Tuesday, July 14, 2015

விமல் குழந்தைவேல் -


·
         ஷோபா சக்தியிடம் சில கேள்விகள்

  ·         

                      சசீவன் சொன்னதுபோல தானே கேள்வி தானே பதில் என்றாகக்கூட
 இருக்கலாம். அதற்கான எதிர்வினைகளை எதிர்கொள்ள ஷோபா
 சொல்லுகின்ற நொண்டிச்சாட்டுகள்தான் நகைப்பூட்டுகின்றது. 
எத்தனை தழுவல்கள் - நழுவல்கள், எத்தனை எடுத்துக் காட்டுக்கள். 
அப்போது கசகறணப்படுத்திய மட்டக்களப்பு மொழி இப்போது
 இனிக்கிறதாமென்கின்றார். எதற்குமே தனது முன்னைய
 படைப்புக்களையே உதாரணம் காட்டுகிறார்.
கசகறணத்தைத்தான் பிடிக்கவில்லையென்றேனே
 தவிர எனக்குப் பிடித்த பத்து நாவல்கள் 
பட்டியலில் ஆர்.எம். நௌசாத்தின் 
பெயரையும் சொல்லியிருக்கின்றேனே 
என்று தனது தள்ளாட்டத்துக்கு
 ஊன்றுதடியாக நௌசாத்தை
 பிடிக்க முற்படுகின்றார்

. அதுசரி ஷோபா உங்களை தரவரிசைப்படுத்தவும் நீங்கள் மற்றவர்களை
 தரவரிசைப்படுத்தவும் உங்களுக்கும் அவர்களுக்கும் அதிகாரம்
 தந்தது யார்? தீரா நதியும் ஆனந்த விகடனும் குமுதமும்
 ஜெயமோகன்களும் உங்களை அறியப்படுத்தியதற்காக
 ஈழத்து இலக்கியங்களுக்கு மத்தியஸ்தம் வகிக்க அதுவே 
தகுதியென்று நினைத்துவிட வேண்டாம்

No comments:

Post a Comment