Saturday, July 25, 2015

நட்டுமை-- ஆய்வுக் கட்டுரை--.இயல் - ஒன்று - ஏ.எல். முஹமட் அஸ்மத்

கிழக்கு முஸ்லிம்களின்  பாரம்பரிய வாழ்வியலைத் 
தெளிவுறுத்தும்  நட்டுமை நாவல்-
சமுகவியலடிப்படையான விமர்சன நோக்கு-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் சிறப்புக்கலைமானிப் பட்டத்தினது இறுதியாண்டுப் பரிட்சையின்  ஒரு பகுதியினை புர்த்திசெய்யும் முகமாக சமர்;பபிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. 2008-2009- 

ஏ.எல். முஹமட் அஸ்மத். 
தமிழ்ப்பிரிவு. மொழித்துறை கலைகலாசார பீடம். 
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம். 
ஒலுவில்.2014


இயல் - ஒன்று

இயல் - ஒன்று

1.0  அறிமுகம்.
1.1 நாவல்.
1.2 தமிழில் நாவலின் தோற்றம்.
1.3 ஈழத்தில் தமிழ் நாவல்களின் தோற்றம்.
1.3.1 ஈழத்தின் ஆரம்பகாலதமிழ் நாவல் முயற்சிகள்.
1.3.2 1920 - 1940 காலப்பகுதியில் ஈழத்து தமிழ் நாவல்கள் 
1.3.3 1940 - 1960 காலப்பகுதியில் ஈழத்து தமிழ் நாவல்கள்
1.3.4 1960 - 1980 காலப்பகுதியில் ஈழத்து தமிழ் நாவல்கள்
1.3.5 1980 - இற்றைவரை ஈழத்து தமிழ் நாவல்கள்
1.3.6
1.4 அம்பாறைமாவட்டத்தில் தமிழ் நாவல்களின் தோற்றம்.
1.4.1 1970 – 1990 காலப்பகுதியில் அம்பாறைமாவட்டதமிழ் நாவல்கள்.
1.4.2 1990 – 2010 காலப்பகுதியில் அம்பாறைமாவட்டதமிழ் நாவல்கள்.
1.4.3 2010 - இற்றைவரைக்குமான காலப் பகுதியில் அம்பாறை மாவட்ட தமிழ் நாவல்கள்.

அறிமுகம்.

1.1 நாவல்.

“‘நாவல்’ என்னும் ஆங்கிலச் சொல் நவீனம்ää  நவீனகம் எனத் தமிழில் மொழி பெயர்க்கப் பெற்றது. நாவல் என்ற சொல் புதுமை என்ற பொருள் தருவதால் ‘புதினம்’ என்று கூறும் வழக்கம் உருவானது. ஆனால் தற்போது நாவல் என்ற சொல் தமிழ்ச் சொல்லாகவே கருதப் பெறுகிறது.”1

நாவல் என்பது ஆங்கிலத்தில் ‘கiஉவழைn’ என அழைக்கப்படும். புனைகதை வகைகளில் ஒன்றாகும். அதாவது “ஆங்கிலத்தில் கiஉவழைn  என வழங்கப்படும் புனைகதையானது நாவல்ää சிறுகதைää குறுநாவல்ää குறுங்கதை என்கின்ற எல்லாவற்றையும் உள்ளடக்கும். நவீன புனைகதை வடிவத்தில் முதலில் தோன்றியது நாவலே”2என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய உலகின் தலையாய இலக்கிய வடிவமாக நாவல் விளங்குகின்றது. உலகின் வளர்ச்சியடைந்த மொழிகள் பலவற்றிலும் இன்று செல்வாக்குடன் திகழும் நாவல் இலக்கியத்தின் வரைவிலக்கணம் பற்றி நாவலாசிரியர்களும்ää திறனாய்வாளர்களும் வௌ;வேறு வகையில் குறிப்பிட்டுள்ளனர். நாவல் இலக்கியத்தின் வரைவிலக்கணம் பற்றி திட்டவட்டமானää தெளிவான வரையறை கொடுக்க இயலாமையே இதற்கு காரணம் எனலாம்.

“நாவலின் வரைவிலக்கணம் பற்றிய கருத்துக்கள் காலத்திற்குக் காலம்ää நாட்டுக்கு நாடு வௌ;வேறு ஆசிரியர்களிடையே மாறுபட்டும்ääவளர்ந்தும் வந்துள்ளன. பொதுப்படையாக நோக்கும் போது நடைமுறைவாழ்க்கையோடு ஒட்டியதாகவும்ää உண்மைக்குப் பொருந்துவதாகவும் உள்ள பாத்திரங்களையும் அவற்றினது பண்புகள்ää செயல்கள்ää உணர்ச்சி மோதல்கள் முதலியவற்றையும் நீண்ட கதை உருவில் இயல்பான முறையில் புனைந்துரைப்பதாக அமையும் வசன வடிவமே நாவல் எனலாம்.”3


1.2 தமிழில் நாவலின் தோற்றம்.


19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் ஏற்பட்ட ஆங்கிலேயரின் வருகையினால் ஏற்படுத்தப்பட்ட முதலாளித்துவப் பொருளாதார முறைää ஆங்கிலக் கல்வியின் அறிமுகம்ää நடுத்தர வர்க்கத்தின் தோற்றம்ää அச்சியந்திர வசதிää அவ்வசதியால் கிட்டிய நூற்பிரசுர வாய்ப்புக்கள் என்பன தமிழகத்திலும்ääஈழத்திலும் அரசியல்ää பொருளாதார நிலமைகளில் மட்டுமன்றி இலக்கியத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 

ஆங்கிலேயரின் வருகையினால் தோன்றிய நடுத்தர வர்க்கத்தினர் பெற்ற மேலைத்தேய கல்வி முறையால் தமக்கு அறிமுகமான புத்திலக்கிய வடிவமான நாவல்ää சிறுகதை என்பனவற்றை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்திää அவர்களையும் இவற்றின் சுவையை அறியச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் தமது ஓய்வு நேரங்களில் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டனர். 

ஆங்கிலேயரின் முதலாளித்துவப் பொருளாதார முறைää இங்கு நிலை பெற்றிருந்த நிலமானிய சமூக அமைப்பின் அடித்தளங்களை வலுவிழக்கச் செய்தது. இவர்களால் ஏற்பட்ட ஜனநாயக மயப்பட்டபோக்குகளும்ää மக்களுக்கு காணப்பட்ட கூடுதலான ஓய்வு நேரமும் அகன்ற வாசகர் வட்டத்;தை உருவாக்கியது. இந்தப் பின்புலங்கள் இங்கு புனைகதைகள் செல்வாக்குப் பெற வழியமைத்தன. 

இது பற்றி கலாநிதி மனோகரன் கூறுகையில் “நிலமானிய சமுதாயத்தின் சிதைவில் முதலாளித்துவ சமுதாயத்தின் தோற்றமும்ää ஆங்கிலக் கல்வி ஞானமும்ää மத்திய தர வகுப்பினரின் எழுச்சியும்ää அச்சுப்பொறி வசதியும் பொதுவாக தமிழ் நாவல் இலக்கியம் தோன்ற வழியமைத்துக் கொடுத்தன. நிலமானிய சமுதாய அமைப்பின் பேரிலக்கியமாக காவியம் அமைந்தது போலää முதலாளித்துவ அமைப்பின் பேரிலக்கியமாக நாவல் காணப்படுகின்றது.”4என்றார். இருந்தாலும் மரபு வழியில் செய்யுள் வடிவத்தினின்று உரைநடை இலக்கிய வடிவங்களின் தோற்றமாக வளர்ந்ததே நாவல் என்று பேராசிரியர் ‘கைலாசபதி’ குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. 

தமிழில் முதன் முதலில் தோன்றிய நாவலாக மயூரம் வேத நாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ (1879) கொள்ளப்படுகிறது. “வேத நாயகம் பிள்ளைக்கு முன்பு தமிழில் மதன காமராஜன் கதைääஈசாப் கதைகள்ää பரமார்த்த குரு கதைää பஞ்ச தந்திரக் கதை முதலியவை வழக்கில் இருந்த போதும் நடைமுறை வாழ்க்கையோடு ஒட்டிய நாவல் இலக்கியத்தை முதலில் எழுதியவர் வேதநாயகம் பிள்ளையேயாவார்”5 என்று கூறப்படுகின்றது. 

இதனைத் தொடர்ந்து தமிழில்ää வேதநாயகம் பிள்ளையின் இரண்டாவது நாவலான ‘சுகுண சுந்தரி சரித்திரம்’ 1887 ம் ஆண்டிலும்ää குருஸ்வாமி சர்மா எழுதிய ‘பிரேம கலாவத்யம்’ என்னும் நாவல் 1893 ம் ஆண்டிலும்ää ராஜம் ஐயர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் நாவல் 1896 ம் ஆண்டிலும் வெளியாகின. இன்று சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக்கூறும் வகையில் பல நாவல்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


1.3 ஈழத்தில் தமிழ் நாவல்களின் தோற்றம்.


19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஆங்கிலேயரின் புதிய கல்வி முறைகளின் வெளிப்பாட்டு வடிவமே நாவலிலக்கியமாகும். 19ம் நூற்றாண்டில் செய்யுளின் ஆதிக்கத்தை உடைத்துக் கொண்டு செல்வாக்குப் பெற்ற உரை நடையின் உச்ச வடிவமாக நாவல் மேற்கிளம்பியது. 


1.3.1 ஈழத்தின் ஆரம்பகால தமிழ் நாவல் முயற்சிகள்.

ஈழத்தில் தமிழ் நாவல்களின் ஆரம்பம் எம்.சி.சித்திலெப்பையின் ‘அஸன்பே சரித்திர’த்துடன் (1885) இடம் பெறுகின்றது. இதனைத் தொடர்ந்துää
எஸ். இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதை (1895) 
தி.த. சரவண முத்துப்பிள்ளையின் மோகனாங்கி (1895)
சி.வை. சின்னப்பிள்ளையின் வீரசிங்கன் கதை (1905) ஆகிய நாவல்கள் ஈழத்தின் ஆரம்பகால நாவல் முயற்சிகளாகக் கொள்ளப்பட்டன. இதில் ‘ஊசோன் பாலந்தை கதை’ தகவல் அளவில் மட்டுமே காணப்படுகின்றது.

சித்திலெப்பையின் ‘அஸன்பே சரித்திர’மானது அரேபிய பண்பாட்டினதும்ää ஐரோப்பிய பண்பாட்டினதும் கலவையாக அமைந்தது. இது எகிப்து நாட்டைச் சேர்ந்த அஸன் என்பவனது வரலாற்றைக் கூறுகின்றது. இளம் பருவத்தில் பல இடர்களை அனுபவித்த அவன்ää அவற்றைக் கடந்து உயர்நிலை அடைந்ததை இந்நாவல் கூறுகின்றது. 
தி.த. சரவண முத்துப்பிள்ளையின் மோகனாங்கி தமிழக வரலாற்றைக் கூறும் நாவலாகும். தமிழகத்தின் நாயக்க மன்னராட்சிச் சூழலில் நிலவிய அரசியற் போட்டிகளின் பகைப்புலத்தில் காதல்ää வீரம்ää சூழ்ச்சி முதலியவற்றைக் கொண்டு புனையப்பட்டதாகும். இந்நாவலின் கதைக்கான கரு தமிழகத்தைப் பிரதிபலித்தாலும் ஆசிரியர் ஈழத்தை சேர்ந்தவர் என்ற வகையில் இது ஈழத்து நாவலாக கொள்ளப்படுன்றது. 
ஈழத்தின் ஆரம்பகால நாவல்களான அஸன்பே சரித்திரம்ää மோகனாங்கி என்பவை காதல்ää வீரம் என்பவற்றையே வெளிப்படுத்தின. எனினும் ஈழத்து மண்ணையும்ää மக்களையும் களமாகக் கொண்டு தோன்றிய முதல் நாவலாக ‘வீரசிங்கன் கதை’ காணப்படுகின்றது. இது யாழ்ப்பாண பிரதேசம் சார்ந்த இளைஞனொருவனின் அனுபவங்களைக் கருவாகக் கொண்ட நாவலாகும். யாழ்ப்பாணத்தின் மல்லாகம் என்ற கிராமத்திற் பிறந்த வீரசிங்கன் என்பவன் குடும்ப பிரச்சினைகளால் பாதிப்படைந்து குடா நாட்டை விட்டு நீண்ட பிரயாணம் மேற்கொள்கிறான். அவ்வாறான பிரயாணத்தில் அவன் அடைந்த மேன்மைகளை ‘வீரசிங்கன் கதை’ என்னும் நாவல் வெளிப்படுத்துகின்றது. 
இந்நாவல்களைத் தொடர்ந்து பல சமூக நாவல்கள் எழுந்துää சமூகத்தின் பல பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வருகின்றன.

1.3.2 1920 - 1940 காலப்பகுதியில் ஈழத்து தமிழ் நாவல்கள்
ஈழத்தின் முதலாவது சமூக நாவலாக மங்களநாயகம் தம்பையா என்பவரால் எழுதப்பட்ட ‘நொறுங்குண்ட இதயம்’ என்பதாகும். கண்மணிää பொன்மணி என்ற இரு தோழியரின் வாழ்க்கைச் சு10ழலை மையப்படுத்திää சமுதாயத்தில் காணப்படும் பொருளாசைää அந்தஸ்துணர்வுää ஆணாதிக்க மனப்பாங்கு என்பவற்றைக் கூறுகின்றது. இந்நாவலின் ஆசிரியர் தம்பையா ‘அரியமலர்’ என்ற நாவலை எழுதினாலுமää; அது கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
இந்நாவலுக்குப் பிறகு ஈழத்தில் 1940கள் வரை சமூகப் பிரச்சினைகள் சார்ந்த கதைகள்ää மர்மப்பண்பு சார்ந்த கதைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பெருந்தொகையான நாவல்கள் எழுதப்பட்டன. இதனைப் பற்றி கலாநிதி யோகராசா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“1940கள் வரை ஈழத்து நாவல்கள் கற்பனை சார்ந்த காதல்ää வீரம்ää வரலாறுää துப்பறிதல்ää மர்மம்ää சமூக குறைபாடுää சமகாலச் சமூக நிலைமை போன்ற அம்சங்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன”.
               (யோகராசாääசெ.ää(2008)ääஈழத்துத் தமிழ் நாவல் வளமும் வளர்ச்சியும்ää ப.04) 
இத்தகைய நாவல்களை எழுதியோர்களில் ம.வே. திருஞானசம்பந்த பிள்ளைää இடைக்காடர் என்போர் குறிப்பிடத்தக்;கவர்கள். ம.வே. திருஞானசம்பந்த பிள்ளை‘காசிநாதன் நேசமலர்’ (1924)ää‘கோபால நேசரத்தினம்’ (1926)ää‘துரை ரத்தினம் நேசமணி’ (1927-28)என்ற நாவல்களையும் இடைக்காடர் ‘நீலகண்டன் ஒரு சாதிவேளாளன்’(1925) என்ற நாவலையும் எழுதியுள்ளனர். 
கோபால நேசரத்தினம்ää துரைரத்தினம் நேசமணி ஆகிய இரு நாவல்களும் கிறஸ்தவ மிசனரியின் சமய பிரச்சாரப் போக்கில் உள்ள குறைபாடுகளைச் சைவர்களின் தளத்தில் நின்று கண்டிப்பதான கதைப் பொருளில் அமைந்த நாவல்களாகும். இதில் கோபால நேசரத்தினம் சைவ இளந்தலைமுறையினைரைக் கல்விää திருமண வாய்ப்புக்களைக் காட்டி மதம் மாறத்தூண்டி நிற்கும் கிறஸ்தவ பாதிரிமார்களை விமர்சிக்கும் நோக்கில் அமைந்தது. 
சீதனப் பிரச்சினையால் மனைவியை அவளது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டு தீயவர்கள் சகவாசத்தால் ஒழுக்கம் தவற முயல்கின்ற கணவனை அம்மனைவியின் நற்பண்புகள் எவ்வாறு மீட்nடுக்கின்றன என்பதை துரைரத்தினம் நேசமணி என்கின்ற நாவல் எடுத்துக் கூறுகின்றது. 
இடைக்காடர் எழுதிய நீலகண்டன் ஒரு சாதிவேளாளன் எனும் நாவல் சாதி ஏற்றத்தாழ்வின் பொருந்தாமையை எடுத்துக் கூறுகின்றது. இவை தவிர இக்காலத்தில் தோற்றம் பெற்ற 
எச். நெல்லையாவின் காந்தாமணி அல்லது தீண்டாமைக்கு சாவுமணி(1937)
எம்.ஏ. செல்வநாயகத்தின் செல்வி சரோஜா அல்லது தீண்டாமைக்கு சவுக்கடி(1938)
மூத்த தம்பி செல்லப்பாவின் சுந்தரவதனா அல்லது இன்பக்காதலர்(1938)
என்பனவும் சாதியை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்ற நாவல்களாகும். 
“இக்காலப்பகுதியில் குடும்ப உறவு நிலைகள்ää ஒழுக்க நிலைகள்ää பொதுவான வாழ்க்கைப் பிரச்சினைகள் என்பனவற்றைக் கொண்டு பல கதைகள் எழுதப்பட்டன. ஆவை எழுதப்பட்ட முறையில் மர்மப்பண்பு சார்ந்த அணுகு முறை பயின்றுள்ளமையைப் பொதுவாக அவதானிக்க முடிகிறது”
         ( சுப்பிரமணியம்ääநா.ää ‘ஈழத்து தமிழ் நாவலிலக்கியம’;ää ஆய்வுகள் பார்வைகள் பதிவுகள்ää ப.137)
என நா.சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய நாவல்களுக்கு எடுத்துக் காட்டாகää
தேம்பா மலர் (1929)
ஞானபூரணி (1933)
வரணியூர் ஏ.சி. இராசையாவின் பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம்(1932)
சி.வே. தாமோதரம் பிள்ளையின் காந்தமலர் அல்லது கற்பின்மாட்சி(1936) 
முதலியவற்றைக் குறிப்பிடலாம.;.
இந்நாவல்கள் அடிப்படையில் கொலைää கொள்ளைää பெண்களைக் கடத்தல்ää துப்பறியும் புலன் விசாரணை முயற்சிகள்ää நீதிமன்ற விவாதங்கள் முதலிய பண்புகளைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளதால் இவை மர்மப் பண்புகள் சார்ந்த கதைக்குள் அடக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இக்காலப் பகுதியில் ‘அனிச்ச மலரின் காதல்’ என்றொரு நாவல் வெளிவந்தும்ää அது பலராலும் கவனிக்கப்படாமல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


1.3..3 1940 – 1960 ஈழத்துத் தமிழ் நாவல்கள் 
1940ம் ஆண்டு முதல் 50கள் வரை ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சியில் ஒரு புதிய திருப்பம் உருவாகியது. சமுதாயத்துக்கு பயன்படத்தக்க வடிவமே நாவல் என்ற எண்ணம் மாற்றமடைந்து கிராமியம் அல்லது பிரதேச மணம் சார்ந்த ஆக்கம் என்ற வகையில் வெளிவரத் தொடங்கியது. அதாவது காவியச் செல்வாக்கில் இருந்து ஈழத்து நாவலானது மெல்ல விலகி எதார்த்த சு10ழலுக்கு மாறியது. 
இக்காலத்தில் 1930 களில் தோன்றிய ஈழகேசரிää வீரகேசரிää தினகரன் முதலிய செய்தி இதழ்களும் மணிக்கொடிää கலைமகள்ää ஆனந்த விகடன் போன்ற இலக்கிய இதழ்களும் இவற்றுக்கு சிறந்த களமாக காணப்பட்டது. 
க.சச்சிதானந்தனின் அன்னபூரணி (1942)
குமாரி இரஞ்சிதம் (1943)
அ.செ. முருகானந்தனின் வண்டிச்சவாரி (1944)ää புகையில் தெரிந்த முகம் (1950)
க.தி.சம்பந்தனின் பாசம் (1947)
கசின் சகடயோகம் (1949)
கனக செந்தில்நாதனின் விதியின் கை (1953)
வெறும்பானை (1956)
வ.அ. இராசரத்தினத்தின் கொழுகொம்பு (1956)
ஆகிய நாவல்கள் ஈழகேசரியில் வெளிவந்தவையாகும். இக்கதைகளுள் பல குடும்ப உறவு நிலைää காதல்ää சமூக உறவு நிலை முதலிய அம்சங்களை உள்ளடக்கி எழுதப்பட்டவையாகும். அவை பற்றி சுருக்கமாக நோக்கினால்ää
பாசம் : ஆசிரியரொருவருக்கும் இரு மாணவியருக்கும் இடையிலான காதலுணர்வு சார்ந்த மனப் போராட்டத்தைச் சித்தரிப்பது.
விதியின் கை : யாழ்ப்பாணக் கிராமமொன்றில் இரு குடும்பங்களுக்கிடையில் நிகழும் போட்டியை மையப்படுத்திய கதையாகும். 
கொழு கொம்பு : திருகோணமலை பிரதேசம் சார் கிராமியச் சு10ழலின் குடும்பங்களுக்கிடையில் நிலவும் போட்டிகள்ää உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் படைப்பார்வம்ää அனுபவத் தொடர்பான சித்தரிப்பு முறைää சமூகப் பார்வை என நாவல்கள் தோற்றம் பெற்றுக் கொண்டிருக்கையில் 1950களின் பின் இந்நாவல்கள் புதிய பரிமாணத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம். அதாவது சமுதாய விமர்சனம் சார்ந்த படைப்புக்கள் வெளிவரத் தொடங்கின. இப்புதிய முயற்சியை தோற்றுவித்த பெருமை இளங்கீரன் என்பவரையே சாரும். இவர் எழுதிய ‘தென்றலும் புயலும்’(1955)ää‘நீதியே கேள்’(1956) என்பவை இச்சமுதாய விமர்சனம் சார்ந்த படைப்புக்கு சிறந்த உதாரணமாகும். 
சமுதாய விமர்சனம் பற்றி கலாநிதி நா. சுப்பிரமணியம் கூறுகையில்ää
“சமுதாய விமர்சனம் என்பது சமுதாயத்தின் இயங்கியலை உணர்ந்து அதற்கும் அதன் உறுப்பான தனிமனிதனுக்கும் உள்ள உறவு நிலைகளை இனங்கண்டு விமர்சிப்பதாகும்”
என்றார். அதாவது மனிதனை பாதிக்கும் புறக்காரணிகளான அரசியல்ää பொருளாதார விடயங்களை இலக்கியத்தோடு தொடர்பு படுத்தி அழகியல் வெளிப்பாடுகள் மட்டுமே இலக்கியம் என்பதை விட்டு சமுதாயப் பிரச்சினைகளையும் இலக்கியத்தோடு தொடர்பு படுத்தி நோக்க வேண்டும் எனக்கூறுகிறார். 
இந்த வகையில் இளங்கீரனின் நாவல்களை நோக்கினால் அவை இரண்டும் வர்க்கம்ää சாதிää இனவுணர்வு முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களாகும். அவை இரண்டும் சமூகப் பொருளாதாரங்களுக்கு மத்தியில் காதலைப் பற்றிப் பேசுவன. சாதியாலும் இனத்தாலும் வேறுபட்ட காதல் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் தோல்வியடைவதனை இந்நாவல் வெளிப்படுத்துகின்றன. 
‘தென்றலும் புயலும்’ என்ற நாவலின் கதையானது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வறிய உயர் சாதிக்குடும்பமொன்றின் அவல வாழ்வை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இக்குடும்பத்தின் அண்ணனும் தங்கையும் முறையே வர்க்கத்தை மீறிய நிலையிலும் சாதியை மீறிய நிலையிலும் காதல் வசப்படுகின்றனர். கொழும்பு நகரில் பணக்காரப் பெண்ணான மனோன்மணியைக் காதலித்த பாலு அவளுடன் உடலுறவும் கொள்கிறான். ஆனால் அந்தஸ்த்து வேறுபாடு இருவரது இணைவுக்கும் தடையாக அமைகின்றது. மனோன்மணி வேறொருவனுக்கு மனைவியாகின்றாள். பாலு மனமுடைந்து மரணமடைகின்றான். கிராமத்தில் தாழ்ந்த சாதி எனப்படும் பூபதியை காதலித்த தங்கம் பல எதிர்ப்புகளையும் எதிர்க்கொண்டு அவனையே மணந்து கொள்கிறாள். இதனால் அவளுடைய தந்தை மரணமடைகின்றார். 
‘நீதியே நீ கேள்’ என்ற நாவல் வர்க்க உணர்வோடு இனவுணர்வையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலாகும் இக்கதையின் சாரம்சத்தை நோக்கினால் முதலாளி பரமசிவத்தின் மகனான கணேஷ் தொழிலாளியின் மகளான பத்மினியைக் காதலிக்கிறான். கணேஷனின் தங்கை தவமணி தன்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்த சிங்களவரான பிரேமதாஸ் என்பவரைக் காதலிக்கிறாள். கணேஷனின் காதல் திட்டமிட்டு தடுக்கப்படுகிறது. பத்மினி; கொலை செய்யப்படுகிறாள். துவமணி தன் தந்தையை மீறி பிரேமதாஸை மணக்கிறாள். இவ்வாறாக முதலாளிää தொழிலாளி என்ற வர்க்க உணர்வையும்ää தமிழ் சிங்கள உணர்வையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. 

1.3.4  1960– 1980 காலப்பகுதியில் ஈழத்து தமிழ் நாவல்கள்.
1950 களில் தொடக்கி வைத்த சமூக வமர்சன பார்வையானது மேலும் வளர்ச்சியடைந்து மாக்சிச நோக்கிலும்ää மனித நேய நோக்கிலும் நாவல்கள் எழுதப்பட்டன. இளங்கீரனின் இரு நாவல்களும் மாக்சிச நோக்கில் எழுதப்பட்டவையாகும். இக்கொள்கையில் கணேசலிங்கன்ää டானியல் போன்றோர் நாவல்கள் எழுதியோருள் குறிப்பிடத்தக்கவர்கள். 
செ. கணேசலிங்கன் நீண்ட பயணம் (1966)ää போர்க்கோலம் (1969) ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவை இரண்டும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் தம்மை ஒடுக்கும் உயர் சாதியினருக்கு எதிராக மேற்கொண்ட இயக்க நிலைப்பட்ட பேரெழுச்சியின் இரு வேறு கட்டங்களை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இவை தவிர ‘சடங்கு’ää‘செவ்வானம்’ää‘தரையும் தாரகையும’; என்ற நாவல்களையும் எழுதியுள்ளார். 
கே.டானியல் பொதுவாக சாதிப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டே நாவல்களை எழுதியுள்ளார். இவரது நாவல்களாக ‘அடிமைகள்’(1984)ää‘கானல்’(1986)ää‘தண்ணீர்’(1989)ää‘பஞ்சமர்’ää‘பஞ்சகோணங்கள்’ என்பவற்றைக் குறிப்பிடலாம். 
மாக்சிச நோக்கில் நாவல்கள் தோற்றம் பெற்ற இக்காலப்பகுதியில் மனித நேய அணுகுமுறை சார்ந்த சமுதாய நாவல்களும் தோற்றம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நாவல்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு மலையக நாவல்களே ஆகும். இவை வர்க்கம் தொடர்பான பிரச்சினைகளை அனுதாபத்துடன் நோக்கின. மனித நேய அணுகுமுறை சார்ந்து சாதி தொடர்பாகவும் நாவல்கள் எழுதப்பட்டன. அவற்றுக்குää
சொக்கனின் சீதா (1963)
தெணியானின் விடிவை நோக்கி (1973)
செங்கை ஆழியனின் பிரளயம் (1975)
தி.ஞானசேகரனின் புதிய சுவடுகள் (1977)
போன்ற நாவல்களைக் குறிப்பிடலாம். இவற்றுள் பிரளயம் நாவலானது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஒரு கிராமப்பகுதியை சித்தரிக்கின்றது. இவை தவிர நா. சோமகாந்தனின் ‘விடிவெள்ளி பூத்தது’ää தெணியானின் ‘பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ என்பனவும் சாதி தொடர்பாக மனித நேய அணுகுமுறையில் நோக்கின. 
இக்காலப் பகுதியில் குடும்ப உறவு நிலை மற்றும் தனிமனித உணர்வு நிலை சார்ந்த அம்சங்களை முதன்மைப்படுத்தி பல நாவல்கள் எழுதப்பட்டன. இவ்வகையில் எஸ். பொன்னுத்துரையின் ‘தீ’ (1961)ää‘சடங்கு’(1966) என்பன குறிப்பிடத்தக்கன. இது போல் குடும்ப  
உறவுச்சு10ழல் மற்றும் இன உணர்வு என்பனவற்றின் மத்தியில் தனிமனித உணர்வு நிலைகளைப் பொருத்திக் காட்டி எழுதப்பட்ட முக்கியமான நாவலாக அருள் சுப்பிரமணியத்தின் ‘அவர்களுக்கு வயது வந்து விட்டது’ காணப்படுகின்றது. மேலும் 70களில் பல குடும்ப நாவல்கள் தோன்றியிருந்தது என கலாநிதி செ. யோகராசா சில நாவல்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். 
பூசைக்கு வந்த மலர் - நா. பாலேஸ்வரி
புயலுக்கு பின் - பொ. பத்மநாதன்
தீக்குள் விரலை வைத்தாள் - கே.எஸ். ஆனந்தன்
கர்ப்பகிரகம் - கே.எஸ். ஆனந்தன்
நீல மாளிகை – சிவம் பொன்னையா
ஒரு விலை மகளைக் காதலிக்கிறேன் - இந்துமகேசன்
அஞ்சாதே என் அஞ்சுகமே – ரஜினி
வாழ்க்கைப் பயணம் - நயீமா ஏ. பஷீர்
உள்ளத்தின் கனவுகள் - அன்னலட்சுமி இராசதுரை என்பனவாகும்”
இந்நாவல்கள் பற்றி அவர் மேலும் கூறுகையில்ää“இந்நாள் வரையிலான தமிழ்ச் சஞ்சிகைகள் கல்கிää மு.வ. மணியன்ää நா.பார்த்த சாரதி முதலியோரது நாவல்கள் வாசிப்பினதும்ää தமிழக திரைப்படங்கள் பார்க்கும் பழக்கத்தினதும் ஒன்று சேர்ந்த அறுவடையே இந்நாவல்களாகும்” என்றார். 
இதனைத் தொடர்ந்துää இக்காலப்பகுதியில் பிரதேச மண்வாசைன மிக்க படைப்பு முயற்சிகள் தோன்றின. இவ்வகையில் முதல் படைப்பாக வன்னி பிரதேச விவசாய மண்ணின் சித்திரமாக அ. பாலமனோகரனின் ‘நிலக்கிளி’ என்ற நாவலைக் குறிப்பிடலாம். இதேபோல ஈழத்தின் பல்வேறு கிராமப்புறங்கள் பற்றியும் நாவல்கள் வெளிவரத் தொடங்கின. வன்னிப் பகுதியில் கிராமங்கள்ää யாழ்ப்பாண கிராமப்புறங்கள் எனடபன இந்நாவல்களுக்கு களங்களாயின. 
செங்கை ஆழியனின் ‘வாடைக்காற்று’(1973) நெடுந்தீவுக் கிராமத்தின் மீன்பிடிக்களத்தையும்ää‘காட்டாறு’ (1977) வன்னிப் பிரதேசத்தின் செட்டிக்குளம் சார்ந்த ஒரு கிராமச் சு10ழலையும்ää தாமரைச் செல்வியின் ‘சுமைகள்’ (1977) வன்னி பிரதேசத்தின் பரந்தன் என்ற பகுதியின் கிராமிய களத்தையும்ää வை. அஹமதின் ‘புதிய தலைமுறைகள்’(1976)ää ஜோன்ராஜின் ‘போடியார் மாப்பிள்ளை’ என்பன கிழக்கிலங்கை தொடர்பாகவும் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.


1.3.5 1980 - இற்றைவரை காலப்பகுதியில் ஈழத்து தமிழ் நாவல்கள். 
80களுக்குப் பிறகு ஈழத்து நாவலானது ஒரு புதிய திசையை நோக்கிச் சென்றிருப்பதைக் காணலாம். 1970களில் ஏற்பட்ட பேரினவாத இனக்கொலை நாவல்களின் திசையை மாற்றியமைத்தது. அதாவது தமிழ்ää சிங்கள இன உணர்வும் அதன் சமகால விளைவுகளும் தமிழ் நாவலுக்கு பொளாகத் தொடங்கின. இதன் அரம்ப கட்டம் 1948 ஆம் ஆண்டில் மலையகத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிப்பு முயற்சி நாவல்களுக்கு பொருளாக அமைந்தன. 1977 இனக்கொலை சு10ழல் நாவல்களில் வெளிவரத் தொடங்கியது. அருளரின் ‘லங்கா ராணி’ (1978)ää ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘ஒரு கோடை விடுமுறை’(1982) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 
இந்நாவலுக்குப் பிறகு ‘தேசிய இனப்பிரச்சினை’ நாவலுக்கு பொருளாக அமைந்தன. அதாவது
தனிநாட்டுக் கோரிக்கை அதனால் ஏற்பட்ட தமிழீழ விடுதலை இயக்கங்களின் ஆயுதப் போராட்டம்ää அரச இராணுவ ஒடுக்கு முறைää 1983 இல் ஏற்பட்ட இனக்கலவரம் என்பன நாவல்களில் வெளிவரத் தொடங்கின. இக்காலத்தில் 
இராணுவ ஒடுக்கு முறை :-
  செ. யோகநாதனின் ‘நியாயப்படுதப்பட்ட கொலைகள்’ää
  தாமரைச் செல்வியின் ‘தாகம்’ää
  பொன். கணேசமூர்த்தியின் ‘தெடுவானம் தூரத்தில்’ää
அகதிநிலை மற்றும் இடப்பெயர்வு :-
  தெணியாயனின் ‘சிதைவுகள்’
  செ. யோகநாதனின் ‘துன்பக்கேணியில்’
  செங்கை ஆழியானின் ‘மரணங்கள் மலிந்த பூமி’ää‘போரே நீ போ’
இயக்கங்களின் போராட்டங்கள் :-
  துரையின் ‘சுயம்பரம்’
  மலரவனின் ‘போருலா’
கோவிந்தனின்‘புதிய உலகம்’ää
போருக்கு முன்னரான வாழ்க்கை :- 
     செ. யோகநாதனின் ‘நே;ற்றிருந்தோம் அந்த வீட்டினிலே’
     வ. அ. இராசரத்தினத்தின் ‘ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது’
போன்ற நாவல்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் போர் காரணமாக மக்கள் வெளிநாடுகளை நோக்கி புலம் பெயர்ந்தனர். இதனால் புகலிட நாவல்கள் வெளிவந்தன. 
புகலிட தமிழரது வாழ்க்கை :-
    பார்தீபனின் ‘கனவை மிதித்தவன்’
    பொ. கருணாகரமூர்த்தி ‘வானம் வசப்படும்’
    ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘உவகமெல்லாம் வியாபாரிகள்’
புகலிட நாட்டினது வாழ்க்கை :- 
‘தேம்ஸ் நதிக்கரையில்’ää‘அழிவின் அழைப்பிதழ்’ என்பவை குறிப்பிடத்தக்கவை. 
இப்போரக்கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 90களிலும் பல நாவல்கள் வெளிவந்தன. இயல்வாணனின் ‘சுவடுகள்’ (1992)ää செ. கணேசலிங்கனின் ‘ஒரு மண்ணின் கதை’ (1994)ää‘அயலவர்கள’; (1995)ää‘பொய்மையின் நிழல்கள்’ (1997)ää மலரவனின் ‘புயல் பறவை’ää தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ää தமிழ்கவி என்பவரின் ‘இனி இருள் விலகும்’ää  ‘இனி வானம் வெளிச்சிடும்’ää ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘பனி பெய்யும் இரவுகள்’(1993)ää‘வசந்தம் வந்து போய்விட்டது’(1997)ää தியாகலிங்கத்தின் ‘நாளை’(1999)ää ஷோபா சக்தி எழுதிய ‘கொரில்லா’ (2001)ää செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ முதலிய நாவல்களைக் குறிப்பிடலாம்.
மேலும் 80களுக்குப் பிறகு பிரதேச நாவல்கள் பல எழுந்தன. முன்னைய காலங்களை விட அதிகமாக தோன்றவில்லை என்றாலும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவில் தோன்றியிருந்தன. 
யாழ்ப்பாணம் நயினாதீவு :- தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’
யாழ்ப்பாணம் வடமாராட்சி :- துரையின் ‘சுயம்பரம்’
அம்பாறை :- ராஜேஸ்வரி பாலசுப்பிர மணியத்தின் ‘தில்லையாற்றங்கரை’

வடமேல் மாகாணம் நீர் கொழும்பு :- முத்துலிங்கத்தின் ‘ஒரு உதயத்தின் அஸ்தமனம்’  
திருகோணமலை :- 
வ.அ. இராசரத்தினத்தின் ‘ஒரு வெண்மணற்கிராமம் காத்துக் 
              கொண்டிருக்கிறது’
புரட்சி பாலனின் ‘வசந்த காலக்கோலங்கள்’
வீ.என். சந்திகாந்தியின் ‘மீண்டும் வசந்தம்’   
தென்னிலங்கை :-  
              திக்வெல்லைக் கமாலின் ‘ஒளிபரவுகிறது’ (1995)
              எம். எச். எம். ஷம்ஸின் ‘கிராமத்துக் கனவுகள்’(1999)
              ஸனீறா கால்தீனின் ‘ஒரு தீபம் தீயாகிறது’ (1999)
மட்டக்களப்பு :- 
அகமத்தின் ‘கிராமத்துப் பெண்’
              செ. குணரத்தினத்தின் ‘துன்ப அலைகள்’(2002)
              ஓ. கே. குணநாதனின் ‘ஆடித்தீ’
முதலிய பல நாவல்கள் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை தவிர முஸ்லிம் தேசியம்ää இன ஒற்றுமைää பல்கலைக்கழக வாழ்க்கை வரலாறுää வேடுவர் வாழ்க்கை என்பன தொடர்பாகவும் நாவல்கள் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பேராதனைப் பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்டு ‘கங்கை கரையோரத்தில்’ என்ற நாவலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்டு ‘வாக்குமூலம்’ என்ற நாவலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்டு ‘வெண்ணிலவே வாராயோ?’ என்ற நாவலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஈழத்து தமிழ் நாவல்களின் வளர்ச்சியானது காலத்துக்கு காலம் தன்பொருளில் மாற்றமடைந்தும் வளர்ச்சியடைந்தும் வந்துள்ளமையை அவதானிக்கலாம். அதாவது ஈழத்தின் சமூகää அரசியல்ää பொருளாதார மாற்றங்கள் நாவல்களில் வெளிப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். இன்று வரைக்கும் பல பொருள்களில் நாவல்கள் தோற்றம் பெற்ற வண்ணமிருக்கின்றன. 






1.4 அம்பாறை மாவட்டத்தில் தமிழ் நாவல்களின் தோற்றம்.
வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திர’த்துடன் இந்தியாவிலும் அறிஞர் சித்திலெப்பபையின் ‘அஸன்பே சரித்திர’த்துடன் இலங்கையிலும் ஆரம்பமாகும் நாவலிலக்கிய ஓட்டம் அம்பாறை மாவட்டத்தில் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை இங்கு நோக்கவுள்ளோம். 
நாவலிலக்கிய ஆய்வுகளின் போதும் சரிää இலங்கை இலக்கிய ஆய்வுகளின் போதும் சரி ஆய்வாளர்களால் கவனத்திற் கொள்ளப்படாத உ. வில்லயம் பிள்ளை அவர்களே அம்பாறை மாவட்ட நாவலிலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்கின்றார். இவரின் நாவல் இலக்கிய முன்முயற்சி பற்றி வீ.சி. கந்தையா பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“ஆங்கில நாவல்களையும் நன்கு படித்திருந்த உ. வில்லியம் பிள்ளையவர்கள் தமிழிலும் அவை போன்று எழுதுதல் வேண்டும் என அடிக்கடி சொல்வார். தாமே இரு நாவல்களைத் தமிழில் எழுதியும் உள்ளார். அவர் எழுதிய ‘இந்திராபுரி இரகசியம்’ää‘மஞ்சள் பூதம் அல்லது இழந்த செல்வம்’ என்னும் இரண்டு நாவல்களுமே மட்டக்களப்பு ஆசிரியர்களால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல்கள் எனலாம்.”6
இதன்படி பார்த்தால் உ. வில்லியம் பிள்ளை இரண்டு நாவல்களை எழுதியுள்ளார் என தெரிகிறது. அவையே
1. இந்திராபுரி இ;ரகசியம்
2. மஞ்சள் பூதம் அல்லது இழந்த செல்வம் எனப் பெயர் பெற்றுள்ளது. 

இவரது நாவல்களில்ää நாவல் வரலாற்றின் ஆரம்ப காலங்களில் உணரப்பட்ட நீண்டதும்ää வசனரூபத்தில் அமைந்ததுமான கற்பனை நிறைந்த கதைகளே காணப்படுகின்றன. இவரின் ‘இந்திராபுரி இரகசியம்’மூன்றாவது ஜோர்ஜ் மன்னன் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சியொன்றை வைத்துக் கொண்டு எழுதப்பட்டதாகும். ஆங்கில நாட்டுப் பழக்க வழக்கங்களும்ää வாழ்க்கை முறைகளும் இந்நாவலில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. 

இழந்த செல்வம் அல்லது மஞ்சள் பூதம் எனும் நாவல் மந்திர தந்திரங்கள் நிறைந்த கிழக்குப் பிரதேச வாழ்வோட்டங்களை கற்பனை மிகையுடனும் மனோரதியப் பாங்குடனும் எடுத்துக் கூறுவதாகும். இவரைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவிலேயே இம்மாவட்டத்தில் நாவல்கள் எழுதப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்தில் தோற்றம் பெற்ற நாவல்களை கால அடிப்படையில் நோக்குவோம். 


1.4.1  1970– 1990 காலப்பகுதியில் அம்பாறை மாவட்ட தமிழ் நாவல்கள்.

உ. வில்லியம் பிள்ளையின் நாவலைத் தொடர்ந்து சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.பி. முஹம்மது ஜெலீல் இரண்டு நாவல்களைத் தந்துள்ளார். அவை ‘ஒரு வெள்ளைப் பூ சிரிக்கிறது’ (1970) இவை முஸ்லிம்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்டää அவர்களின் வாழ்க்கைப் புலத்தை வெளிக்காட்டும் நாவல்களேயாகும். ‘ஒரு சரித்திரம் தொடர்கிறது’என்னும் நாவல் முஸ்லிம் மத்திய தர வர்க்கத்தினரின் வாழ்க்;கை முரண்பாடுகளைச் சித்தரிப்பதாகும். இது குடும்பங்களிடையேää சமூக மக்களிடையே எழுகின்ற முரண்பாடுகளின் வெளிப்பாடாகத் திகழ்கிறது. இவருடைய கதைகளில் ஆழம் போதாது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. 

அம்பாறை மாவட்ட நாவல் இலக்கியப் பரப்பில் அ.ஸ. அப்துஸ்ஸமதும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். இவருடைய இரண்டு நாவல்கள் 1970 - 1990 ற்கும் இடையில் வெளிவந்தவை. அவை பனிமலர் (1982)ää கனவுப்பூக்கள் (1983) ஆகியனவாகும். 

மட்டக்களப்பு பிரதேசத்தை கதைப்புலமாகக் கொண்டு முஸ்லிம்களின் சமூகää சமய பண்பாட்டு அம்சங்களை விளக்கி அவர்களின் வாழ்வின் ஓட்டத்தை பிரதிபலிப்பதாக அவரின் ‘பனிமலர்’ எனும் நாவல் அமைந்துள்ளது. “இந்த நாவலில் மட்டக்களப்புப் பண்பாடுகளையும் முஸ்லிம்களின் தனித்துவமான ஆசாரங்களையும்ää நம்பிக்கைகளையும் நிறையக் காணலாம். அது சில இடங்களில் நகைச்சுவையாகவும் அமைந்துள்ளது. எனவே இந்த நாவலில் மட்டக்களப்பு மணக்கிறதுää இம் மண்ணின் தேன் இனிக்கிறதுää மீன் பாடுகிறதுää தயிர் சுவைக்கிறது என்று நீங்கள் சொன்னால் மிகையாகாது”7 என அ.ஸ. தனது கதை பற்றி முன்னுரையில் எழுதியுள்ளார். 

அ.ஸ. அப்துஸ்ஸமதின் முதல் நாவலான இது வீரகேசரியில் தொடர்கதையாக வந்ததால் அதில் ஜனரஞ்சக எதிர்பார்ப்பும்ää தொடர்கதைக்குரிய தொடர்ச்சி முறிவும்ää கதையோட்ட முரண்பாடுகளும் காணப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
அம்பாறை மாவட்ட நாவலிலக்கிய ஓட்டத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்த பெண் படைப்பாளராக ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் காணப்படுகின்றார். இவர் எட்டு நாவல்களை தமிழுக்கு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தில்லையாற்றங்கரையில் (1981)ää ஒரு கோடை விடுமுறை (1982) ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்கது. இவரது பங்களிப்பு இலங்கை நாவலிலக்கிய உலகில் பேசப்படாதது பெருங்குறைபாடாகும். 


1.4.2 1990– 2010 காலப்பகுதியில் அம்பாறை மாவட்ட தமிழ் நாவல்கள்.

இக்காலப்பகுதியில்ää ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களே அதிகமான நாவல்களை எழுதியுள்ளார். இவருடைய நாவல்களை பினவருமாறு குறிப்பிடலாம்.
1. உலகமெல்லாம் வியாபாரிகள் (1991)
2. தேம்ஸ் நதிக்கரையில் (1993)
3. பனி பெய்யும் இரவுகள் (1994)
4. அம்மா என்றொரு பெண் (1996)
5. வசந்தம் வந்து போய்விட்டது (1998)
6. நாளைய மனிதர்கள் (2003)

இவருடைய நாவல்களில் ‘ஒரு கோடை விடுமுறை’ää‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ என்பன விமர்சன உலகில் சிலாகித்துப் பேசப்படுவனவாகும். (இவர் புலம் பெயர்ந்து தற்போது இங்கிலந்தில் வசித்து வருவதால் இவருடைய நாவல்கள் பற்றிய முழுமையான விபரங்களைப் பெற முடியவில்லை.)

இவர் லண்டன் ‘முரசு’ பத்திரிகையில் தொடராக எழுதிய ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ நூல்வடிவம் பெற்றவற்றுள் சிறப்பித்து நோக்கப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்து வாழும் ஒரு குடும்பத்தில் நிலவும் கௌரவச் சிக்கல்களைப் படம் பிடித்துக்காட்டுவதாக இந்நாவல் அமைந்துள்ளது. இது பற்றி சி. சிவசேகரம் ‘ஒரு தொடர்கதை நாவலாகிற போது’ என்ற தலைப்பில் விமர்சனக் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.“கதையில் ஒரு மசாலா தமிழ் சினிமாக் கதைத் தன்மை இருக்கின்றதென்னவோ உண்மை. இந்நாவலின் முக்கியமான பங்களிப்பு நமது லண்டன் வாழ் தமிழ் நடுத்தர வர்க்கச் சமுதாயத்தின் சமுதாய விழுமியங்களை தோலுரித்துக் காட்டுவதுதான்.”8
என சி. சிவசேகரம் இவரின் ‘உலகெல்லாம் வியாபாரிகள்’ என்ற நூலுக்கு விமர்சனக் குறிப்பு எழுதியுள்ளார். 

“கதாசிரியரது அரசியல் உணர்வின் ஆழமின்மை கதையில் பல இடங்களில் தலை காட்டினாலும் பிரசார வாடையை மீறி நேர்மையான ஓர் அவதானியின் தரிசனங்கள் நூல் முழுவதும் வியாபித்துள்ளன”எனவும் சி. சிவசேகரம் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்புக்கள் ராஜேஸ்வரியின் நாவல் இலக்கியப் பங்களிப்பு உலகளாவிய தரத்தைப் பெற்றுள்ளது என்பதைப் புலப்படுத்துகின்றன. இதற்கு அவர் கைக்கொண்ட பொருட் தளம் காரணமாக அமைந்திருக்கலாம். 

அ.ஸ. அப்துஸ்ஸமது 1997 இல் ‘தர்மங்களாகும் தவறுகள்’ எனும் நாவலை இலக்கிய உலகிற்கு தந்துள்ளார். இந்நாவல் தேசிய அளவில் பிணைந்து வாழும் மூவின மக்களையும் அவர்களின் யதார்த்தத்தினையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த நாவலாகும். தினகரனில் தொடர்கதையாக வெளிவந்த இந்நாவல் அ.ஸ. விற்கு பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது எனலாம். இஸ்லாமிய பண்பாட்டில் நின்று கதையெழுதும் அ.ஸ. வின் பரீட்சார்த்தமான முன்முயற்சியாகவே இதைக் கொள்ளலாம். இந்நாவல் தமக்கு முழு வெற்றியளித்ததாக இவர் குறிப்பிடுகிறார். 
“அ.ஸ. வின் படைப்புகளினூடாக இயற்கை சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறைää மனித நேயம்ää மனித சமூகத்தை ஆரோக்கியமாக கொண்டு செல்ல வேண்டுமென்ற தொலை நோக்கு ஆகியவைகளை அவதானிக்க முடிகிறது”
(ää (1989)ää’களம்’ இதழ்ää பக்.4ää5)
என ஞானரதன் அ.ஸ. பற்றிக் கூறுகிறார். இக்கூற்றின் பிரதிபலிப்பு அவரின் படைப்புகளில் ஓடியுள்ளதை பலரும் சுட்டிக்காட்டுவர்.

ஜின்னா ஷரிபுத்தீனின் ‘கருகாத பசுமை’ என்ற நாவல் 2000ம் ஆண்டில் வெளிவந்த நாவலாக கொள்ளப்படுகிறது. இது மலையக சமூக அடிப்படையில் நின்று கொண்டு வாழ்வியல் ஓட்டத்தைப் பார்க்க முற்பட்டுள்ளது. 

‘நச்சு வளையம்’ என்னும் நாவலை எஸ். நஸீறுதீன் 2004 ம் ஆண்டு வெளியிட்டுள்ளார். இந்நாவலானதுää போராளிகளினால் முஸ்லிம்கள் பட்ட துயரினையும்ää அடக்கு முறையின் அதிகார உச்ச நிலையையும் எமக்கு நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இதனை இந்நாவலிலுள்ள பின்வரும் வரிகள் எடுத்துக் காட்டும்.
“ஹஜ்ஜு முடித்துவிட்டு வந்த – குழந்தைகளாக மாறிய ஹஜ்ஜாஜிகள் வேனோடு கொல்லப்பட்டுபுதையுண்டு போயினர்.”

விமல் குழந்தை வேல் ‘வெள்ளாவி’ என்னும் நாவலை 2005 ம் ஆண்டு காலப்பகுதியில் வெளியிட்டுள்ளார். இந்நாவல் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் சமூகää பொருளாதாரää அரசியல் அம்சங்களைக் கூறுவதோடு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வினைப் பேசுவதாகவும் அமைந்துள்ளது.  

எம். அப்துல் றஸாக் ‘வாக்கு மூலம்’ என்னும் நாவலை 2005 ல் வெளியிட்டார். இந்நாவல் அவருடைய பல்கலைக்கழக வாழ்வினைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் குடும்ப நிலைää காதல்ää நட்பு முதலான அம்சங்களை குறிப்பிட்ட சில பாத்திரங்களினூடாக வெளிப்படுத்தியுள்ளார்.

2008 ம் ஆண்டு‘வயலான் குருவி’ என்னும் நாவலை அஸீஸ் எம் பாயிஸ் வெளியிட்டார். இந்நாவல் ஒரு குடும்பத்தின் வாழ்வினூடாக ஒரு கிராமத்தினதும்ää ஒரு இனத்தினதும் வரலாற்றைச் சொல்லுகின்றது. இரண்டு தலைமுறைகளுக்கிடையே நிகழ்கின்ற வாழ்வை கதையாகச் சொல்கிறார் ஆசிரியர். 

இந்நாவலைப் பற்றி எம். அப்துல் றஸாக் “பொன்னன் வெளியும்அது சார்ந்த நிலப்பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதாலோ என்னவோ அவர்களின் மொழிக்கென்று பிரத்தியேக அழகு கூடிவருகின்றது. இடைவிடாத பேச்சிலும் சரிää இலக்கியப் படைப்புகளிலும் சரி ஒரு வித ஓசை நயம் கலந்திருக்கின்றது. உவமானää உவமேயங்கள்ää உதாரணங்கள் எல்லாம் சொல்ல வந்த கருத்தை விடவும் பன்மடங்கு விளக்கம் தருவனவாக உள்ளன”9 என்று குறிப்பிடுகிறார். 

வயலான் குருவிக்குப் பிறகு அம்பாறை மாவட்டத்தில் வெளிவந்த நாவலாக ‘நட்டுமை’ காணப்படுகிறது. இதனை ஆர்.எம். நௌஸாத் என்பவரே எழுதினார். இது 2009 ல் வெளியிடப்பட்டது. இந்நாவல் 1930 களில் வாழ்ந்த கிழக்கு முஸ்லிம் மக்களின் விவசாயம்ää போடிமார்ääவிவசாயிகள்ää மக்களுடைய வாழ்க்கை முதலானவற்றை எடுத்துக் கூறும் வகையில் புனையப்பட்டுள்ளது.

இந்நாவலைப் பற்றி நவாஸ்சௌபி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “புனைவில் தோன்றும் பண்பாடுகளும்ää சம்பவங்களும்ää யதார்த்தமும் கிராமியமும் கலந்திருந்தாலும் அதன் கதைமாந்தர்கள் கதைக்களத்துடன் உறவாடும் தன்மை சினிமாவின் பின்னணியை சில இடங்களில் நினைவுபடுத்துகிறது.”10
இந்நாவல் கடல் கடந்துää இந்தியாவில் சுந்தர ராமசாமியில் 75வது நாவல் இலக்கியப் போட்டியில் முதற்பரிசினைப் பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 




1.4.3 2010 - இற்றைவரைக்குமான காலப் பகுதியில் அம்பாறை மாவட்ட தமிழ் நாவல்கள்.

2010 இற்குப்பிறகு வெளிவந்த நாவல்களில் அரசியல்ää அரசியலில் மக்கள் கண்ட அனுபவம்ää சமூகம்ää பொருளாதாரம்ää அதிலும் பெண்களின் நிலைää பிரச்சினைகள் முதலானவற்றைக் கூறும் வகையில் புனையப்பட்டுள்ளன. 
‘பிரிவுக்குள் பிணைப்பு’ என்னும் நாவலை நிந்தவூரைச் சேர்ந்த ஹிதாயத்துல்லாஹ் மீர்சா என்பவர் 2010 இல் வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு சமூகங்களுக்குமிடையே பிரிவுகள் காணப்படுகின்றன. இவ்வாறு பிரிவுகள் காணப்பட்டாலும்ää எல்லாச் சமூகத்தவர்களிடையேயும் தொடர்புகள் காணப்படுகின்றன. இதனை மனிதன் சிந்திக்க தவறுகின்றான். என்பதனை இந்நாவல் தெளிவுபடுத்துகின்றது. 
இந்நாவலைப் பற்றி ஹிதாயத்துல்லாஹ் மீர்சா “பிரிவுக்குள் பிணைப்பு என்னும் இந்த நாவல் பிரிந்திருப்பவர்களை பிணையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. நமது இன்றைய சமூகத்தில் ஒரு சில பிரிவுகளை வைத்துக் கொண்டுää அதனை பல பிரிவினைகளாக்கிக் கொண்டிருப்பவர்களுக்குபிரிவுக்குள் பிணைப்பு என்னும் இந்த நாவல் பிரியத்துடன் துணை நிற்கும்” என்று கூறுகிறார். 
2011 இல் ‘கசகறணம்’ என்னும் நாவலை விமல் குழந்தை வேல் வெளியிட்டுள்ளார்.அக்கரைப்பற்றுப் பிரதேசத்தினை களமாகக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று சந்தைகள் பற்றியதாகவும்ää அது எரிக்கப்பட்டதனால் ஒற்றுமையாக கூடி வாழ்ந்த தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமை சீர்குலைந்தது. அச்சந்தை எரிக்கப்பட்ட தினத்திலிருந்து அந்த மக்களின் உறவும்ää உயிரும் எரிந்த தீயுடன் கருகிப்போன நினைவுகளை இந்நாவல் மீட்டுகிறது. 
2014 ம் ஆண்டு ‘நிழலைத்தேடி’ என்னும் நாவலை இன்ஷிராஹ் இக்பால் என்பவர் வெளியிட்டுள்ளார். இந்நாவல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தினால் வெளியிடப்பட்டது. “முற்று முழுவதும் ஒரு பெண்ணைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை தான் இந்நாவல். பெண் என்பவள் மென்மையானவள்ää மேன்மையானவள்ää அவளுக்கு இருக்கும் உணர்வுகளைää கஷ்டங்களைää தியாகத்தைää இலட்சிய தாகத்தை முடிந்தவரை உணர்ச்சி பூர்வமாகச் சொல்ல முயற்சி செய்துள்ளேன். பெண்ணின் இன்னொரு பக்கத்தையும் தொட்டுக்காட்ட முயற்சி செய்துள்ளேன்” என்று இந்நாவலைப் பற்றி இன்ஷிராஹ் இக்பால் குறிப்பிட்டுள்ளார். 
இந்நாவலைப் பற்றி றமீஸ் அப்துல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“‘நிழலைத்தேடி’ என்ற நாவல் ஒரு வகையில் பெண்ணிலைப்பட்ட துயரங்களை வெளிப்படுத்தினும் அதனூடாக அப்பெண்ணின் இலட்சிய மனோபாவம் நிறைவேறுவதையும் எடுத்துக்காட்டுகிறது. உண்மையில் வாழ்க்கையில் பெண்கள் மிகத்துயரப்படுகிறார்கள் என்பதற்கு இந்நாவல் ஒரு சிறந்த உதாரணமாகும். அதே நேரம் அந்தத் துயரம் பெண்களாலே நிகழ்ந்து விடுகிறது என்ற துர்ப்பாக்கியத்தையும் இந்நாவல் வெளிப்படுத்துகிறது”11 என்று குறிப்பிட்டுள்ளார். 
இலங்கையின் நாவலிலக்கியப் பரப்போடு ஒப்பிடுகையில்ää அம்பாறை மாவட்டத்தின் நாவலிலக்கிய முயற்சி சிறிய அளவாகக் காணப்படுவதுää இம்மாவட்டம் கண்டு கொள்ளப்படாமல் விடுவதற்கு ஒரு காரணம் எனலாம். அ.ஸ. சித்திரிஜாää சண்முகம்ää சிவலிங்கம் முதலானோர் பல நாவல்களை கையெழுத்துப் பிரதியாக பிரசுரம் செய்யாமல் வைத்துள்ளனர். இவை பிரசுரம் செய்யப்படும் போதுää அம்பாறை மாவட்ட நாவலிலக்கிய ஓட்டத்தில் புதிய பரிமாணங்களை எதிர்பார்க்கலாம்.



அடிக்குறிப்புக்கள்
1. பாலசுப்பிரமணியன்ääஇரா.ää(2004)ääநாவல்கலையியல்ääப.09.
2. றமீஸ் அப்துல்லாஹ்ää(2006-2008)ää‘ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சியில் இளங்கீரன்’ääப.87.
3. அருணாசலம்ääக.ää(2005)ääதமிழில் வரலாற்று நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.
4. துரைமனோகரன்ää(2005)ääபழம் புனலும் புது வெள்ளமும்ääபக்.69ää70.
5. அருணாசலம்ääக.ää (2005)ääதமிழில் வரலாற்று நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்ääப.14.
6. கந்தையாääவீ.சி.ää(1964)ääமட்டக்களப்பு தமிழகம்ääப.321.
7. அப்துஸ்ஸமதுääஅ.ஸ.ää(1982)ääபனிமலர்ääபக்.2.
8. சிவசேகரம்ääசி.ää(1995)ääவிமர்சனங்கள்ääபக்.103ää104.
9. அப்துல்றஸாக்ääஎம்.ää(2008)ääவயலான் குருவிääப.04.
10. நவாஸ் சௌபிää(2010.08.22)ää’தீரன்.ஆர்.எம்.நௌஸாத்தின் ‘நட்டுமை’ கிராமிய பண்பாடுகளின் நூதனசாலை’ääப.21.
11. றமீஸ் அப்துல்லாஹ்ää(2014)ääநிழலைத்தேடிääப.5.

No comments:

Post a Comment