Saturday, July 25, 2015

நட்டுமை--ஆய்வுக் கட்டுரை---இயல் - மூன்று

கிழக்கு முஸ்லிம்களின்  பாரம்பரிய வாழ்வியலைத்
தெளிவுறுத்தும்  நட்டுமை நாவல்-
சமுகவியலடிப்படையான விமர்சன நோக்கு-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் சிறப்புக்கலைமானிப் பட்டத்தினது இறுதியாண்டுப் பரிட்சையின்  ஒரு பகுதியினை புர்த்திசெய்யும் முகமாக சமர்;பபிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. 2008-2009-

ஏ.எல். முஹமட் அஸ்மத்.

துமிழ்ப்பிரிவு. மொழித்துறை கலைகலாசார பீடம்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒலுவில்.2014


இயல் - மூன்று



மூன்றாவது இயல்

3.0 கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதில் நட்டுமை
 நாவலின் பங்கு.
3.1 தொழில்
3.2 நம்பிக்கைகள்
3.3 உணவு
3.4 உடை
3.5 வீடு
3.6 திருமணம்
3.7 பழக்கவழக்கங்கள்
3.0 கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதில் நட்டுமை 
நாவலின் பங்கு. 


3.1 தொழில்

      கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரியத்தொழிலான விவசாயம் இந்நாவலின் முக்கிய அம்சமாக காணப்படுகிறது. இவ்விவசாயத்தினை வைத்துக்கொண்டு நாவலின் கதை நகர்த்தப்பட்டுள்ளது. வுpவசாயத்தை வைத்தே பிரச்சினைகளும் எழுகின்றன. 

      நாவலின் ஆரம்பமாக பெரிய போடியாரான அகமதுலெவ்வை போடியார் தனது  ஒரே ஒரு ஆண்  வாரிசான மகன் முகம்மது அனிபாவுக்குää தனது 92 ஏக்கர் நிலத்தினை நன்கொடையாக வழங்குவதாக நொத்தாசியார் ஞானமுத்தினுடைய கூற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

“…….இத்தால சகலருமறிக. இன்று ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தியாறாம் வருடம் புரட்டாதி மாதம் 5 ம் திகதி வியாழக்கிழமையன்று வாசிக்கும் நன்கொடை உறுதி…..”1

      கிழக்கு முஸ்லிம்களில் பெரும்பாலானோர் விவசாயத்தினேயே பிரதான  தொழிலாக கொண்டுள்ளனர். விவசாயத்துடன் தொடர்புடைய சில பேச்சுவழக்கு சொற்களை பின்வருமாறு நோக்குவோம்

போடி -  நில உடமையாளர்கள்;;;;;;ää நிலத்தையும் பணத்தையும் மூலதனமாகக் கொண்டவர்கள்;ää உடலுழைப்புடன் நேரடியாக சம்மந்தப்படாதவர்கள். இவர்கள் ‘போடியார்’ என மரியாதையாக அழைக்கப்பட்டனர்;
வயற்காறன்-  போடியார் நிலத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவன். இவர்கள் போடியாரின் பண மூலதனத்துடன் தனது உடலுழைப்பினைச் செலுத்தி   பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்.
கூலி விவசாயிகள் -  உழுதல்ääவிதைத்தல்ääஅறுவடைசெய்தல்ää சு10டடித்தல் முதலிய வேலைகளை இவர்களே செய்வர். இவர்களின் கூலி நெல்லாகவோ அல்லது பணமாகவோ கிடைக்கும்.
முல்லைக்காரன் - வயற்காரனை விட போடியாரின் வயலை மேற்பார்வை செய்பவன். பெரிய போடிமார் தமக்கென ஒரு முல்லைக்காரனைக்கொண்டிருப்பர்.
கண்டம்ääவெளிவட்டை -  பலருடைய வயல்களை உள்ளடக்கிய ஒரு வயற்பிரதேசம்
வட்டைவிதானை -  ஒவ்வொரு வயற்பிரதேசத்தின் நீர்ப்பாய்ச்சல்ääபாதுகாப்பு நிருவாகத்துக்கு பொறுப்பாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பேச்சு வழக்கில் இவர் ‘வட்டானை’ என அழக்கப்பட்டார்.
விதானை– காலணித்துவ காலத்தில் அறிமுகமான சொல். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரியே விதானை என அழைக்கப்பட்டார். பிரித்தானிய ஆட்சியாளர்கள்ää சில விதானைமாருக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கியிருந்தனர்.
இவர்கள் ‘பொலிஸ் விதானை’ என அழைக்கப்பட்டனர். இது பேச்சு வழக்கில் ‘பொலிசானை’ என மாறிற்று.

இந்நாவலில் பிரதான இரண்டு வட்டைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் பெரிய      வெளிவட்டைää மழுவன் கண்டவட்டை ஆகியவை காணப்படுகின்றன. இவ்வட்டைக்கான நீர் பயனியன் அணைக்கட்டில் இருந்தே பெறப்படுகிறது. இந்த இரு வட்டைக்கும் ‘வட்டானை’யாக மீராவட்டானை காணப்படுகிறார். பெரிய வெளிப்பிரதேசத்தில் பெரிய போடியாரின் மகன் முகம்மது அனிபாவாகிய சின்னப்போடியாருக்குää 92 ஏக்கர் காணியும் மழுவன்கண்டத்தில் 10 ஏக்கர் காணியும் உள்ளது. மழுவன் கண்டத்தில் 5ää10 ஏக்கர்களை உடமையாக் கொண்ட சிறு போடிமார்களும் குத்தகைக்காரர்களும் விவசாயத்தினை மேற்க்கொள்கின்றனர்.

    கோடை காலத்தில் மழை இல்லாத காரணத்தினால் வழமை போல் நீர்ப்பிரச்சினை ஏற்படுகிறது.வழமை போல் பெரிய வெளிக்கு நீரினை முதலில் பாய்ச்சிவிட்டு பிறகு மழுவன் கண்டத்திற்கு பாய்ச்சுவோம் என்று கூறிய மீராவட்டானையிடம்ää மழுவன் கண்ட விவசாயிகள் மீராவட்டானையின் இறந்து போன ஒரே தங்கையின் மகன்ää உமறுலெவ்வையின் தலைமையில் அவருடன் பேசவந்தனர். இதற்கான தீர்வினை பெரிய போடியாரின் கூற்றில் இருந்த அறியலாம்.
“எல்லாரும் நல்லாக் கேட்டுக்கங்க……தண்ணி வெசயத்துல ரெண்ட சாராரும் இப்படி எணங்கியிருக்காக ஒண்டு மீராவட்டனையை மழுவன் கண்டத்து வட்டவிதானை வேலையிலிருந்து நீக்கி புது ஆள் வெய்க்கிறääரெண்டாவது வழம போல பெரிய வெளிக்கித்தான் மொதல்ல நீர்ப்பாய்ச்சல் செய்யுற  செரியா?”2
     இந்நாவலில் விவசாயம்ää விவசாயத்தினால் வரும் நீர்ப்பிரச்சினைகள்ää ஒவ்வொரு வட்டைக்கும் பொறுப்பான வட்டானைää விவசாயிகள்ää கூலிவிவசாயிகள்ääபோடிமார்;ää போடிமாரின் வீட்டில் விவசாயிகளின் மனைவியர் வேலைகளைச் செய்தல் முதலான அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

      1930 களில் இந்நிலமைகள் காணப்பட்டாலும் தற்காலத்தில் இந்நிலமைகளில் பாரிய மாற்றங்கள் காணப்படுகின்றன. ‘போடிமார்’என்ற பிரிவினர் தற்காலத்தில் காணப்பட்டாலும் அகமது லெவ்வை என்ற போடியார் போன்ற போடியாரை காண்பது மிகவும் அரிது. விவசாயிகளின் மனைவியர் இன்று போடியார் வீட்டில் வேலை செய்வது என்ற வழக்கம் ஒழிந்து விட்டது. கூலிவிவசாயிகள்ää வட்டானை ஆகிய அம்சங்கள் காணப்பட்டாலும் அன்று போலல்லாமல் இன்று பல மாற்றங்களை தாங்கியுள்ளது.

3.2  நம்பிக்கைகள்.

   ஆரம்ப காலங்களில் கிழக்கு முஸ்லிம்களிடையே பல நம்பிக்கைகள் காணப்பட்டன. அவைகளை இன்று சிந்திக்கும் போது மூடநம்பிக்கைகளாக தெரிகின்றன. சில நம்பிக்கைகள் கதையோட்டத்தின் இடையிடையே பேசப்பட்டும் வந்துள்ளன.

“இரண்டு வருடங்களுக்கு முன்னால் தாய்க்காரி கூழாவடிச்சந்தையில் உறையும் கரிபைரவன் பார்வ பட்டு திடீர் சுகவீனமுற்று காலச்சென்று விட்டதில் இருந்து செய்னம்பு தாயில்லாப்பெண்ணானாள்”3

எனும் ஆசிரியரின் கூற்றில் இருந்து மீராவட்டானையின் மனைவியின்  இறப்புக்கான காரணமாக அம்மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை தெளிவாகிறது.
   வலிமார் எனப்படும் இறை நேசர்களிடம் பிரார்த்தனை செய்வது மற்றும் அவர்களுடைய நினைவு நாட்களில் விழாக்கொண்டாடுவது கூட ஒரு நம்பிக்கையாக இருந்தது. இப்படியான விழாக்களைக் கொண்டாடுவதன் மூலமும்ää விழாவின் இறுதி நாள் மக்களுக்கு ‘நார்சா’ எனப்படும் அன்னதான நிகழ்வினூடாக வலிமார்களின் அருளைப்பெற முடியும் என்பது அக்கால மக்களின் நம்பிக்கை. இந்நாவலில் காட்டவ்லியாவின் கொடியேற்ற விழா குறிப்பிடப்   பட்டுள்ளது.

   இவ்விழாவின் போது பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப்பட்டும் மக்களின் ஆராவாரத்தினையும் பின்வரும் வருணனையில் இருந்து அறியலாம். 
“காட்டுப்பள்ளி கொடியேற்று விழா ஊரே புதிதாக பிறந்திருந்தது. புது உற்சாகமாக பூரித்து புத்தாடை அணிந்தது. காட்டுப்பள்ளி வாயல் முற்றமெங்கும் வெண்ணிறச்சேலை பந்தலிட்டுää சோடனைகளாக தென்னை குருத்தோலைகள் வழி நெடுக இழுக்கப்பட்டு இருந்தன. வலது பக்கத்தில் நடப்பட்டிருந்த நாற்பத்தெட்டடி உயர மினராக்கம்பத்தில் ஏற்றபட்டிருந்த நீளக்கொடி வேகக்காற்றில் படபடத்து ஆடியது…… சனக்கூட்டம் திமுதிமுத்தது. பெண்களுக்கு ஒதுக்கிய பிரத்தியேக இடம் காணாமற்போய் ஆண்கள்ääபெண்கள்ääசிறுவர்ääவாலிபர் என எல்லாம் கலந்து போய் சனங்கள் வேடிக்கை பார்ப்பதில் முண்டியடித்தனர்.”4

   இத்தகைய திருவிழாவின் இறுதி நாள் அன்று பொல்லடி நிகழ்வும் நடைபெறுவது வழக்கம். இந்நாவலில் பொத்துவில் பீர் முகம்மது அண்ணாவியாருடைய பொல்லடி வெகு சிறப்பாக நடைபெற்று மக்கள் அந்நிகழ்வில் தன்னையே மறந்து காணப்படுகின்றனர். இதனை ஆசிரியர் 
“எடுத்த எடுப்பிலேயே வசனக்கட்டு உச்சத்துக்குத்தாவ உற்சாகம் மீறிய பொல்லடி இளைஞர்கள் உச்ச வேகத்தில் சுழன்றடித்தனர்…… பார்வையாளர்களின் நரம்புகள் முறுக்கேறித் துடித்தன”5
என்று குறிப்பிடுகிறார்.

  அக்கால மக்கள் எதிர்காலம்ääதிருமணம்ääஅபிவிருத்தி முதலானää எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விடயங்களை அறிந்துகொள்ள மஹான்களிடம் செல்வர். இந்நாவலில் மஹான் “அத்தர்பாவா” எனும் மஹா தீர்க்கதரிசியினை முக்குலத்து கிழவியுடன் செய்னம்பு செல்வதிலிருந்து தெளிவாகிறது. பேய்ää பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகன் கூட அக்கால மக்களிடம் அதிகமாக காணப்பட்டது.

சின்னப்போடியார் முகம்மதுஅனிபாவும் அவனுடைய எடுபியான மம்லியும்  இறந்ததில் இருந்து அவர்கள் ஆவியாக அலைவதாகவும் முக்குலத்துக்கிழவியின்கதையில் இருந்து தெளிவாகிறது. இதற்காக வீட்டில் உள்ளவர்களையும்ää வீட்டையும் காவல் செய்ய நாக ப10சணிக்கோயில் வண்ணக்கரை தேடிச்சென்று அவரிடம் வேப்பிலைääமஞ்சள்ääகுங்குமச்சிலை முதலான பல பொருட்களை வீட்டில் வைத்து இருப்பதும் அவர்களுடைய நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

இந்த நம்பிக்கைகள் இன்று மூடநம்பிக்கையாக காணப்படுவது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் தவிர்க்கப்படவேண்டிய விடயமாகவும் உள்ளது. இத்தகைய நம்பிக்கைகள் தற்காலத்தில் மிக குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.


3.3 உணவு

கிழக்கு முஸ்லிம்களின் பிரதான பாரம்பரிய உணவுகளில் அரிசியே பிரதானமானது. அரிசியிலும் பல இனங்கள் காணப்படுகின்றன. பெருநெல்ää கருப்பன்ääசினட்டிää பச்சைப்பெருமான் ஆகியன பிரதான வகையாகும். வீட்டில் நெல்லை சேகரித்து வைக்கின்ற பழக்கம் அக்கால மக்களிடம் காணப்பட்டது.  இதற்காக கொட்டுää சாக்குப்பட்டறைääநிலஅட்டுவம்ääகால்அட்டுவங்களினூடாக நெல்லை சேகரித்தனர். 
“நெல் பற்றாக்குறை ஏற்படும் போது குரக்கன்ää சோளம்ää மரவள்ளிää வற்றாளைää கொட்டிக்கிழங்குääசுக்கட்டிக்கிழங்குää தாமரைக்கிழங்கு ஆகியனவும் உணவுப்பொருட்களாக இருந்தன. தொட்டம்ää முப்பனை (மொனராகல) ஹிங்குரான ஆகிய சிங்களப்பிரதேசங்களில்  உப தானிய பொருட்கள் பெறப்பட்டன. கலப்படமற்ற இவ்வுப தானியப் பொருட்கள் கறிää பிட்டுää கஞ்சி ஆகிய வடிவங்களில் பயன்படுத்தப்பட்டன. குரக்கன் கறியும் பனையான் மீன் கறியும் மிகப்  பிரசித்தமான உணவாகும்.”6

என்று அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எனும் நூலில் இருந்து கிழக்கு முஸ்லிம்களுடைய உணவுகளை அறிய முடிந்துள்ளது.

கறி என்ற கூறும் போது பெரும்பாலான வீடுகளில் ஒரு கறியே சமைப்பர். ஆணம்ää பாலாணம்ää சுண்டல்ää கடையல் என்ற பிரதான வகையாகும். வசதி படைத்தவர்களின் வீட்டில் இரண்டு கறிகளும் சமைக்கப்பட்டன. வரால்ää வாழைää கொக்கிச்சான்ää பனையான்ää குறட்டை முதலான நன்னீர் மீன்களும் மணலைää சள்ளல்ää கெளுத்திää இறால் முதலான களப்பு மீன்களும்ää கறி சமைக்க பயன்பட்டன.

   இத்தகைய மீனினங்களைப்பற்றி நட்டுமை நாவல் குறிப்பிட்டுள்ளது.

“சுற்றி சுழித்தோடும் பட்டிப்பளைக் கால்வாயின் தளும்…தளும்…பும் தாளலயம். கால்வாயில் ஓடிவந்து விளையாட்டுக்காட்டும் விரால்ää வாளைää கொக்கிச்சான்ää பனையான்ää குறட்டைää சுங்கான்ää கயல்ää செத்தல்ää பொட்டியான்ää கிழக்கன்ää செங்கணன்ää மணலைää சள்ளல்ää மாங்காய்ச்சள்ளல்ää கொய் முதலான பல்வகை மீன்களும்…”7
என்று கிராமத்திலுள்ள மீனினங்களையும் இந்நாவல் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

   கடல் மீன்பிடிப்புகள் அக்காலத்தில் மிகக்குறைவாகவே காணப்பட்டது. ஏனென்றால் அதற்கான வசதிகள் இன்று போல் அன்றில்லை. இன்று கடல் மீன் கறியே பிரதான மீன் கறியாகவும் காணப்படுகிறது. ஆனால் அன்று குளத்துää ஆற்று மீன்களே அதிகம் சமைக்கப்பட்டன. இறைச்சியை காடுகளில் வேட்டையாடி மிதமாகப்பெற்றனர். மான்ää மரைää காட்டுமாடுääஆகியவற்றில் இருந்து இறைச்சியை அளவுக்கு அதிகமாக பெற்றனர். பசுமாடுகள்ää ஆடுää கோழி என்பன உணவுக்காக அறுக்கப்பட்டன.

   மரக்கறி உணவுகளை உண்ணும் பழக்கம் மிக்குறைந்த அளவிலேயே இருந்தது. நாட்டு மரக்கறி வகைகளான கத்தரிää பயிற்றைää அவரைää முருங்கை ஆகியனவே பிரதான மரக்கறிகள்.  வள்ளல்ää பொன்னாங்கனிää முல்லைää திராய்ää முசுட்டைää முருங்கையிலை ஆகிய இலைக்கறிகளையும் உண்டனர். இந்த நட்டுமை நாவலில் கூட முருங்கையிலையினை செய்னம்பு பறிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

   வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை உபசரிக்க அக்காலத்தில் பலகாரங்களும் தேனீரும் பயன்படுத்தப் பட்டன. அகமது லெவ்வைப்போடியாரின் வீட்டுக்கு வந்தவர்களுக்கு “கோழிக்கால் அலங்காரப்பன்தட்டில் தேன் நிறம்பிய தேன் குழல்ää பொன்னெழுத்து வெள்ளித் தட்டில் கமகம எண்ணெய் மணத்துடன் பொன் நிறத்தில் பொரிக்கப்பட்ட மொறு மொறு ‘வாடா’ வந்தது. அதனைத்தொடர்ந்து தாராக்கால் கவடத்தில் பயிற்றம் துவையலுருண்டைகள் பெரிது பெரிதாக மாப்பதத்துடன் வந்தன.”8

முதலான பலகாரங்களை கொடுத்து உபசரித்தனர்.இத்தகைய உபசரிப்பு முறைகள் அக்கால முஸ்லிம் மக்களிடம் காணப் பட்டன.

   தேனீரை குவளைகளில் லவங்க வாசனை கமக்க சு10டான சாயத்தேனீரும் கருப்பெட்டியும் வீட்டுக்கு வந்தவர்களுக்கு கொடுப்பதனையும் இந்நாவலின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

   இந் நட்டுமை நாவலினூடாக அக்கால மக்களுடைய உணவுகள்ää வீட்டுக்கு வந்தவர்களுக்கு கொடுக்கும் பலகாரம் மற்றும் தேனீர் முதலானவற்றினை அறிந்து கொள்ளலாம். இத்தகையவற்றைக்  கொண்டு வீட்டுக்கு வருபவர்களை ஆதரிப்பது அக்கால முஸ்லிம்களின் பாரம்பரியமாக இருந்தது.


 3.4 உடை

கிழக்கு முஸ்லிம்களில் ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட தடித்த சாறன் அல்லது வெள்ளை நிற வேட்டி அணிந்து கொள்வர். அந்த சாறனை பெல்ட் எனும் பட்டியால் கட்டிக்கொள்வர். இந்த சாறன்களில் பல வகை காணப்படுகின்றன. சந்திரப்பட்டிää மருதமுனைச்சாறன்ää குட்டாப்பட்டுச்சாறன்( மாப்பிள்ளை அணியும் சாறன்) என்பன காணப்பட்டன. இவ்விதமான சாறன்களை சற்று உயர்த்தி உடுத்துக் கொள்வார்கள்;.

   ஆண்கள் எல்லோரும் சட்டை அணிந்ததாக கூற முடியாது. ஏனென்றால் உடம்பைச்சுற்றி சால்வையால் மூடுவது வழக்கமாக இருந்தது. நட்டுமை நாவலில் பெரிய போடியாரின் ஆடையினைப்பற்றி ஆசிரியர் 
“சிவப்பு பெரிய கண்டாங்கி சாறனுக்குள் பெரிய கை பெனியனை உள்விட்டு நாலங்குல அகலத்தில் மதராசு இடைப்பட்டி அணிந்திருந்தனர். மழிக்கப்பட்ட தலை மீது அணிந்திருந்த துருக்கித்தொப்பியின் உச்சத்தில் தங்க முலாம் மணிகள் ஆடின. கால்களில் சு10ரியமாரா மரத்தாலான மிதியடிகள்”9

என்று குறிப்பிடுவதில் அவர் அக்காலத்தில் அணிந்துள்ள ஆடையினையும் காலுக்கு மரத்தாலான மிதியடிகள் போடுவதனையும் அறிந்து கொள்ளலாம். 
பெண்கள் சிறு வயதில் இருந்து சேலை கட்ட தொடங்குவர். இவர்கள் தங்கள் முழு உடலையும் சேலையால் உடுத்து மூடி முக்காடு போட்டுக்கொள்வார்கள்;. காட்டவ்லியாவின் கொடியேற்ற விழாவின் போது தோன்றிய கடைகளில் பால்சோமன்ää கடுகுவண்ணச்சோமன்ää மருதமுட்டைச்சோமன்ää சந்திரபடிää பட்டுச்சோமன் முதலான சேலைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டதில் இருந்து அக்காலப்பெண்களின் சேலைவகைகளை அறிந்து கொள்ள முடியும்.

   இந்த சேலையை மட்டும் அணியும் பழக்கம் சிறிது காலம் மாற்றமடைந்து பாவாடை சட்டை முதலானவற்றையும் பெண்கள் அணிந்துள்ளதை நட்டுமை நாவல் தெளிவுபடுத்துகிறது. செய்னம்பு அணிந்திருந்த ஆடையினைää

“பச்சைப்பாவாடையையும் நீண்ட ஒரு சட்டையும் சிவப்புத்தாவணியால் தலை முழுவதும் போர்த்தியிருந்தாள்”10 என்று ஆசிரியர் கூறுவதில் இருந்து சேலைக்குப்பிறகு பாவாடைää சட்டை முதலான ஆடைகளையும் பெண்கள் அணிந்துள்ளனர் என்று தெளிவாகிறது.இவர்களின் ஆடையின் மூலம் கிழக்கு முஸ்லிம்களின் ஆடையினை அறிந்து கொள்ளலாம். 


3.5வீடு

ஆரம்பகாலங்களில் வீடுகள் களிமண்ணால் கட்டப்பட்டிருந்தன. இலுக்குääவைக்கோல்ääகிடுகுஆகியன கூரைகள் வேயப்பயன்பட்ன. வீடுகளில் இரண்டுஅல்லது மூன்றுஅறைகள் காணப்பட்டன. இவ்வறைகளில் “தென் பக்கத்துஅறை‘காப்பு’ அல்லது  ‘மஞ்சு’ என்றும் நடுஅறை‘உள்வீடு’ வடக்குஅறை‘ஆலவீடு’என்றும் பெயர் பெறும். வீட்டின் மேற்குப்   பக்கத்தில் அகலம் குறைந்தகோடித் திண்ணையும் மறைத்துஆனைக்கிடுகுஎன்ற இரட்டைக்கிடுகுகளாகத் தொங்கவிட்டிருப்பார்கள்”11 என்றும் பெயர் பெறும்.
இந்நாவலில் மம்மலியின் வீட்டின் அமைப்பானதுபின்வருமாறுகாணப்பட்டது
“ஆனைக் கிடுகுகளினால் வளைத்துஅடைக்கப்பட்டு இலுக்குப்புல் கூரைக்குவேயப்பட்டுதளப்பத்துமட்டைகளால் பலப்படுத்திபளபளகளிமண்ணினால் செப்பமிட்டதளத்துடன் இரண்டேஅறைகள்”12 ஏழைகளின் வீடுகள் இவ்வாறுகாணப்ட்டாலும் போடிமாரின் வீடுகள் கல் வீடுகளாகக் காணப்பட்டன. கல்வீடுகள் அக்காலத்தில் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.

“பெரியபோடியாரின் பெரியகல்  வீட்டின் முன் கூடத்தில்….”13எனும் கூற்றுஅதனைதெளிவுபடுத்தும். மேலும் போடிமாரின் வீடுகளின் திருமணம் முதலானவிசேடநிகழ்வின் போதுபயன்படுத்தப்படும் பாய்கள் ääவிளக்குளக்குகள் பற்றியெல்லாம் இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பெரியபோடியாரின் வீட்டில்ää
“பெட்டிகள்ää அடுக்குத் தட்டுகள்ää பிரமாண்டமானமரப்பெட்டகம்ää அதற்குமேலே அசவுகட்டிஅடுக்கப்பட்டிருந்ததோட்டுப் பாய்கள்ääசபைப்பாய்கள் ääமெத்தைப்பாய்கள்ää கீழே தரை முழுவதும் குத்துவிளக்குகள்ääகந்துவிளக்குகள்ääமயில் விளக்குகள்ääதூக்குவிளக்குகள்ääஇரட்டைத் தட்டுவிளக்குகள்ääஅலங்கரிக்கப்பட்டசேவரக்கால்ääஇரண்டு இரட்டைஆராத்திவிளக்குகள்ääபல்தரப்பட்டபடிக்கங்கள்”14 முதலானவை காணப்பட்டதாக  ‘யம்னா’வுடைய கூற்றில் இருந்துதெரிந்துகொள்ளலாம்.
களிமண் வீடுääகல் வீடுஆகியவைääஅக்கால முஸ்லிம் மக்களின் பாரம் பரியத்தினைதெளிவுபடுத்துகின்றனஎன்று கூறமுடியும்.

3.6  திருமணம்

திருமணமானதுääஅக்காலமக்களிடையேஒருவிழாவாகவேகாணப்பட்டது. போடிமார்களின் வீட்டுத்திருமணம் என்றால் பெரும் கலகலப்பாக இருக்கும். ஏழைகளின் வீட்டுத்திருமணமாக இருந்தால் சாதாரணமாகநடாத்தப்படும் என்றாலும் அதற்கானசிலசடங்குகள்ää பாரம்பரியங்களைசெய்தேநடாத்துவார்கள்.

நட்டுமைநாவலில் உமறுலெவ்வைக்கும் செயனம்புவுக்கும் நடைபெறும் திருமணத்தினுடாகஅவர்களுடையபாரம்பரியமுறைகளைஅறிந்துகொள்ளமுடியும். வீட்டின் முற்றத்தில் பந்தல் அமைத்தல்ääதென்னங் குருத்தோலைகளின் அலங்காரத் தோரணங்கள்ää வாழை மரத் தோரணத்துடன் தென்னம் பாளைஓன்றுபூரணமாகவிரிந்துசெம்புக் குடத்தில் ப10வரிசிரித்தது. பந்தலில் தோட்டுப்பாய்கள் விரிக்கப்பட்டுää சபைப் பாய்கள் விரிக்கப்பட்டுதிருமணவீடுஅலங்கரிக்கப்படடிருந்தது.

ஆல வீட்டிற்குள் நன்றாகஅலங்கரிக்கப்பட்ட சேவரக்கால் மணப்பெண் அமரவும்ää தாலிகட்டவும் தயார் படுத்தப்பட்டது. மணப்பெண்ணைச் சுற்றிச் சிறுமிகள்ääபெண்கள் கூட்டம் ‘குரவை’ ஒலியெழுப்பிஅமர்ந்திருந்தனர். மாப்பிள்ளை இரவுத் தொழுகைக்குப்பின்னரேமணப்பெண்ணின் வீட்டிற்குஅழைத்துவருவது வழக்கமாக இருந்தது. 

மாப்பிள்ளைக்கும்ää மணப்பெண்ணிற்கும் முதல் உணவாக கூவும் பருவச்சேவல் இறைச்சிக்கறியும்ää விரால் மீன் பொரியலும்ää வண்டுப்பிட்டும் அதி மணத்துடன் தயாராகின. வீட்டுக்குவருவோரைமீராவட்டனைää
“மகிழ்ச்சியுடன் புத்தம் புது இரட்டைமூட்டுச்சாரமும் கைபெனியனும் சீனப்பட்டுச்    சால்வையும் அணிந்துவருவோரைவரவேற்றுக்;கொண்டிருந்தார்”15என்பதில் திருமணத்திற்கு புத்தாடைஅணிந்துääவருவோரைவரவேற்கும் பழக்கம் அக்காலமக்களிடம் காணப்பட்டதனைஅறிந்துகொள்ளலாம்.

திருமணவீட்டில் இரவானதும் கடல் லாம்புகள்ääவாடகைக்குவாங்கவிடுகின்ற‘பெற்றோல் மெக்ஸ்’விளக்குகள்ää வீதி முழுவதும் கடல் லாம்புளைக் கொண்டுவெளிச்சத்ததைஏற்படுத்துகின்ற முறையும் காணப்பட்து. அக்காலத்தில் மின்சார வசதிகள் காணப்படவில்லை.
மாப்பிள்ளை கூட்டிவரும் போதுääபட்டாசுகள் வெடிப்பதுமää; பறையர்கள் தவில்ääநாதஸ்வரம் முதலானகருவிகளினூடாக ஒலியெழுப்புவதும்ääபெண்கள் ‘குரவை’ஒலியெழுப்புவதும்ää பக்கீர் வாவாக்களின் ‘வையத்து’ ஓதல்களும் இம்பெறும்.


3.7 பழக்கவழக்கங்கள்

   கிராம மக்களிடம்  சில பழக்கவழக்கங்கள் அவர்களின் உடம்போடு ஒட்டியது போன்று காணப்படுகின்றன. இந்நட்டுமை நாவலில் கூட கிழக்கு முஸ்லிம் கிராம மக்களுடைய பழக்கவழக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. 

  ஆண்கள் எபபோதும் பீடி அல்லது சுருட்டினை புகைக்ககூடியவர்களாகவும் காணப்படுவர். இந்நாவலில் உள்ள பெரிய போடியாரின் வாயில் “ஜேர்மன்சுருட்டு சொருகப்பட்டு இடைவிடாது புகைந்து கொண்டிருந்தது”17 எனும் கூற்று அதனை தெளிவுபடுத்தும். பெண்கள் வெற்றிலைää பாக்கு போடுபவர்களாகவும் காணப்பட்டனர். 

  கிராமப்புறங்களில் ஏதாவது ஒரு செய்தியினை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்றால் பறையடித்துக் கூறுவது வழக்கம். இத்தகைய பறையை அடிக்க கிராமத்தால் ஒருவன் நியமிக்கப்பட்டிருப்பான். பெண்கள் தன் தலைமுடியில் சிக்கு எடுப்பதற்கும்ää பேன் போன்றவற்றையும் எடுப்பதற்கும்ää மாலை நேரங்களில் தமக்கு தெரிந்த பெண்ணுடன் சொல்லி ‘தலைபார்த்தல்’ எனும் வேலையை செய்வார்கள். இதன் போது ‘மாட்டுக்கொம்பு’ சீப்புää தேங்காய்எண்ணெய் முதலானவற்றையெல்லாம் பயன்படுத்துவர். இந்த நாவலில் செய்னம்புக்கு யம்னாääதலை பார்க்கின்றாள். இத்தகைய பழக்கவழக்கங்களையும் கிராம மக்கள் கொண்டுள்ளனர்.

   மக்கள் எங்கு செல்வதாக இருந்தாலும் அவர்கள் நடையாக அல்லது மாட்டுவண்டியில் செல்வர். இந்நாவலில் சின்னப்போடியார் விற்கரத்தையில் செல்வதை பின்வரும் கூற்று தெளிவுபடுத்துகிறது.  “ஒரே தாவலில் விற்கரத்தை மீதேறி எடுபிடி மம்லியும் பாய்ந்தேறி…”18

கிராமத்தில் ஏதாவது ஒன்று கூடல் இடம் பெறுவதென்றால் பெரியபோடியாரின்  வீட்டில் நடைபெறுவதும்ää அங்கு பெரிய போடியாரின் பேச்சுக்கு அனைவரும் கட்டுப்படக் கூடியவர்களாகவும் காணப்பட்டனர். இத்தரகய கட்டுப்படும் தன்மை கிராம மக்களிடம் காணலாம். ஆண் பிள்ளைகளுக்கு நடத்தப்படும்‘விருத்தசேதன’ நிகழ்வில் ஆண்கள்ää பெண்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கின்ற பண்பும் கிராம மக்களிடம் காணப்பட்டது. இதனை பின்வரும் கூற்று தெளிவுபடுத்தும் “அவவும் ஒங்கட பொஞ்சாதி மைமுனா லாத்தாவும் மம்மாக்காண்ட மகன்ட ‘ஸின்னத்து’ ஊட்ட போறாக”19

    வீட்டுக்கு வருபவர்களுக்கு சு10டான தேனீர் பரிமாறுவதும்ää இல்லாவிட்டால் இளநீருடன் அதன் பருக்கைகளையும் இட்டு அதில் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சீனியையும் கலந்து கொடுப்பதும் வழக்கமாக இருந்தது. செய்னம்பு வீட்டுக்கு வந்த மம்மாலிக் காக்காவுக்கு தேனீர் கொடுப்பதை பின்வரும் கூற்று தெளிவுபடுத்தும்.“நீரைக் கொதிக்க வைத்தாள்ää எலுமிச்சை இலைத்துளிர்களை அதில் போட்டாள்….. வாசம் கமகமத்தது. வெள்ளிக்கேத்தலில் நிறையச்சாயம் விட்டு ஊற்றினாள் கருப்பட்டிக் கட்டி ஒன்று கையிலெடுத்தாள்.”20

       இந்த நாவலினூடாக அக்கால கிழக்கு முஸ்லிம் கிராம மக்களுடைய பழக்கவழக்கங்கள்ää அவர்களின் உபசரிப்பு முறைää தலைமைக்கு கட்டுப்படும் விதம்ää விழாக்களுக்கு சென்று அதனை சிறப்பிக்கின்ற தன்மை முதலானவற்றை  அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.


அடிக்குறிப்புக்கள்.
01. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 17
02. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 51
03. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 29
04. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 56
05. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 97
06. ஜெமீல் எஸ். எச். எம்.ää (ஜுலைää 1997)ää அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள்ää ப. 164
07. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 45
08. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 21
09. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 17
10. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 23
11. ஜெமீல் எஸ். எச். எம்.ää (ஜுலை 1997)ää அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள்ää ப. 167
12. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 44
13. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 17
14. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 50
15. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 140
16. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 142
17. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 18
18. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 22
19. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 30
20. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 31

No comments:

Post a Comment