நூல்விமர்சனம்- நட்டுமை-
கதம்பம் -- உயிரெழுத்து - வீரகேசரி ---17.10.2010
பேச்சுமொழியினை எழுத்திலே கொண்டு வந்து ஜீவனூட்டுவது எப்படி என்பதைஇந்நாவல் மூலம் கற்றுக் கொள்ளலாம்.
வீ.எஸ். நவமணி
ஆசிரியர். ஆர்.எம். நௌஸாத்
முகவரி- இல 1 பிரதான வீதி சாய்ந்தமருது.01
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்.
வுpலை ருபா-120.00 (இந்திய விலை)
-அது என்ட மகன் சின்னப்Nபுhடியார்ர புள்ள.. வ்வ்வாயப் பொளக்காதிங்க வட்டான.. நான் செல்றதுதான் மெய்.. அல்லா அறியஅது மம்மனிவாட புள்ளதான்.. அதுக்காகத்தான் நான் காணி எழுதித் தந்த.. புள்ளயப் பாத்த ஒடன.. அதுக்க முகம்மதனிபா எண்டு பேரு வெய்க்கச் சென்ன…
-எ..எப்பிடி…….- திகிலுணர்வில் பயந்து போய்க் கேட்டார் மீராவட்டானை..
-எப்பிடியா… நட்டும போயிரிக்கி வட்டான…
-ந்ந்நட்டுமையா…? இடி விழுந்தாற் போல் அதிர்ச்சியடைந்தார் மீராவட்டானை.. (பக்கம் 147)
இந்த நாவலின் தலைப்பான மட்டக்களப்பு வழக்குச் சொல்லான நட்டுமை என்பதன் பொருள் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நட்டுமை போயிருக்கு என்றால் வயல் நீர் களவாக அடுத்த வயலுக்குள் இறங்கியிருக்கிறது என்று பொருள்.. ஆண்பெண் இடையிலான கள்ள உறவைக் குறிப்பதற்கும் இச்சொல் உருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது. (பக்கம்11) எனக் குறிப்பிடுகின்றார் எம்ஏ நூமான் தன் முன்னுரையில்…
சுpறிய ஒரு எளிமையான கதைக்கருதான். அகமதுலெவ்வை என்னும் ஒரு பெரிய போடியார் அவரது மகனான மம்மனிபா எனப்படும் முகம்மது அனிபா திருமணமாகாத இளைஞனான இவன் வழமைபோலவே மைனர் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றான்.. போடியார் வீட்டுப் பணியாளான மம்மலி எனப்படும் முகம்மது அலியின் மனைவி யம்னாவுடன் அவனுக்கு கள்ளத் தொடர்பு (நட்டுமை) இருந்து வருகிறது.
வுட்டவிதானையாகிய மீராவட்டானை என்றழைக்கப்படும் மீராமுகைதீனுக்கு செய்னம்பு என்று ஒரு மகள். இவள் மீது மம்மனிபாக்கு ஒருதலைக்காதல்.. ஆனால் செய்னம்புவோ தன் முறை மாப்பிள்ளையான உமறுலெவ்வையை விரும்புகின்றாள்..உமறுலெவ்வை மீராவட்டானையின் தங்கைமகள். முறையற்ற உறவினால் பிறந்தவன். உமறுலெவ்வையைப் பெற்றெடுத்து மீராவட்டானையிடம் ஒப்படைத்து விட்டு அலரிக்காய் தின்று உயிர்துறந்து விடுகிறாள் அவன்தாய்.
மம்மனிவாக்கும் உமறுலெவ்வைக்கும் செய்னம்பு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு வயல்வெளிகளுக்கு நீர்ப்பாய்ச்சல் பிரச்சினையாக ஆரம்பித்து அடிதடிகளும் கொலைகளும் தற்கொலைகளுமாக முடிவடைகின்றது. மம்மனிவா மம்மலியாலேயே குத்திக் கொல்லப்படுகின்றான். மம்மலி நஞ்சுண்டு உயிர்துறக்கின்றான்.. யம்னா நீர்நிலையில் பாய்ந்து உயிர்விடுகின்றாள்.
யும்னாவுக்குப் பிறந்த பிள்ளையின் தகப்பன் மம்மனிபாதான் என்ற உண்மை கடைசியில் வெளிப்படுகிறது.. பெரியபோடியார் இதனை ஏற்றுக் கொள்கிறார். தேவையான ஒழுங்குகளைச் செய்கின்றார். உமறுலெவ்வைக்கும் செய்னம்புவுக்கும் திருமணம் நடைபெறுகின்றது. இப்படிக் கதை போகின்றது..
இந்தக்கதை எங்கும் எக்காலத்திலும் நடைபெறலாம். இதேமாதிரியான கதைகள் எத்தனையோ வெளிவந்துள்ளன. ஆனால்….
இந்த ஆனால் சாதாரண ஆனால் அல்ல.. அழுத்தம்திருத்தமான ஆனால்..
கதைஆரம்பிக்கும் போதே குறிப்பிடும் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தாறாம் வருடத்துக்கு மட்டக்களப்பு உம்மாந்துறை என்ற முஸ்லிம் விவசாயக் கிராமத்துக்கு கொண்டு போகிறாரே பாருங்கள்…ஆர்.எம். நௌஸாத்.. காலத்தை ஊடறுத்துச் செல்லும் இந்த அற்பதத்தைத்தான் எல்லோராலும் செய்ய முடியாதென்கிறேன்.
வுட்டாரவழக்கு நாவல்கள் மண்வாசனைக் கதைகள் என்றெல்லாம் வந்துகொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்திலே அவற்றுக்குமிகச் சிறந்த உதாரணமாக இந்த நாவலைத் தயக்கமின்றிக் காட்டலாம்..
கிழக்குமாகாண முஸ்லிம்களின் பேச்சுவழக்கினை எத்தனையோ ஆக்கங்களில் படித்துச் சுவைத்திருக்கிறோம்.. பேச்சுமொழியினை எழுத்திலே கொண்டு வந்து ஜீவனூட்டுவது எப்படி என்பதைஇந்நாவல் மூலம் கற்றுக் கொள்ளலாம். பேச்சுநடையிலே வரும் சப்தங்களை எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்…
00-சுற்றிச் சுழித்தோடும் பட்டிப்பளைக் கால்வாயின் தளும்..பும்..தளும்..பும்.. தாளலயம்..
00-வானம் திடுதிடுத்தது.. சட்டட்டட்டீர்.. என முகத்திலடித்தாற்போல் வெட்டிய மின்னல்…
00-டக்குடக்..டக்குடக்.. கில்லிங்..கிலீர்.. டக்குடக்..டக்குடக்.. கில்லிங்..கிலீர்.. டக்குடக்கென்று ஒற்றைமல்லிக்கான தாலலயம் சிறிதும் பிசகாத…..
ஒரு போர்முலா சினிமாக்கதைக்கான தன்மை இதிலேஇருப்பதும் திரைப்படக்கதை வேகத்தில் அது நகர்வதும் உண்மைதான்.. அதே நேரத்தில் அந்த போர்முலாவை இப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதையும் இது காட்டுகிறது..
விரிவாக நயக்கவேண்டிய ஒரு நூலினை ஒரு சிறிய விமர்சனக் குறிப்பினுள் பிழையைச் செய்ய நான் முயலப்போவதில்லை.. ஒன்றைச் சொல்லலாம்..
கதையாசிரியர் இந்தக் கதையைச் சொல்லவில்லை. தனது மூதாதையாளர்களுடாக வரலாற்று ஆவணங்களுடாக வாழ்ந்திருக்கிறார்….சிம்ப்லி சுப்பர்ப்…
No comments:
Post a Comment