காலசுவடு இலிருந்து ஷாலினி தரும் மின்னஞ்சல்-----------
கீழ்வருவது 'சன்டே இந்திய'னில் வெளிவந்த நட்டுமை நாவலுக்கான மதிப்புரை. இதை முகநூலிலும் பதிந்துள்ளோம். முதல் மின்னஞ்சலில் குறிப்பிட மறந்துவிட்டேன்..
நட்டுமை - ஆா். நௌஸாத்
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1930களில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் கிராம விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதில் பிரச்னை ஏற்படுகிறது, இந்தப் பின்புலத்தில், முஸ்லீம் மக்களின் பண்பாடு, வாழ்முறை, சமயநம்பிக்கைகள், பள்ளிவாசல் கொடியேத்து விழா, திருமணச் சடங்குகள் முதலானவற்றை அந்த மண்ணின் வாசத்துடன் நட்டுமை யதார்த்தமாகச் சித்திரிக்கிறது. தண்ணீர் களவையும், களவு ஒழுக்கத்தையும் குறிக்கும் நட்டுமை என்ற வட்டாரச் சொல்லால் நாவல் பிம்பப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி: த சன்டே இந்தியன், 10 பிப்ரவரி 2013
2013/2/27 Shalini <shalini@kalachuvadu.com>
No comments:
Post a Comment