கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்வியலைத்
தெளிவுறுத்தும் நட்டுமை நாவல்-
சமுகவியலடிப்படையான விமர்சன நோக்கு-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் சிறப்புக்கலைமானிப் பட்டத்தினது இறுதியாண்டுப் பரிட்சையின் ஒரு பகுதியினை புர்த்திசெய்யும் முகமாக சமர்;பபிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. 2008-2009-
ஏ.எல். முஹமட் அஸ்மத்.
தமிழ்ப்பிரிவு. மொழித்துறை கலைகலாசார பீடம்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒலுவில்.2014
இயல் - இரண்டு
இயல் இரண்டு
2.0 ஆர்.எம்.நௌஸாத்தும் அவருடைய இலக்கியப் படைப்புக்களும்
2.1 ஆர்.எம்.நௌஸாத் பற்றிய அறிமுகம்
2.2 ஆர்.எம்.நௌஸாத்தின் இலக்கியப் படைப்புக்கள்
2.2.1 வானொலி நாடகங்கள்
2.2.2 சிறுகதைகள்
2.2.3 கவிதைகள்
2.2.4 நாவல்கள்
2.3 ஆர்.எம்.நௌஸாத் தனது இலக்கியப் படைப்புக்களினூடாகப் பெற்ற ;
வெற்றிகள்
2.4 ஆர்.எம்.நௌஸாத்தின் இலக்கியப் படைப்புகள் பற்றி வெளியான
விமர்சனங்கள்
2.0 ஆர்.எம்.நௌஸாத்தும் அவருடைய இலக்கியப் படைப்புக்களும்.
2.1 ஆர்.எம்.நௌஸாத் பற்றிய அறிமுகம்.
ஆர்.எம்.நௌஸாத் எம்.எஸ்.ஹாஜறாவுக்கும் இஷட்.கே.றாசிக்காரியப்பருக்கும் மகனாக 1959.09.05 இல் சாய்ந்தமருதில் பிறந்தார். இவர் கல்முனை ஸாஹிறா கல்லூரியில் கற்றார். 1975 இல் பாடசாலை வெளியீடான “அம்பு” சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியதன் மூலமே எழுத்துலகுக்கு உட்பிரவேசித்தார்.
ஒரு தபால் அதிபராக இலங்கையின் பற்பல பகுதிகளிலும் சுமார் 31 வருடங்கள் சேவையாற்றிய பின்பு தற்போதுää அவருடைய சொந்த ஊரான சாய்ந்தமருது தபாலகத்தில் பொறுப்புத் தபாலதிபராக கடமை புரிகின்றார். இவர் ‘அம்பு’ சஞ்சிகையில் எழுதிய வாசகர் கடிதத்திற்குப் பிறகு துணுக்குகள்ää கேள்வி-பதில்ää உருவக்கதைää குறுங்கதை ஒன்றிரண்டு சிறுகதைகள் எழுதினாலும் 1990 இற்குப் பின்னர் ஒன்றும் எழுதாமல் ‘இலக்கிய நெடுந்தூக்கம்’ கொண்டிருந்தார். இக்காலப்பகுதியில் படிப்புää தொழில்ää திருமணம்ää குடும்பம் என்று அவருடைய வாழ்க்கை போயிற்று. இருப்பினும் அவர் தோன்றும் போதெல்லாம் ஏதாவது எழுதிக்கொண்டும் அதனை செவ்வை பார்த்துக் கொண்டும் இருந்தார். அதிகமாக புத்தகங்களை வாசிக்கின்ற பழக்கத்தையும் கொண்டிருந்தார்.
ஆர்.எம்ääநௌஸாத் 2000 ஆம் ஆண்டில் ‘வல்லமை தாராயோ’ எனும் சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டார். அதிலிருந்து மீண்டும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவர் தனி ஒரு துறையில் மட்டும் நின்று எழுதாமல் வானொலி நாடகங்கள்ää கவிதைகள்ää கட்டுரைகள் முதலானவற்றையெல்லாம் எழுதுகின்ற தனித்திறமையினை கொண்டவராக திகழ்கின்றார். இவர் ‘வல்லமை தாராயோ’ எனும் சிறுகதைத் தொகுதியையும் ‘வெள்ளி விரல்’ என்னும் ஒரு சிறுகதைத் தொகுதியினையும் வெளியிட்டுள்ளார்.
இவர் 12 வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். இந் நாடகங்கள் இலங்கை முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்டன. ‘தூது’ என்னும் சிற்றிதழில் சில கவிதைகளையும் எழுதியது மட்டுமல்லாது அவ்விதழின் ஆசிரியராகவும் கடமை புரிந்துள்ளார். இவர் ‘வானவில்லிலே ஒரு கவிதை கேளு’ää‘பள்ளி முனைக்கிராமத்தின் கதை’ää‘நட்டுமை’ ஆகிய நாவல்களை இலக்கிய உலகுக்கு தந்துள்ளார். இன்னும் சில நாவல்களை எழுதியும் வருகின்றார்.
இவருடைய இலக்கியப்படைப்புக்கள் தமிழுக்கு அணி சேர்க்கும் என்று கூறலாம். இவர் ஈழத்து எழுத்தளர்களுள் பல துறைகளிலும் ஈடுபாடு காட்டிக் கொண்டு வருபவர் என்று கூறலாம். இவர் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட எழுத்தாளர்களுள் முக்கிய இடத்தைப் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.
2.2 ஆர்.எம்.நௌஸாத்தின் இலக்கியப்படைப்புக்கள்
ஆர்.எம்.நௌஸாத் அவர்கள் 21ஆம் நூற்றாண்டு எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தபால் துறையில் 31 வருட காலமாக சேவை புரிந்து வரும் ஓருவர். வேலை நேரங்கள் தவிர்த்து ஏனைய நேரங்களில் தனது எழுத்துக்களின் மூலமாக அழகியää இரசனை மிக்க பல இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவர் வானொலி நாடகங்கள்ää சிறுகதைகள்ää கவிதைகள்ää நாவல்கள் என பல்வேறு இலக்கியப் படைப்புக்களைப் படைத்துள்ளார். தனது படைப்புக்களினூடாக வாசகர்களை தனது படைப்புக்குள்ளே இழுத்துச் செல்லக்கூடிய ஆற்றலை சிறப்பாக பெற்றுள்ளார்.
இவருடைய படைப்புக்களில் சிறந்த கருää வடிவம்ää பேச்சு வழக்குச் சொற்கள்ää பழமொழிகள்ää இடையிடையே நகைச்சுவை உலவும் வகையில் எழுதியுள்ளார். இவரின் மூலமாக தமிழில் இலக்கியங்கள் கிடைத்துள்ளன என்று கூறுவது பொருத்தமானதாக இருக்கும். ஈழத்து இலக்கியவாதிகளின் பட்டியலில் இவர் பரந்த இடத்தைப் பிடிக்காவிட்டாலும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி இவருடைய இலக்கியப் படைப்புக்களை நோக்குவோம்.
2.2.1 வானொலி நாடகங்கள்
நாம் இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்றே அன்று வானொலி நாடகங்களும் காணப்பட்டன. இதனைப் பற்றி நௌஸாத்
“ஆ… அது ஒரு பொற்காலம்! இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு நேயர்களிடம் இருக்கும் வரவேற்பு அப்போது வானொலி நாடகங்களுக்கு இருந்தன. வானொலி நாடகங்களுக்காக நேயர்கள் காத்துக் கிடந்தனர். வானொலி நாடகங்களின்; குறியீட்டொலி கேட்டே தம் கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது”1
என்று குறிப்பிட்டுள்ளார்.
நௌஸாத்தின் முதல் வானொலி நாடகம் ‘வாக்கு’ முஸ்லிம் சேவையில் 1985 இல் ஒலிபரப்பானது. தொடர்ந்தும் அவர் 1990 வரை சுமார் 12 வானொலி நாடகங்களை எம்.அஸ்ரப்கான் அவர்களின் நெறியாள்கையில் எழுதியுள்ளார். “இந்நாடகங்களில் ‘ஒரு கிராமத்தின் கவிதை’ எனும் வானொலி நாடகம் சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பானது.”2என்று நௌஸாத் குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஆராத்திக் கல்யாணம்ää காகித உறவுகள்ää களவட்டிää ஒரு கிராமத்தின் கவிதைää நினைப்பது ஒன்றுää ஏற்றம்ää நம்பிக்கை முதலான பெயர்களில் வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். இவருடைய சில வானொலி நாடகங்களைப் பற்றி விரிவாக நோக்குவோம்.
முதலில் இவருடைய ‘ஆராத்திக் கல்யாணம்’ என்னும்; நாடகத்தினைப் பற்றி நோக்குவோம். இந்நாடகமானது சீதனத்தைப்பற்றியும் அதிகமாக சீதனத்தை கேட்கும் மாப்பிள்ளை வீட்டாரைப்பற்றியும்ää அதனை கொடுக்காமல் திண்டாடும் பெண் வீட்டாரின் நிலைமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இவ் வானொலி நாடகத்தில் உதுமான் (பெண்ணின் தந்தை)ää சலுகா (மாப்பிள்ளையின் தாய்)ää பைசானா (மாப்பிள்ளையின் தங்கை)ää முஸ்வா முதலாளி (சலுகாவின் கணவனின் நண்பன்) ஆகிய பாத்திரங்களினூடாக கதை நகர்த்தப்பட்டுள்ளது.
சுப்பர் புரோக்கர் எதையும் சுப்பர் என்று கூறுவதனாலேயேää அவனை எல்லோரும் இப் பெயர் கொண்டழைத்தனர். இவன் உதுமானின் மகளை சலுகாவின் மகனுக்கு பெண்ணாக கொண்டு வருகிறான். மாப்பிள்ளை வீட்டார் சீதனமாக வீடுää வளவுää நகைää பணம் ஐம்பதாயிரம் என்று கேட்கää தனது வருமானத்தினால் அத் தொகையை கொடுக்க முடியாது என்று பெண்ணின் தந்தை கூற அப்போது முஸ்வா முதலாளி வந்து நாற்பதாயிரமாக்கி நடுநிலையில் நின்று முடிவினை கூறுகின்றார். மாப்பிள்ளை மோட்டார் வண்டியும வாங்கிக் கேட்க அதனையும் கொடுக்கின்றார்.
உதுமான் பெண் பார்க்க வந்தவர்களை பலகாரம்ääபழம்ää பிஸ்கட்ää கற்கண்டுää குளிர்பானம்ää இனிப்புää வெற்றிலைää பாக்குää பாய்ää படிக்கம்ää சக்கரைää வெடிக்கட்டு முதலானவற்றைக் கொண்டு சிறப்பாக உபசரிக்கின்றார். மாப்பிள்ளையின் தங்கை பைசானா மருதாணியை பெண்ணுக்கு போட்டு விட்டு ஆராத்தியையும் எடுக்கின்றாள். பின்னர் பகல்வர்த்தி கொழுத்துகின்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.
மாப்பிள்ளை வீட்டார்ää வாங்கிக் கொடுத்த மோட்டார் வண்டி பழையதொன்றும்ää உதுமானின் வீட்டுக்கு பூசப்பட்டுள்ள வர்ணப் பூச்சு பட்டிக் காட்டு நிறம் என்றும்ää குறை கூறியதுமில்லாமல் புதிய மோட்டார் வண்டி வாங்கித்தர வேண்டும்ää இளம் நிறத்தில் வீட்டுக்கு வர்ணம் பூச வேண்டும்ää மாப்பிள்ளையின் தங்கைக்கு தங்க நகைகள் போடவேண்டுமென்று நிபந்தனைகளை விதிக்கää அதனை நிறைவேற்ற முடியாமல் வாக்கு வாதங்களில் திருமணம் தடைப்படுகின்றது.
உதுமான் சுப்பர் புரோக்கரைப் பார்த்து “கலியானம் முடியக்கொள என்ட சிறு வால் மட்டும் தான் மிஞ்சும்ää மாப்பிள்ளை என்ன இன்ஜினியரா? ஜிலாக்குத்தரா? கரிக்கட்டி சொத்தைக்கு கொம்பனி சைக்கிள் வேணுமாம் கொம்பனி சைக்கிள்”3என்று கூறுவதனூடாக அவர்களுடைய பேச்சு வழக்கினை அறிந்து கொள்ளலாம். ஆர்.எம்.நௌஸாத் சிறந்த முறையில் பேச்சு வழக்கினை கையாண்டுள்ளார் என்று கூறமுடியும்.
‘காகித உறவுகள்’ என்னும் இன்னொரு வானொலி நாடகத்தினைப் பற்றி நோக்குவோம். இந்நாடகமானது தன்மானத்தை பெரிதாகவும் உயிர் மூச்சாகவும் நினைக்கின்ற குடும்பத் தலைவனைப் பற்றியும் அவனுடைய தன்மானத்தால் மகளுக்கு கேட்கப்பட்டிருந்த திருமணம் தடைப்படுகின்ற துன்பத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இவ் வானொலி நாடகத்தில்; றசாக் மாஸ்டரின் குடும்ப அங்கத்தவர்களே கதாபாத்திரங்களாக காணப்படுகின்றனர். றசாக் மாஸ்டர் (குடும்பத் தலைவன்)ää சுகறா(மனைவி)ää றியாஸ்(மகன்)ää பாத்திமா (மகள்ää இவர் திருமணம் கேட்கப்பட்டுள்ள பெண்)ää ஆதிகா (இளைய மகள்)ää அர்சாத் (மாப்பிள்ளை) ஆகியோர் இந் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக காணப்படுகின்றனர்.
பாத்திமாவை அர்சாத்துக்கு பெண்ணாக கேட்கப்பட்டிருந்தது. அர்சாத்தின் தந்தையார் திருமணத்திற்கு பின்னர் கேட்டிருந்த சீதனக்காசு இருபத்தைந்தாயிரத்தை திருமணத்திற்கு முன்னரே தரும்படி கேட்டதனால்ää றசாக் மாஸ்டரும் அவருடைய மனைவியும் பணத்தை எவ்வாறு கொடுப்பது என்பதனை நினைத்து திண்டாடினார்.
இந்த நேரத்தில் சுகறா தனது கணவனான றசாக் மாஸ்டரைää மாப்பிள்ளை வீட்டில் போய் தவணை கேட்டு வரும்படி கூற தன்மானத்தை பெரிதாக நினைத்து றசாக் மாஸ்டர் அதனை மறுக்கின்றார். சிறிது நேரம் கழிந்த பின் சுகறாää தாய்ää தந்தையை மதிக்காமல் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்த தன்னுடைய மகன் அர்சாத்துடைய வீட்டுக்குச் சென்று பணம் கேட்கää பணத்தை தந்தையை வந்து வாங்கும்படி கூறுகிறான்.
அப்போது சுகறா
“என்னடா சொன்னää வெல பேசிறியாடா? வெல நீயும் ஒரு மகனாடா! அவர்ர மதிப்பு உனக்கு தெரியலடாää கோடி பணம் கொட்டிக் குடுத்தாலும் தன்மானத்தை இழக்காத றஸாக் மாஸ்டர பொஞ்சாதிடா நான்”4
என்று கூறிவிட்டு வீட்டிற்கு செல்கிறார். இதனை அறிந்த றசாக் மாஸ்டர் “மக்குää மாடு என்ட தன்மானம் காத்துல பறக்குது”5 என்று மனைவியுடன் கோபப்படுகிறார்.
மாப்பிள்ளை அர்ஸாத்ää தன்னுடை தந்தையின் சீதனக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திருமணத்தை நடத்துவதற்காகவும் தன்னிடமுள்ள இருபத்தைந்தாயிரம் ரூபாவை றசாக் மாஸ்டரிடம் கொடுத்து தன்னுடைய தந்தையிடம் நீங்கள் கொடுப்பது போல் கொடுக்கவும் என்று கூறää றஸாக் மாஸ்டர் இந்த பணத்தை நான் வாங்கினால் எனது தன்மானத்தை நான் இழந்து விடுவேன் என்று கூறிää அப்பணத்தை வாங்க மறுக்கின்றார். அதனால் மகளுடைய திருமணம் தடைப்பட்டு விடுகின்றது. மகளும் தந்தையின் தன்மானத்தை விற்று தனக்கொரு வாழ்க்கை தேவையில்லை என்று கூறி தனது விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறாள். இதுவே இக்காகித உறவுகள் என்னும் வானொலி நாடகத்தின் கதையாகும்.
இந் நாடகத்தில் சுகறாää றஸாக் மாஸ்டரின் உரையாடல்களின் மூலமாக அவர்களுடைய பேச்சு வழக்கினை அறியலாம்.
“சுகறா நீ இன்னும் சின்னப்புள்ள மாதிரித்தான் பேசுற. இந்த கல்யாணம் செய்றதுக்குää இந்த மாப்பிள்ளையை எடுக்கிறதுக்கு நாம பட்டபாடு ஒனக்கு தெரியாதா?”
(நௌஸாத்ääஆர்.ääஎம்.ää(1985-1990)ää வானொலி நாடகம்)
“ஏ மகனா?யாருடைய மகன் ஓ மகனா? மகனாம் பெரிய மகன் பெத்து வளர்த்த நன்றி துளி கூட இல்லாம அவன் விரும்பின ஒருத்தியோட….”
(நௌஸாத்ääஆர்.ääஎம்.ää(1985-1990)ää வானொலி நாடகம்)
நௌஸாத் அவருடைய வானொலி நாடகங்களில் மக்களின் வாழ்வியல் அம்சங்களை பேச்சு வழக்கினூடாக சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.
2.2.2 சிறுகதைகள்
நௌஸாத் ‘வல்லமை தாராயோ’ எனம் சிறுகதைத் தொகுதியினை முதன் முதலாக 2000 ம் ஆண்டில் வெளியிட்டார். இது எட்டுச் சிறுகதைகளை உள்ளடக்கியது. இச் சிறுகதை விமர்சனம்ää மற்றும் இரசனைக்;குறிப்பு எழுதுகின்ற அறிஞர்களால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படாமல் முடங்கி விட்டது. பற்பல இலக்கிய போட்டிகளில் பரிசு பெற்ற 12 சிறுகதைகளைத் தொகுத்து ‘வெள்ளிவிரல்’ என்னும் பெயரில் தொகுதியாக வெளியிட்டார். இது 2001 இல் அரச சாகித்திய விருதையும்ää மாகாண சாகித்திய விருதையும் பெற்றது.
நௌசாத்திடம் சிறுகதைகளில் வார்ப்பு நிலை பற்றி கேட்டபோதுää
“இது விரிவான விடயம். ஒரு சிறுகதையின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்த போதிலும் என்னைப் பொறுத்த வரையிலும் இதுவரை அறியப்படாத தளங்களில் இருந்தும்ää அறியப்பட்ட தளங்களில் உள்ள தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கின்றேன். முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்கிறேன். அப்புறம் அவர் என்னை வாங்காமல் போகமுடியாதபடி செய்து விடுவது எனது கதை தந்திரம்” என்று குறிப்பிடுகிறார்.
இவர் 18ற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவருடைய‘வல்லமை தாராயோ’ எனும் தொகுதியில் மலர்வு 74 உதிர்வு 98ää சாந்திää கனவுப்பூமிää நுஸ்ரீஓம்ää ஸீனத்ää இலகிமாää அணிலே அணிலே! ஓடிவாää நல்லதொரு தூரோகம் ஆகிய சிறுகதைகள் உள்ளன. வெள்ளி வரல் தொகுதியில் தாய் மொழிää வதனமார்ää வெள்ளி விரல்ää விட்டு வடுதலையாகிää வேக்காடுää கல்லடிப்பாலம்ää மீள் கதவுää கால வட்டம்ää தலைவர் வந்திருந்தார்ää நல்லதொரு துரோகம்ää ஸீனததும்மாää சாகுந்தலம் ஆகிய சிறுகதைகள் உள்ளன. ‘வல்லமை தாராயோ எனும் தொகுதியில் வந்துள்ள சில சிறுகதைகள் ‘வெள்ளி விரல்’ எனும் தொகுதியிலும் அமைந்துள்ளது.
இவருடைய சில சிறுகதைகளைப்பற்றி விரிவாக நோக்குவோம். ‘வெள்ளி விரல்‘ எனும் சிறு கதையானது மக்களிடம் காணப்படுகின்ற பேய்ää பிசாசுää சூனியம் முதலான நம்பிக்கைகளால் பூசாரிமாரை நம்பிப் போவது அவர்கள் மந்திரம் என்ற பேரில் பல பொருட்களை வாங்கிவரும்படி கேட்டுää அதனைக் கொண்டு மந்திர உச்சாடனங்கள் செய்து மக்களை நம்பவைப்பதுääஇளம் பெண்களுடன் பூசாரிமார் தகாத முறையில் நடந்து கொள்வதனையும் சுட்டுகின்றது.
இச்சிறுகதையில் “ம்மா……உன்ட பேத்திக்குப் பெரிசா ஒன்டுமில்ல வருத்தம்.ஆனா இவளுக்கு தின்கி;ற சாமான் ஒண்டல பில்லி சு10னியம் செஞ்சி உள்ளுக்கு குடுத்திருக்கு. அது உள்ளுக்கு இருக்குற மட்டுக்கும் இப்படித்தான் ஆண்களின் உடம்பு பட்டால் தீப்பற்றி எரியும். அதை வெட்டி விட்டால் தான் இது அடங்கும் குளிராகும்”7“இதெல்லாம் எங்க பாபா தேடி எடுக்கிற நாங்க”8ஆகிய பேச்சு வழக்கினை அறியலாம்.
நௌஸாத்தின் ‘மீள்கதவு’ என்னும் சிறு கதை யுத்தத்தில் தனது கையை இழந்த ஒருவன் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் அங்கயீனருக்கான பணத்தைப் பெறää அலுவலகரிடம் சென்று அவமானப்படுவதனையும்ää அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பணத்தைப் பெற அவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டிய தேவைக்குள்ளாவதை எடுத்துக்காட்டுகின்றது.
இச் சிறுகதையில் வினாக்களை அலுவலகரிடம் கேட்பது போலவே இதன் ஆரம்பம் காணப்படுகின்றது. அதிகாரிகள் சிங்களம்ää தமிழ் இரண்டு மொழிகளையும் பேசுவதனையும் காணமுடிகின்றது.
“மே…. மச்சான் பொட்டக் என்டக்கோ… மொனஹரி கியனவா முக்குத் தேருன்நே…”9
இவருடைய சாந்;தி எனும் சிறுகதையானது திருமணம் முடித்த இளம் தம்பதியினருக்கு இரண்டு வருடங்களின் பின் ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கின்றது. அக் குழந்தைக்கு தந்தை ஒரு பெயரை சூட்ட நினைக்க தாய் வேறு ஒரு பெயரை சு10ட்ட நினைக்கிறாள். இதனால் குடும்பத்தில் ஏற்படுகின்ற சிறு பிரச்சினைகளும் காட்டப் படுகின்றது.
“நாமென்ன அறபா கதைக்கம் அறபுல பெயரு வைக்க”10“ப்பிடிப் பெயரு நம்மட ஆக்களுக்கு இல்லையே மாஸ்டர். நல்ல இஸ்லாமான பெயரப் பார்த்து வெய்ங்களன். இது என்ன சாதிப்பேரு… சாந்தின்டா சிவாஜிர படம்”11
ஆகிய நயமிக்க பேச்சினை நௌஸாத் கையாண்டுள்ளார்.
2.2.3 கவிதைகள்
ஆர்.எம்.நௌஸாத் கவிதைகள் சிலவற்றையும் எழுதியுள்ளார். அந்த வகையில் 1982ம் ஆண்டிலேயே ‘தூது’ எனும் சிற்றிதலுக்கு ஆசிரியராக இருந்தார். 1-16 இதழ்கள் வரைää அவருடைய நண்பர் றபீக்குடன் சேர்ந்து வெளியிட்டார். தூதில் ஒரு சில கவிதைகளையும் எழுதியுள்ளார்.
கவிதைத் துறையில் தங்களுடைய படைப்புக்களைனப் பற்றி கேட்ட போது
“1985 களில் போர்க்காலச் சு10ழலில் உற்பவித்த ரோணியோக் கவியேடுகளில் அன்புடன் இன்னாலில்லாஹ்ää தீவை என்றெல்லாம் தூள் கிளப்பிக் கொண்டிருந்தாலும் ‘தூது’ என்ற பெயரில் 16 இதழ்களை அச்சில் கொணர்ந்தேன். இது ஒரு கவிதைச் சிற்றிதழ் தூதில் ஆசிரியர் தலையங்கங்களை குறும்பாää வெண்பா வடிவங்களில் எழுதிப் பரிசோதித்தேன். பின்னர் ஹைக்கூ கவிதைகளுக்காகவே ‘புள்ளி’ என்ற சிறிலங்காவின் முதல் ஹைக்கூ கவியேட்டை நண்பர் றபீக்குடன் இணைந்து கொணர்ந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தூதில் வெளியாகிய இவருடைய சில கவிதைகளை நோக்குவோம்ää 1985ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகிய தூதில் எட்டாவது இதழில் ‘யமுனைக் கரையில் நுரைப்பூக்கள்’ என்னும் கவிதையினை எழுதியுள்ளார். இயற்கையிடம் கேள்வி கேட்பதாகவும் இறுதியில் பதிலை அவர் கூறுகின்ற பாங்கில் இக்கவிதையினை புணைந்துள்ளார். இயற்கையிடம் பேசும் போது ஒரு பெண்ணிடம் பேசுவது போல் பாவனை செய்து பேசுகிறார். அக்கவிதையின் சில வரிகள் பின்வருமாறுää
“ராதே….
கரு
மேகம் மறைத்து விட்ட
ஒரு
துண்டுப் பிறை நிலவாய்
உன்
வெள்ளைச் செவி கூடச்
சுற்று
சிவந்திருப்பதேனடி”12
இவருடைய அடுத்த கவிதை தூதின் 13வது இதழில் 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டது. இது‘நமோ… நமோ…விடுதலைப் புலிகள்’ என்ற கவிதையாகும். இக் கவிதை விடுதலைப்புலிகளினுடைய ‘தனிநாட்டு’ கோரிக்கையை வைத்து புனையப்பட்டுள்ளது. இதனை பின்வரும் கவி வரிகள் புலப்படுத்தும்.
“பாதி மாங்காய் வேண்டி
கத்தி தூக்கிய கணங்கள்…
போதி மரம் வீழ்த்த
போதித்த உபதேசங்கள்…
களப்பலி வீரரின்
சாகசக் கதைகளால்
சின்ன மனசுகளில் ஊன்றிய
வீரமுளைகள்…”13
1988 ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான தூதில் ‘அபாபீல்களும் யானைப் படைகளும்’ எனும் ஒரு கவிதையையும் நௌசாத் எழுதியுள்ளார். இனத்துவேசம்ää இனப்பாகுபாடு முதலானவற்றால் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகளையும்ää துயரத்தையும் உள்ளடக்கியதாக இக் கவிதை புனையப்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டும் எமக்கு சுதந்திரமான வாழ்வு கிடைக்கும் என்று ஆறுதல் கூறுவதாகவும் இக் கவிதை அமைக்கப்பட்டுள்ளது. ‘இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான்’ என்று இக்கவிதையின் ஆரம்பம் காணப்படுவது முஸ்லிம் மக்களுடைய மனதில் நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது. இக்கவிதையின் சில வரிகளை நோக்குவோம்ää
“உம்மாவும்ää ராத்தாவும் முக்காடிட்டு…
ஒரே வீட்டில் ‘இத்தா’இருப்பார்கள்…
கடைக்குப் போன காக்காவைக்
கடத்திப் போன சேதியும் வரும்
துப்பாக்கிக் குண்டுகளால் அவருக்குத்
‘தல்கீன்’ ஓதிய ஓசையும் கேட்கும்”14
“எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்
பொறுங்கள்….
எங்கள் ‘அபாபீல்கள்’ இப்போது தான்
தம் சொண்டுகளைக் கூராக்கவும்
இறக்கைகளை வலிமைப்படுத்தவும்
கிழக்கு நோக்கிப் பறக்கின்றன…’’
(நௌஸாத்ääஆர்.ääஎம்.ää( மார்ச் 1998)ää தூதுääப.6.)
2.2.4 நாவல்கள்
ஆர்.எம்.நௌஸாத் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிலே நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில குறுநாவல்கள்.இவருடைய முதல் குறுநாவல் ‘வானவில்லிலே ஒரு கவிதை கேளு’ என்பதாகும். இந்நாவலின் வார்ப்புää கல்லடிப் பாலத்தில் உருவானது. ஈழநாதம் பத்திரிகையில் 2005 தொடக்கம் ஏழு தொடர்கள் ஏழு வர்ணங்களாக வெளியானது. இக் குறு நாவலில்ää ஏழு வர்ணங்களின் சிறப்பினை நாவலாசிரியர் முதலில் கூறிவிடுவது தனிச்சிறப்பாகும்.
இக்குறுநாவலின் கதையானது தக்க வேலை கிட்டாத பட்டதாரி பெண் இருவருக்கு வங்கியில் வேலை கிடைப்பதும்ää பயிற்ச்சிக்காக வங்கிக்கு சென்று வருபவர்களின் வாகனங்கள் மோதி வெடிப்பதால் மரணிக்கின்ற செய்தியினையும் கொண்டதாக புனையப்பட்டுள்ளது.
“இந்தப் பயங்கரக் கோரத்தையும்ää எரிந்த பயங்கர கோலத்தையும் மேலே வர்ணிக்கப்பட்ட வானவில் மட்டும்ää பார்த்துக் கொண்டிருந்தது. தனிமையாக அதன் வர்ணங்களும் கலைந்து கொண்டிருந்தன.வெறும் வெள்ளைக் கனவுகளாக …”15 என்று இக் குறுநாவலின் முடிவினை அமைத்துள்ளார்.
இவரின் இரண்டாவது குறுநாவல்; “பள்ளி முனைக் கிராமத்தின் கதை” என்பதாகும். இது 2003 தொடக்கம் முஸ்லிம் குரலில் தொடர்ச்சியாக 40 அங்கங்களாக பிரசுரமானது. இந் நாவல் 1990 களில் தென்கிழக்கின் யுத்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அக்காலத்து அரசியல் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக் கிராம மக்களின் வாழ்வியல் பற்றிய இக் குறுநாவல்ää பின்னர் தனி ஒரு முழு நாவலாக ‘கொல்வதெழுதல் 90’ என்ற பெயரில் வெளியிடப்படவுள்ளது.
நௌஸாத்தின் மூன்றாவது முழு நாவல் ‘நட்டுமை’ ஆகும். இது கிழக்கு மண்ணில்; 1930 களில் வாழ்ந்த விவசாய மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது. கிழக்கு முஸ்லிம்களின் வட்டார வழக்கு பேச்சோசையில் ஒலிக்கும் இந் நாவல் கடல் கடந்து தமிழ் நாட்டில் சுந்தரராமச்சாமியின் நினைவு நாவல் போட்டியிலும் முதற் பரிசினைப் பெற்றது. 2009ல் காலச்சுவடு வெளியீடாக வந்தது.
இவருடைய நான்காவது குறுநாவல் ‘சாந்தமாமா’ஆகும். இது இன்னும் பிரசுரமாகாமல் உள்ளது. இவருடைய ஐந்தாவது நாவல் ‘யுத்த பிக்குகள்’ என்பதாகும். இது தற்போது உருவாக்கத்தில் உள்ளது.
நௌஸாத்திடம் நாவல் துறை முயற்;சிகள் பற்றிக் கேட்டபோதுää
“முஸ்லிம் குரலில் வெளியான ‘பள்ளி முனைக் கிராமத்தின் கதை’ நாவலின் தளம் ஒலுவில் கிராமத்தில் போடப்பட்டது. பரிசு பெற்ற ‘நட்டுமை’ நாவலின் கரு சம்மாந்துறையின் வயல் வெளிகளில் இருந்து கிடைத்தது. ஈழநாதம் இதழில் வெளியான ‘வானவில்லிலே ஒரு கதை கேளு’ குறுநாவலின் வார்ப்பு கல்லடிப் பாலத்தில் உருவானது. ‘சாந்தமாமா’ குறுநாவல் தீகவாவி விகாரையில் கருக் கொண்டது. இப்படிப் பல தளங்கள் பல கருக்கள் எனினும் இவை வடிவத்தாலும் செதுக்கல்களாலும் ஒரு போதும் முழுமையுறுவதாயில்லை. ஒன்றுமே எனக்கு நிறைவு தருவதாயில்லை.’’16 என குறிப்பிட்டுள்ளார்.
2.3 ஆர்.எம்.நௌஸாத்தினுடைய இலக்கியப் படைப்புக்களினுடாகப் பெற்ற
வெற்றிகள்.
நௌஸாத்தின் படைப்புக்களுக்கு கிடைத்துள்ள வெற்றிகள்; மிகவும் பாராட்டிற்குரியது. இவருடைய பெரும்பாலான சிறுகதைகள் விருதுகளையும் முதலாம்ää இரண்டாம் பரிசுகளையும் பெற்றுள்ளன. இவருடைய நாவல்கூட கடல் தாண்டி இந்தியாவிற்கு சென்று முதற் பரிசினையும் பெற்றுக் கொண்டது. இவர் பெற்ற வெற்றிகள் பின்வருமாறுää
• 1998 இல் ‘தினக்குரல்’ நாளிதழும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடக போட்டியில ‘காகித உறவுகள்’ என்னும் வானொலி நாடகத்திற்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
• ‘ஒரு கிராமத்தின் கவிதை’ என்னும் வனொலி நாடகம் முஸ்லிம் சேவையில் 25 தடவைகள் ஒலிபரப்பானது. இது கூட அவருடைய வானொலி நாடகத்திற்கு கிடைத்த வெற்றியே.
• 1998 இல் ‘நல்லதொரு துரோகம்’ என்ற என்ற கிறுகதைக்கு பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்கம் முதற் பரிசாக தங்கப்பதக்கம் அளித்தது.
• இவரது ‘சாகும்-தலம்’ சிறுகதை தமிழ்நாட்டு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற் பரிசினைப் பெற்றது.
• ‘கனவுப்பூமி’ என்ற இவருடைய சிறுகதைää இலங்கை சு10ழல் பத்திரிகையாளர் சங்கம் அகில இலங்கை ரீதியியல் நடத்திய சிறுகதைப் போட்டியில’ சிறப்புச் சான்றிதழை 1994ல் பெற்றது.
• 2008இல் ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை நடத்திய புலோலியூர்ääக.சதாசிவம்ää ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்;டியில் ‘தாய்-மொழி’சிறுகதை முதற் பரிசினைப் பெற்றது.
• 2009இல் ‘ஞானம்’ சஞ்சிகை நடத்திய செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞபகார்த்த சிறுகதைப் போட்டியில் ‘வதனமார்’ என்ற சிறுகதை ஆறுதல் பரிசைப் பெற்றது.
• 2008இல் கனடா ஒட்டோவா தமிழ்விழி இணைய இதழ் நடத்திய (புலம் பெயராதோருக்கான) சிறுகதைப் போட்டியில் ‘விட்டு விடுதலையாகி…’ எனும் சிறுகதை மூன்றாவது பரிசினைப் பெற்றது.
• 2008இல் அக்கரைப்பற்று ‘தலைவர் அஸ்ரப் மன்றம்’ நடத்திய இலக்கியப் போட்டியில் ‘வேக்காடு’ என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது.
• 2007இல் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய புலோலியூர். க. சதாசிவம் ஞாபகார்த் சிறுகதைப் போட்டியில் ‘கல்லடிப்பாலம்’ என்ற சிறுகதை ஆறுதல் பரிசினைப் பெற்றது.
• 2008இல் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய புலோலியூர். க. சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் ‘மீள்தகவு’ என்ற சிறுகதை மூன்றாம் பரிசினைப் பெற்றது.
• 2008 இல் ஈழநாதம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘காலவட்டம்’ என்ற சிறுகதை முதற்; பரிசினைப் பெற்றது.
• 1990இல் யாழ் மருதாணி கலை இலக்கிய வட்டம் தன் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘ஸீனத் தும்மா’ என்ற சிறுகதை இரண்டாம் பரிசினைப் பெற்றது.
• 2011இல் ‘வெள்ளி விரல்’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு அரச சாகித்திய விருதும்ää கிழக்கு மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்ட சிறப்பினை நௌசாத் கொண்டுள்ளார்.
• இவருடைய ‘நட்டுமை’ என்னும் நாவல்ää தமிழ் நாடு ‘காலச்சுவடு’ இதழ் நிறுவனர் சுந்தர ராமசாமியின் 75வது இலக்கியப் போட்டியில் முதற் பரிசினைப் பெற்றது.
2.4 ஆர்.எம். n;நளஸாத்தின் இலக்கியப் படைப்புக்கள் பற்றி வெளியான விமர்சனங்கள்
நௌஸாத்துடைய இலக்கியப் படைப்புக்களான வானொலி நாடகங்கள்ää கவிதைகள்ää சிறுகதைகள்ää நாவல் ஆகியவை பற்றி வெளியான விமர்சனங்களை பின்வருமாறு நோக்குவோம்ää
இவருடைய ‘வெள்ளி விரல்’நூல் பற்றியும் அதற்கு கிடைத்த சாகித்திய விருதுகளைப் பற்றியும் விமர்சனங்களில் கூறப்பட்டுள்ளன.
“சாய்ந்தமருதைச் சேர்ந்த தீரன் ஆர்.எம். நௌஸாத் எழுதிய வெள்ளி விரல் என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுதி தமிழ் நாடு காலச்சுவடு பதிப்பாக வெளிவந்தது. இந்நூலுக்கு ஒரே ஆண்டில் தேசிய அரச விருதும்ää கிழக்கு மாகாண சாகித்திய விருதும் கிடைத்துள்ளது.”17
நௌஸாத்தைப் பற்றியும் அவருடைய கதை எழுதுகின்ற திறமையினையும் பற்றி நிஸாம் என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“தான் வாழும் சமூகக் கட்டமைப்பின் கூறுகள் மீதான தீவிரமான உணர்வுகளையுடைய ஒரு படைப்பாளியும் ஒரு வித்தியாசமான கதை சொல்லியும் ஆவர். அவர் தன் கதைகளுக்கு போர்த்தியுள்ள ஒரு ‘மாய நடையும்’ தன் கதைகளில் கையாண்டுள்ள நவீன உத்திகளும் தேர்ந்தெடுத்துவித்தியாசமான கதைக்களங்களும் பட்டவர்த்தமான உரையாடல் மொழிகளும் நம்மை அவரது கதைகளோடு மிகவும் ஒன்றிக்கச் செய்து விடுகின்றது”
(நிஸாம்ääஎமää;ரீääஏ.ää(2011)ää வெள்ளி விரலின் முன்னுரைää ப.13)
உமாவரதராஜன் நௌஸாத்தைப் பற்றிää
“வாசகர்களில் தன் உணர்வுகளைத் தொற்ற வைக்கும் இந்த வெற்றிää எழுத்தாளர்களுக்கு இலகுவில் கிட்டுவதில்லை. இதனை இவர் சிறப்பாக கையாண்டுள்ளார் என்பது எனது அபிப்பிராயமாகும.;”18
என்று குறிப்பிட்டுள்ளார்.
நட்டுமை நாவலைப் பற்றி ஏ. எம். ஏம். ஜாபிர் என்பவர் பின்வருமாறு விமர்சித்துள்ளார்.
“நட்டுமை நாவலில் உருவாக்கப்பட்டுள்ள பாத்திர வார்ப்புக்கள் பற்றி தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். பெரிய போடியார்ää சின்னப் போடியார்ää முகம்மது அனிபா போன்ற யதார்த்த பாங்கிலான பாத்திரங்கள் இயல்பாக உரையாடி நாவலை வாசித்து முடிந்த பின்னரும் நம்மோடு வாழ்கின்றனர். நட்டுமைää கிராமிய மணத்தை மனசில் எழுப்பும் எழுத்து மழை மட்டுமல்ல. அது கிராமிய அலைகளால் இரையும் நாவல் கடல்! காலத்தால் பேசப்படும் இந் நாவலைத் தந்த தீரன் ஆர். எம். நௌஸாத் நாவலாசிரியருக்கு நமது பாராட்டுக்கள்.”
(ஜாபிர்ääஏääஎம்ääஎம்.ää(2010.12.19)ää‘கிராமிய அலைகளால் இரையும் கடல்’ää நவமணிää ப.06)
நவாஸ் சொளபி ‘நட்டுமை நாவலைப்பற்றி பின்வருமாறு விமர்சித்துள்ளார்.
“குறிப்பிட்ட கால கதை மாந்தர்களின் வாழ்வியல் அம்சங்களில் அவர்களது விவசாய நிலங்கள் தவிர்ந்த பாய் இழைத்தல்ää மண்பானைää சட்டி வேலைகள்ää பனை ஓலைப் பெட்டி பின்னுதல்ää கிடுகு இழைத்தல்ää கைப்பணிப் பொருட்;கள் என்று குடிசைத் தொழில் அம்சங்கள் எதுவும் நட்டுமையில் கொண்டுவரவில்லை. இதற்கான கதைக்களங்கள் பல இடங்களில் தோற்றுவிக்கும் நட்டுமை இவ்விடயங்களை ஓரிடத்திலும் பேசாதுää கை நழுவ விட்டிருக்கிறது.
(நவாஸ் சௌபிää (2010.08.22)ää ‘தீரன் ஆர்.எம்.நௌஸாத்தின் ‘நட்டுமை’ கிராமியப் பண்பாடுகளின் நூதனசாலை’ தினகரன் வார மஞ்சரிää ப.21)
நட்டுமை நாவலைப்பற்றி நூறுல்ஹக் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“நட்டுமை என்ற தலைப்பு தொடக்கம் இந் நாவல் பாத்திரங்கள் உரையாடல் முறை வரை தென் கிழக்கு முஸ்லிம்களிள் பயன்படுத்தும் வழக்கு மொழி நடையில் கையாளப்பட்டிருப்பது இந் நாவலின் சிறப்புக்களில் பிரதானமான ஒரு விடயமாகும்.”19
இவ்வாறு ‘நட்டுமை’ நாவல் பற்றியும் நௌஸாத்தின் திறமையினைப் பற்றியும் சிறுகதைத் தொகுதிகளைப் பற்றியும் விமர்சனங்கள் வந்துள்ளன.
அடிக்குறிப்புக்கள்
01. ஜெகாää (2013.11.03)ää‘நாவல் எழுதுவது தனியொரு நுட்பம்’ää தினக்குரல்
மஞ்சரிää ப.29
02. மேலதுää ப.29
03. நௌஸாத்ääஆர்ääஎம்.ää(1985-1990)ää‘ஆராத்திக் கல்யாணம்’ääவானொலி நாடகம்
04. நௌஸாத்ääஆர்ää எம்.ää (1985-1990)ää ‘காகித உறவுகள்’ää வானொலி நாடகம்
05. நௌஸாத்ääஆர்ää எம்.ää (1985-1990)ää ‘காகித உறவுகள்’ääவானொலி நாடகம்
06. ஜெகாää (2013.11.03)ää ‘நாவல் எழுதுவது தனியொரு நுட்பம்’ääதினக்குரல்
மஞ்சரிää ப.29
07.நௌஸாத்ääஆர்ää எம்.ää (2011)ääவெள்ளி விரல்ää ப.40.
08. மேலது;ää ப.41.
09. மேலதுää ப.73.
10. நௌஸாத்ääஆர்ää எம்.ää (2000)ää வல்லமை தாராயோää ப.47.
11. மேலதுää ப.55.
12.நௌஸாத்ää ஆரää;எம்.ää (ஆசிரியர்)ää (ஜுலைää1985)ää‘யமுனைக் கரையில்
நுரைப் பூக்கள்’ää8ஆவதுதூது சிற்றிதழ்ää ப.02.
13.நௌஸாத்ääஆர்ää எம்.ää (ஆசிரியர்)ää (ஜுலை – அக்டோபரää;1987)ää‘நமோ..
நமோ..விடுதலைப் புலிகள்’ää13ஆவது தூது சிற்றிதழ்ää ப.03.
14.நௌஸாத்ää ஆர்ää எம்.ää (ஆசிரியர்)ää (மார்சää;1988)ää‘அபாபீல்களும் யானைப்
படையும்’ää 14ஆவது தூது சிற்றிதழ்ää ப.06
15. நௌஸாத்ääஆர்ää எம்.ää (மேää2005)ää வானவில்லிலே ஒரு கவிதை கேழுää ப.18.
16. நூறுல் ஹக்ääஎம்ääஎம்ää எம்.ää (2011;.02.27)ää‘போட்டிகளில் பரிசு பெறாது திரும்பி
வந்த எனது சிறுகதைகளை அதிகமாக நேசிக்கின்றேன்’ää செந்தூரம்ää ப.05.
17. (…………)ää (2012.12.15)ää‘வெள்ளி விரல் நூலுக்கு இரு சாஹித்திய
விருதுகள்’ääஎங்கள் தேசம்ää ப.21.
18. நிஸாம்ää எம்ää ரீää எம்.ää (2010.10.24)ää‘ஆர். எம். நௌசாத்தின் ‘நட்டுமை’
நடந்த காலத்தின் நிழல் பிரதி’ää ஞாயிறு தினக்குரல்ää ப.31.
No comments:
Post a Comment