத்தியாயங்களுக்கு பெயரிடுவதிலிருந்தே  தொடங்கிவிடுகின்றது.  ஒவ்வொரு போகத்திற்குள்ளும் நெல்லின் பருவ நிலைகள் தலைப்புகளாக நிரல்படுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு முஸ்லிம் மக்களின் பண்பாடுää வாழ்வியல் முறைää நம்பிக்கைகள்ää திருமணச் சடங்குகள்ää கொடியேற்று விழாää பொல்லடி என்ற அம்சங்கள் அனைத்திலும் நுனித்து நோக்கும்  இத் தன்மை காணப்படுவதை  இந் நாவலை வாசிப்பதனூடாக வாசகர்கள் புரிந்து கொள்வர். இவ்வாறு எதையும் நுண்மையாக நோக்கும் பார்வை நாவலாசிரியரிடம் இயல்பாகவே உண்டு என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. அக்கால முஸ்லிம்களின் கலாசார பன்முக அம்சங்களின் சில பகுதிகளை நட்டுமையில் நாம்  தரிசிக்க முடிவதுடன் அவ் நிகழ்வுகள் தற்போதைய மின்னியல் தலைமுறையினருக்கு கிடைக்கப் போவதில்லையே என்ற ஏக்கத்தினையும் ஏற்படுத்துகின்றது. மேலும் அருகிவரும் கலையான பொல்லடி என்னும் கோலாட்டம் அதன் வகைகள் கீச்சான் போர்ää தேன் கூடுää ஒத்தமல்லி போன்றவற்றை ஆசிரியர் மிக இரசனையோடு சித்தரிப்பதோடு இவ் வகையான ஒரு கலைவாழ்க்கைக்கு உயிர் கொடுத்துள்ளார் என்றே கூறலாம்.

கதைகளில் காதலை எவ்வாறுää எந்நிலையில் வெளிப்படுத்துவது என கதையாசிரியர்கள் சிந்திப்பதுண்டு. நட்டுமையில்  இவ் வெளிப்பாட்டு முறையானது   கிராமிய வாசத்தோடு மிகவும் செல்லமாகää வித்தியாசமான முறையில் இயல்பாக வெளிப்படுத்தப்படுகின்றது.

~~செய்னம்புää சட்டென ஒரு அசாத்திய துணிவில் முதுகிலிருந்து வெளிப்பட்டுää உமறுலெவ்வையின் கையிலிருந்தவற்றை ~வெடுக்|கெனச் சொட்டிப் பறித்துக் கொண்டுää அதே விநாடியில் அவனது கையில் தன் கூர்மையான மருதோன்றிச் சிவப்பு நகத்தால் ஊன்றிக் கிள்ளியும் விட்டாள்ää தன் ஒரு வருடப் பழிவாங்கலையும்ää தன் சம்மதத்தையும் தெரிவித்தாள்;. மறு கணமேää மறுபடி யம்னாவின் முதுகில் மறைந்தாள்||

~ஷ்.. ஷாப்பா....ஹ்| அலறினான் உமறுலெவ்வை. கிள்ளிய இடம் எரிச்சலுடன் இனித்தது. கிளுக்கெனச் சிரித்த செய்னம்பு யம்னாவின் முதுகில் பிடித்து இழுத்தாள்.

~~அதான் ... அதான். சாக்கி... செரியா? ~ஆக்களுக்கு| நோகுதா? யம்னாத்தா வாக்கா போவம்.|

~என்டப்போ... எரத்தம் வெருது. யம்னாத்தா பாருää இதுக்கு நெல்ல பதுல் தருவன்... கிட்டடியில்.|

உமறுலெவ்வையின் வசனத்தின் பொருள் புரிந்து ~அஸ்ஸிலே...ய்| என நாணச் சினுங்கல் கேட்டது.
(பக்கம் 66ää67)
இவ்வாறான கிராமியச் சொல் அலைகளால் ஒவ்வொரு பக்கத்திலும் மனதை நனைக்கிறது நட்டுமை.

நட்டுமையின் கதையோட்டத்தில் கையாளப்பட்டிருக்கும்ää தற்போது பாவனை ஒழிந்து விட்ட பல் வகையான கிராமியப் பயன்பாட்டுப் பொருட்கள்ää விளையாட்டுப் பொருட்கள்ää பண்டங்கள்ää பாத்திரங்கள்ää உடுபிடவைகள்ää ஆபரணங்கள்ää உணவு வகைகள் என்பவற்றை ஆசிரியர் ஆராய்ந்து வெளிக்கொணர்ந்திருப்பதானது ஒரு புதையலை தோண்டியெடுத்த உணர்வலைகளை நம் மனதில் பதித்து விடுகிறது. நாவலாசிரியரின் படைப்புத் திறனின் மீதான கடின உழைப்பு அதில் வெளிப்படுகிறது.

நட்டுமை நாவலில் உருவாக்கப்பட்டுள்ள பாத்திர வார்ப்புக்கள் பற்றி தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். பெரியபோடியார்ää சிpன்னப்போடியார் முகம்மதனிபா. மம்மலிää மீராவட்டானை.. பீர்முகம்மது அண்ணாவியார்.. செய்னம்பு.. யம்னா..முக்குலத்துக் கிழவி.. போன்ற யதார்த்தப்பாங்கிலான பாத்திரங்கள்  இயல்பாக உரையாடி நாவல் வாசித்து முடிந்த பின்னரும் நம்மோடு வாழ்கின்றனர். மகான் அத்தர்பாவா அவர்களின் பாத்திர வார்ப்பு  முஸ்லிம்களின் இலக்கியப்புனைவுகள் எவற்றிலும் இதற்கு முன் இத்தனை அற்புதமாக வர்hக்கப்படவில்லை எனத் துணிந்து கூறலாம்.

மொத்தத்தில் நட்டுமைää கிராமிய மணத்தை மனசில் எழுப்பும் எழுத்து மழை மட்டுமல்ல அது கிராமிய அலைகளால் இரையும் நாவல்க் கடல்.! காலத்தால் பேசப்படும் இந் நாவலைத் தந்த தீரன் ஆர்.எம். நௌஸாத் நாவலாசிரியருக்கு நமது பாராட்டுக்கள்
ஏ.எம்.எம். ஜாபீர்.(பி.ஏ.)

No comments:

Post a Comment