Tuesday, July 14, 2015

ஷோபாஷக்தி





விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், புயலிலே ஒரு தோணி, ஒரு புளிய மரத்தின் கதை, மோகமுள், பொய்த்தேவு, ஜெ. ஜெ. சில குறிப்புகள், தலைமுறைகள், கிருஷ்ணப் பருந்து, மானுடம் வெல்லும்... இது ஜெயமோகன் தமிழில் சிறந்த நாவல்களாகக் கருதும் பட்டியல். நீங்கள் இவ்வாறு ஒரு பட்டியல் போட்டால் எப்படி இருக்கும். தைரியமாகப் போடுங்க பிரதர்.

மலர்நாதன், சென்னை.

இந்தப் பட்டியலுடன் பெருத்த முரண்பாடில்லை. நான் பட்டியலிட்டால் விஷ்ணுபுரமும், ஜே.ஜே: சில குறிப்புகளும் பட்டியலில் இருக்காது. வெக்கையும், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகமும், காவல் கோட்டமும் பட்டியலில் சேர்ந்துகொள்ளும். எஸ். பொவும், கே. டானியலும் கண்டிப்பாக அந்தப் பட்டியலில் இருப்பார்கள். ஒரு மாறுதலுக்காக நான் எனக்குப் பிடித்த ஈழத்து நாவல்களைப் பட்டியலிடுகிறேனே.


சடங்கு - எஸ்.பொ.

கோவிந்தன் - கே. டானியல்

ஒரு தனிவீடு - மு. தளையசிங்கம்

நிலக்கிளி - பாலமனோகரன்

வாடைக்காற்று - செங்கை ஆழியான்

சுமைகள் -தாமரைச்செல்வி

குருதிமலை - தி.ஞானசேகரன்

புதியதோர் உலகம் - கோவிந்தன்

நட்டுமை - ஆர்.எம்.நெளசாத்

செக்குமாடு - வ.அய்.ச.ஜெயபாலன்

No comments:

Post a Comment