நூல்முகம்- நட்டுமை.
அது ஒரு சமுக வரலாற்றின் ஆவணமுமாகும்.
விடிவெள்ளி- 20.01.2011--- சொல்புதிது-
முல்லை முஸ்ரிபா-
மொழி காலத்தின் வாசல். அந்த வாசல் வழி இறங்கிப் பயனிக்கையில் வாழ்வின் மீது படர்ந்தெழும் அற்புதமான கோலங்களைத் தரிசிக்க முடிகிறது. அத்தகைய லாவகமாக வளைந்து நெளிந்து செல்கிற மொழி என்னும் பாதையை நட்டுமை ஊடாக விரிக்கிறார் தீரன் என்ற ஆர்.எம். நௌஸாத்.
ஒரு காலகட்டத்து கிழக்குக் கிராமிய மண்ணின் வாசமும் அதன் மொழியும் வாழ்வியல் பண்பாட்டின் நெடியும் நட்டுமையில் நிரம்பி வருகிறது. காலச்சுவடு பதிப்பாக வெளிவந்திருக்கும் நட்டுமை ஈழத்து முஸ்லிம் நாவல் பரப்பின் தொய்வினை நிவர்த்திப்பதாய் உள்ளமை நம்பிக்கையுட்டுகிறது.
நௌஸாத் - வல்லமை தாராயோ..ää(2000) பள்ளிமுனைக்கிராமத்தின் கதை..ää ..ää(2003) வானவில்லே ஒரு கவிதை கேளு..ää ..ää(2005) ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது..ää ..ää(2009) ஆகிய எழுத்துக்களை வாசிப்புத் தளத்திற்குத் தந்தவர். நட்டுமை எழுத்துப் போட்டியில் வென்ற நாவல் என்பதற்கும் அப்பால் சமகால நாவல் பரப்பில் பேசத் தக்கதாயுமுள்ளது.
உள்ளடக்க வீச்சும்ää உருவச் செழுமையும்ää மொழிக்கையாட்சியும் பேச்சுக்கான வாசலைத் திறக்கின்றன..
நட்டுமை தலைப்பே உயிர்ப்பானது. இது விவசாயக் கிராமிய வழக்குப் பேச்சுச் சொல். வரம்பினுள் கட்டிவைத்திருக்கும் தண்ணீர் வரம்புகளின் அடியாலோ ääபிளவுகளாலோ வேறு பக்கமாக களவாக வடிந்துவிடுவதைக் குறிக்கும் சொல்லே நட்டுமை.. இச்சொல் கிழக்கின் விவசாயக் கிராமங்களில் முறையற்ற தொடர்பை உறவைக் குறிக்கவும் பயன்படுத்துவது என்பதனை நாவலினூடாக அனுபவிக்க முடிகிறது.
பதினாறு போகங்களில் விதை தொடக்கம் பொலி வரையான வயல்துறை ப்படிமுறைகளி;ன் உப தலைப்புகளுடன் நட்டுமை வளர்ந்து செல்வது வயலின் மண்வாசனையை நுகரச் செய்கிறது.
1930களின் முற்பகுதி காலத்தில் கிழக்கிலங்கையில் ஆரம்பக்கிராமம் ஒன்றில் வாழ்வியல் மீதான வாசிப்பு இது அந்தப்பண்பாட்டுக் கோலங்களை உள்ளடக்கியதே நட்டுமை என நௌஸாத் தன்னுரையில் குறிப்பிடுகிறார்.
அரசியல் சமுக அசைவியக்கங்களிலிருந்து விலகிய ஒரு தூய முஸ்லிம் விவசாயக் கிராமத்தையும் அதன் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றையும் அக்கிராமத்து மக்களின் தனிமனித நடத்தைக் கோலங்களையும் சித்திரமாக்குவதே இங்கு நூலாசிரியரின் நோக்கமாகத் தெரிகின்றது.. என்கிறார் முன்னுரையில் எம்.ஏ.நூமான்.
கிராமத்தின் மையப்புள்ளியாய் இருக்கும் நிலவுடமை போடிமாரின் அதிகார மையத்துள் சிறைப்பட்டுப் போகும் சாதாரண வாழ்வுää ஏற்றஇறக்கம்ää வெற்றிதோல்விகள்.. சமுக பொருளாதார சிக்கல்கள் என நாவல் பின்னிச் செல்லும் கதை உயிர்ப்பானது..
எனினும் ஒரு திரைப்படம் பார்க்கும் ரசிக இருப்பை நட்டுமை ஏற்படுத்தி விடுவதனால் திரைஉத்தி தொய்வை ஏற்படுத்தி விடுகிறது. எனினும் நட்டுமை மொழித் தொய்வற்றது..
அது போடி மொழிää வணிக மொழி.வயல்மொழி.அண்ணாவி மொழி. பாவாமொழி. ஏன நூலில் முழுவதும் படிந்துள்ளது. நாவல் என்னும் கிரந்தம் படிப்போரை இன்புட்டுவது மட்டுமன்றி அது ஒரு சமுக வரலாற்றின் ஆவணமுமாகும்..என்பதற்கு நட்டுமை அண்மைக்காலத்தைய சாண்றாகும்.
விடிவெள்ளி- 20.01.2011--- சொல்புதிது- முல்லை முஸ்ரிபா-
No comments:
Post a Comment