Saturday, July 25, 2015

நட்டுமை-- ஆய்வுக் கட்டுரை.--இயல் - ஐந்து

கிழக்கு முஸ்லிம்களின்  பாரம்பரிய வாழ்வியலைத்
தெளிவுறுத்தும்  நட்டுமை நாவல்-
சமுகவியலடிப்படையான விமர்சன நோக்கு-


தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் சிறப்புக்கலைமானிப் பட்டத்தினது இறுதியாண்டுப் பரிட்சையின்  ஒரு பகுதியினை புர்த்திசெய்யும் முகமாக சமர்;பபிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. 2008-2009-

ஏ.எல். முஹமட் அஸ்மத்.
துமிழ்ப்பிரிவு. மொழித்துறை கலைகலாசார பீடம்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒலுவில்.2014


இயல் - ஐந்து


5.0  மதிப்பீடும் முடிவுரையும் 

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆட்சிசெய்தஆங்கிலேயரின் வருகையினால்ääஆரம்பத்தில் ஆங்கிலத்தில் காணப்பட்டபுனைகதை இலக்கியம் தமிழில் அறிமுகப் படுத்தப் பட்டது. ஆங்கிலேயர்களிடம் பணிபுரிந்தபடித்தநடுத்தரவர்க்கத்தினர்ääதனதுஓய்வுநேரங்களில் தாம் படித்தஆங்கிலநாவல்களைப் போன்றுதமிழிலும் எழுதவேண்டுமென்றுநினைத்தேநாவல் இலக்கியத்தினைஅறிமுகப் படுத்தினர். 

அந்தவகையில் தமிழில் எமக்குகிடைத்தமுதல் நாவலாகமயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரத்தையும்ääஈழத்தில் எம்.சி. சித்திலெப்பையின் அ ஸன்பேசரித்திரத்தையும்ääஅம்பாறைமாவட்டத்தில் உவில்லியம் பிள்ளையின் இந்திராபுரி இரகசியம்ஆகியநாவல்களைஎடுத்துக் காட்டலாம். 

அந்தவகையில் அம்பாறைமாவட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியஅளவிலேநாவல்கள் எழுந்துள்ளன. 2009ம் ஆண்டுதீரன் ஆர். எம். நௌஸாத்என்பவரால் எழுதப்ட்ட‘நட்டுமை’நாவல்ääஅம்பாறைமாவட்டநாவலின் பட்டியலில் தனக்கெனஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டதுஎன்று கூறலாம்


. இந்நாவலேஎமதுஆய்வுக்குரியநாவலாகும். இது 1930 காலப்பகுதியில் சம்மாந்துறையில் வாழ்ந்த முஸ்லிம் மக்களைகதாமாந்தர்களாககொண்டுள்ளது. இந்நாவல் கிழக்கு முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்களைதெளிவாகஎடுத்துரைக்கின்றன. முஸ்லிம் மக்களின் தொழிலானவிவசாயம்ääஅவர்களுடையநம்பிக்கைகள்ääஉணவுääஉடைääவீட்டின் அமைப்புääதிருமணம்ääபழக்கவழக்கங்கள் முதலானஅம்சங்களைதெளிவாகஎடுத்துரைக்கின்றன. 

இந்நாலானதுää கடல் கடந்து இந்தியாவில் சுந்தரராமசாமியின் 75வது நினைவுதின இலக்கியப் போட்டியில் முதற் பரிசினையும் பெற்றுக் கொண்டது. இந்நாவலில் பெரியபோடியார்ääசின்னப் போடியார்ääமம்மலிääயம்னாääமீராவட்டானைääசெய்னம்புääஉமறுலெவ்வைääமுக்குலத்துக் கிழவிääஅத்தர் பாவாääபொத்துவில் பீர் முகம்மதுஅண்ணாவியார் ஆகியகுறிப்பிட்டுச் சொல்லக் கூடியபாத்திரங்களையேநாவலாசிரியர் கையாண்டுள்ளார். பாத்திரங்களின் வார்ப்புக்குமுக்கியத்துவம் கொடுத்தாலும் வாசகர்டகளின் மனதில் ஆழமாகபதியும் வகையில் இப்பாத்திரங்களைநாவலாசிரியர் படைத்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. 

இந்நாவலிலுள்ளஒவ்வொருபாத்திரங்களுக்கும் தனித்தனியானமொழிநடையினைநாவலசிரியர் கையாண்டுள்ளார். இவருடையபாத்திரப் படைப்புக்கள்ääகிராமமக்களுக்கேஉரித்தானபேச்சுவழக்குமொழிநடைமுதலானவற்றைநாவலாசிரியர் சிறப்பாககையாண்டுள்ளார். 
இந்நாவலைவாசிக்கும் போது 1930 காலப்பகுதியில் வாழ்வதுபோன்றஒருவிம்பம் எம் மனக்கண் முன் தோன்றுகிறது.சின்னப் போடியார் முகம்மதனிபாவும்ääஅவனுடையஎடுபிடியானமம்மலியும் விற்கரத்தையில் பாய்ந்தேறுகின்றபோதுääநாமும் அவ்வண்டியில் பயணிக்கின்றஉணர்வுஏற்படுகின்றது. இந்நாவலில் முழுக்கமுழுக்ககிழக்கு முஸ்லிம் கிராமமொன்றையும்ääஅங்குவாழுகின்றமக்களையும்ääஅவர்களுடையபழக்கவழக்கங்கள்ääநம்பிக்கைகள்ääதலைமைக்குகட்டுப்படுகின்றதன்மைääவயலில் ஏற்படுகின்றநீர்ப்பிரசினைகள்ääவட்டானைமற்றும் பொலிசானைமுதலானஅம்சங்கள் அக்காலமக்கள் மத்தியில் காணப்பட்டுள்ளதைஅறியலாம். 

மேலும் ஆர்.எம். நௌஸாத்தைப் பற்றியும் அவருடைய இலக்கியப் படைப்புக்களைப் பற்றியுமää; இவ்வாய்வில் விரிவாகஆராயப் பட்டுள்ளன.அவருடைய இலக்கியப் படைப்புக்களானவானொலிநாடகங்கள்ääசிறுகதைகள்ääகவிதைகள்ääநாவல்கள் முதலானவற்றைக் குறிப்பிடலாம். இவருடையவானொலிநாடகங்களில் ‘ஒருகிராமத்தின் கவிதை’நாடகமானதுää இலங்கை முஸ்லிம் சேவையில் 25 தடவைகள் ஒலிபரப்பப் பட்டன. 

இவர் 19ற்கும் அதிகமானசிறுகதைகளைஎழுதியுள்ளார். அதிலும் பெரும்பாலானசிறுகதைகள் பலபரிசுகளைப் பெற்றுள்ளன. ‘வல்லமைதாராயோ’ää‘வெள்ளிவிரல்’எனும் இரு சிறுகதைத் தொகுதிகளைவெளியிட்டுள்ளார். கவிதைஎனும் போது 1982 காலப்பகுதியில் ‘தூது’எனும் கவிதைச் சிற்றிதழில்ääசிலகவிதைகளைஎழுதியதோடுääஅச்சிற்றிதழின் ஆசிரியராகவும்பணிபுரிந்துள்ளார். நாவல்கள் எனும் போதுகுறுநாவல்களே இவர் முதலில் எழுதியுள்ளார். ‘ஒருபள்ளிமுனைக் கிராமத்தின் கதை’ää‘வானவில்லிலேஒருகவிதைகேளு’என்பனவாகும். ‘நட்டுமை’எனும் நாவலையும்ää இனிவெளிவர இருக்கின்ற‘கொல்வதெழுதுதல் 90’ää‘யுத்தபிக்குகள்’எனும் நாவலையும் குறிப்பிடலாம். 

இவருடையநாவல்களுக்குரியகதைக் களங்கள்அம்பாறைமாவட்டத்திற்குள்ளேகாணப்படுகின்றன. இவருடையகுறுநாவல்கள்ääநாவலைவாசிக்கும் போது இனப்பிரச்சினைகள்ääபோராளிகளினால் முஸ்லிம் மக்கள் பட்டதுயரங்களையெல்லாம் மீட்டுகின்றதொகுப்பாகவேகாணப்படுகின்றதுஎன்று கூற முடியும். 
ஆர்.எம். நௌஸாத் தனிஒருதுறையில் மட்டும் இருந்துகொண்டு இலக்கியங்களைபடைக்காமல்ääபலவகையிலான இலக்கியங்களையும் படைத்துள்ளார். இன்றுபலவகையான இலக்கியங்களையும் படைக்கின்றääபடைப்பாளியைக் காண்பதுமிகவும் அரிதாகஉள்ளது. அந்தவகையில் இவர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவராவார். 

அம்பாறைமாவட்ட இலக்கியவாதிகளின் பட்டியலில்ää இவர் பரந்த இடத்தைப் பிடிக்காவிட்டாலும் தனக்கெனஒருஅடையாளத்தைஏற்படுத்தியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அம்பாறைமாவட்ட இலக்கியவாதிகளின் பட்டியலில் முக்கிய இடத்தைஎதிர் காலத்தில் பிடிப்பார் என்பதும் திண்ணம். 

இவருடையநட்டுமைநாவலில் கையாளப் பட்டுள்ளகதைக்கருääகதைக்கானதலைப்புääகதைசொல்லும் பாங்குääபாத்திரப் படைப்புääமொழிநடைääகற்பனை வளம்ääமாயநடைஆகியவைகளைசிறப்பாகஆசிரியர் கையாண்டுள்ளார். இந்நாவலிலுள்ளகதாபாத்திரங்கள் கதைமுடிந்தபிறகும் எமதுநினைவுகளில் ஆழமாகபதிந்துபோய் விட்டனர். இந்நாவலானதுகிழக்கு முஸ்லிம்களின் வாழ்வியலைசிறப்பாகதெளிவுறுத்தியுள்ளதுஎன்பதில் எவ்விதசந்தேகமும் இல்லை. 

உசாத்துணைநூல்கள் 

நட்டுமை--ஆய்வுக் கட்டுரை--இயல் - நான்கு

கிழக்கு முஸ்லிம்களின்  பாரம்பரிய வாழ்வியலைத்
தெளிவுறுத்தும்  நட்டுமை நாவல்-
சமுகவியலடிப்படையான விமர்சன நோக்கு-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் சிறப்புக்கலைமானிப் பட்டத்தினது இறுதியாண்டுப் பரிட்சையின்  ஒரு பகுதியினை புர்த்திசெய்யும் முகமாக சமர்;பபிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. 2008-2009-

ஏ.எல். முஹமட் அஸ்மத்.

துமிழ்ப்பிரிவு. மொழித்துறை கலைகலாசார பீடம்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒலுவில்.2014

இயல் - நான்கு


நான்காவது இயல் 

4.0 நட்டுமை நாவலின் புனைதிறன் உத்திகள் 
4.1 கதைக்கரு
4.2 கதைக்கான தலைப்பு 
4.3 பாத்திரப்படைப்பு 
4.4 கதை சொல்லும் பாங்கு 
4.5 மொழி நடை 



4.0 நட்டுமை நாவலின் புனைதிறன் உத்திகள்.

4.1 கதைக்கரு

நட்டுமை நாவலின் கதைக்கருவானது பிரதான ஒரு கதைக்கருவுடனும் சில உபகதைக்கருவுடனும் வைத்து புனையப்பட்டுள்ளது. நட்டுமை நாவலானது சமூகத்தில் காணப்படுகின்ற முறைகேடான உறவைக் குறிப்பதே பிரதான கதைக்கருவாக அமைந்துள்ளது. 1930 காலப்பகுதியில் வாழ்ந்த கிழக்கு முஸ்லிம்களினால் உயர்வாக மதிக்கப் பட்ட ‘போடி’ என்னும் நில உடமையாளர்கள்ää அவர்களுடைய வயலில் வேலை செய்யும் விவசாயிகளின் மனைவியரோடு முறைகேடான உறவை வைத்திருந்தனர். அதனை வைத்து சமூகத்தில் காணப்படுகின்ற முறைகேடான உறவினை நாவலாசிரியர் வெளிப்படுத்துகின்றார். 

இதனை‘நட்டுமை’ நாவலில் பெரிய போடியாரின் ஒரே ஒரு ஆண்வாரிசானää மகன் சின்னப்போடியார் தனது எடுபிடியான மம்மலியின் மனைவி யம்னாவுடன்ää முறைகேடான உறவினை வைத்துள்ளான். இதனை நாவலின் பின்வரும் வரிகள் எடுத்துக்காட்டும்.

“என்னத்தடி செய்ற நான்? ஏள! லாயக்கத்த அநாதி! வக்கத்தபுருசன்! ஏன்ட புருசன்ட விசுவாசத்த சின்னப்போடி வெச்சி என்னோட நாலஞ்சி தெரம் ஒறவு வெச்சிட்டான்”1 
என்று யம்னா செய்னம்புவுடன் கூறுவதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
இந்நாவல் கிழக்கு முஸ்லிம்களின் தொழில்ää நம்பிக்கைகள்ää திருமணம்ää உறவு முதலான அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளது. இதனூடாக 1930 காலப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களினுடைய கலாசாரம்ää பண்பாடுகளை அறிந்து கொள்ளலாம். இதனை நாவலிலுள்ள பின்வரும் வரி எடுத்துக் காட்டும்.

“பயனியன்ட கட்ட வெட்டி தண்ணி கொண்டு போக மழுவன் கண்டத்து ஆக்கள் போறானுகள்”
என்னும் வரியானது பிரதான தொழிலான விவசாயத்தினைப் பற்றி எடுத்துரைக்கின்றது. 

“இரண்டு வருடங்களுக்கு முன்னால் தாய்க்காரி கூழாவடிச் சந்தியில் உறையும் கரிவைரவன் பார்வை பட்டு திடீர் சுகவீனமுற்று காலஞ் சென்று விட்டதிலிருந்துää செய்னம்பு தாயில்லாப் பெண்ணானாள்”2 
என்னும் வரிகள் அக்கால மக்களின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகின்றது. 
“ஊர்வலம் பள்ளித் திடல் ஒழுங்கையில் ஏறி நெருங்கி வந்து கொண்டிருந்தது. முன்னால் வந்த மாப்பிள்ளைத் தரப்புப் பெண்களின் குரவையொலி மிக உச்சத்தாயில் வாசலில் ஒலித்தது…”
என்பதனூடாக அக்கால மக்களின் திருமண நடைமுறைகளை அறிய முடியும். 

இந்நாவலின் பிரதான கதைக்கருவாகää சமூகத்தில் காணப்படு;கின்ற முறைகேடான உறவு  அமைந்துள்ளது. 1930 காலப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின் கலாசாரம்ää பண்பாடுகள் முதலானவை உபகதைக்கருவாக அமைந்தாலும்ää நாவலின் கதைப்பின்னல்ää சின்னப்போடியாரின் காதல்ää காமம்ää சண்டித்தனம்ää அதன் விளைவான சண்டைää கொலை ஆகியவற்றைச் சுற்றியும் நாவலின் கதை நகர்த்தப் பட்டுள்ளது. 


4.2 கதைக்கான தலைப்பு 

இந்நாவலின் தலைப்பு ‘நட்டுமை’ என்ற தலைப்பில் இடப்பட்டுள்ளது. நட்டுமை என்ற சொல் கிழக்கு முஸ்லிம்களுக்கு மிகவும் பரிச்சயமான சொல்லாக இருந்தாலும் அது பரவலாக வாசிப்புக்குரிய சொல்லாடலாக இல்லை. இத்தலைப்பினைப் பற்றி பேராசிரியர் நுஃமான் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

“’நட்டுமை’ என்பது பொது வழக்கில் இல்லாத ஒரு விவசாயக் கலைச்சொல்ää கிழக்கிலங்கை அம்பாறை மாவட்ட முஸ்லிம் விவசாயிகள் மததியில் இச்சொல் வழக்கில் உண்டு. ஒரு வயலில் கட்டி வைத்த நீர் வரம்புகளில் உள்ள வெடிப்பகளால் அல்லது வேறு துளைகளால் வயற்காரன் அறியாமல் அடுத்த வயலுக்குள் கசிந்து இறங்குவதை இது குறிக்கும். ‘நட்டுமை போயிருக்கு’ என்றால் வயல் நீர் களவாக அடுத்த வயலுக்குள் இறங்கியிருக்கிறது என்று பொருள். ஆண்ää பெண் இடையிலான கள்ள உறவைக் குறிப்பதற்கும் இச்சொல் உருவகமாக பயன்படுத்தப் படுகிறது”
இந்த நாவலில் சின்னப்போடியார் முகம்மதனிபாää அவனுடைய எடுபிடியான மம்மலியின் மனைவியோடு முறைகேடான உறவை வைத்திருக்கின்றான். இதனால் யம்னா கர்ப்பவதியாகின்றாள். குழந்தையையும் பெற்றெடுக்கின்றாள். 

“அது என்ட மகன் சின்னப்போடிர புள்ள! வ்வ்வாயப் பொளக்காதிங்க வட்டான! நான் சொல்றதுதான் மெய்…அல்லா அறிய முகம்மதனிபாட புள்ள தான். அதுக்காகத் தான் நான் காணி எழுதித்தந்த…புள்ளய பாத்த ஒடன அதுக்கு முகம்மதனிவான்டு பேரும் வெய்க்கச் சொன்ன”3
என்று மீராவட்டானையிடம் ääயம்னாவின் குழந்தையைப் பற்றி பெரிய போடியார் அகமது லெவ்வை குறிப்பிட்டிருப்பதனூடாக அவர்களினிடையே காணப்பட்ட முறைகேடான உறவினை புரிந்து கொள்ள முடியும்.
சின்னப்போடியாரின் மர்மமான மரணம்ää பெரிய போடியாரை பல கோணங்களிலும் ஊகிக்க வைத்தது. இறுதியில் பெரிய போடியார் உண்மையினை அறிந்து கொள்கிறார். 

“அதான் நட்டுமை போயிருக்கெண்டு சென்னனே…நானு…கதவெளங்கல்லியா? 
மம்மலிர பொண்டாட்டி யம்னாக்கு என்ட மகன் மம்மனிவா புள்ளயக் குடுத்திருக்கான்”4
என்று மீராவட்டானையிடம் பெரிய போடியார் குறிப்பிடும் பேச்சில் இருந்து யார் யாருக்கிடையில் நட்டுமை போயிருக்கென்ற உண்மையினை அறிந்து கொள்ள முடிகிறது. 
இந்த நாவலில் உமறுலெவ்வையின் தாய் கூட ஒருவனுடன் வைத்திருந்த முறைகேடான உறவினாலேயேää உமறுலெவ்வை பிறந்தான் என்றும்ää அதனால் அவனை தகப்பன் தெரியாதவன் என்றும் ஊரிலுள்ளோர் அழைக்கின்றனர். இது கூட இருபது வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற நட்டுமையினை எடுத்துக் காட்டுகிறது. அது போலவே இந்நாவலில் ஊர்ச் செய்திகளை காவித்திரியும் செய்தி வங்கியான முக்குலத்துக் கிழவியின் வாழ்க்கையில் கூட நட்டுமை போயிருப்பதாக கூறப்படுகிறது

. காட்டவ்லியாப்பாவின் கொடியேற்ற விழாவுக்கு பொல்லடி நிகழ்ச்சியினை நடத்த வந்த பொத்துவிலைச் சேர்ந்த பீர்முகம்மது அண்ணாவியாருக்கும் முக்குலத்துக் கிழவிக்குமிடையில் கூட நட்டுமை போயிருக்கின்றது. இதனை “ஒண்ட பழைய புருசன் அண்ணாவியாரத் தேடிப் போயிராத” என்னும்மீராவட்டனையின் பேச்சில் இருந்தும்ää பொல்லடி நிகழ்ச்சியின் போது அண்ணாவியாரைää வைத்த கண் வாங்காது முக்குலத்துக் கிழவிää தன்னுடைய கடந்த கால அண்ணாவியாருடனான வாழ்க்கையில் லயித்துப் போயும் கபணப்படுகின்றாள். இதுவும் ஒரு பழைய நட்டுமை ஆகும். முகம்மதனிவாää யம்னாவுக்கும் இடையில் காணப்பட்ட உறவு புதிய நட்டுமையாகும். இந்நாவலில் காணப்பட்ட முறைகேடான உறவினைக் குறிக்க ‘நட்டுமை’ என்ற தலைப்பானது மிகுந்த பொருத்தப் பாட்டுடன் அமைந்தள்ளது என்று கூறலாம். 


4.3 பாத்திரப்படைப்பு 

எந்த ஒரு நாவலுக்கும் சிறப்பினைத் தருவது பாத்திரப் படைப்பாகும். அதாவது ஆசிரியர் கூற வந்த கருத்தை தெளிவான முறையில் விளக்குவதற்கு பாத்திரங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். இந்நட்டுமை நாவலில் பெரிய போடியார்ääசின்னப்போடியார்ää மம்மலிää யம்னாää மீராவட்டானைää செய்னம்புää உமறுலெவ்வைää அத்தர்பாவா ஆகிய குறிப்பிட்ட பாத்திரங்களினூடாக ஆசிரியர் தான் கூறவந்த கருத்தினை சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நாவலில் ‘பெரிய போடியார்’ என்னும் பாத்திரம் மிக முக்கியமான பாத்திரமாக வார்க்கப்பட்டுள்ளது. இப்பாத்திரம் ஊர் மக்களால் அதிகமாக மரியாதை செலுத்தப்படும் பாத்திரமாகவும்ää இவருடைய பேச்சுக்கு ஊர்மக்களே கட்டுப்படக் கூடியவர்களாகவும் காணப்பட்டனர். 
“சபையில் பலர் இருந்தனர். நடுநாயகமாக இருந்த கயிற்றுக் கதிரையில் பெரிய போடியார் கம்பீரமாக அமர்ந்திருந்தார். சிவப்புப் பெரிய கண்டாங்கிச் சாறனுக்குள் பெரய கைபெனியனை உள்விட்டு நாலங்குல அகலத்தில் மதராசு இடைப்பட்டி அணிந்திருந்தார். அதில் பற்பல அளவுகளில் சாவிக்கொத்துகள்ää காதுக்குத்திää சிறிய கத்திää நகக்குறும்பிää நாசிக்குடைவு இவைகளுடன் விற்சுருள் சிறுகத்திகளும் தொங்கின. மழிக்கப்பட்ட தலை மீது அணிந்திருந்த துருக்கித் தொப்பியின் குஞ்சத்தில் தங்கமுலாம் மணிகள் ஆடின. கால்கள் சு10ரியமாரா மரத்தாலான மிதியடிகள். நரை கலந்த மீசை பெரிதாக வாசநெய்யிட்டு இருபக்கமும் முறுக்கி விடப்பட்டிருந்தன. வாயில் பெரிய ஜேர்மன் சுருட்டு சொருகப்பட்டு இடைவிடாது புகைந்து கொண்டிருந்தது”5

எனும் கூற்றினூடாக பெரிய போடியாரின் கம்பீரம்ää அருடைய ஆடைää ஆசனம் முதலானவற்றை அறிந்து கொள்ள முடியும். 

சின்னப் போடியார் முகம்மதனிபாää பெரிய போடியாரின் ஒரே ஒரு ஆண்வாரிசாகவும் 92ஏக்கர் காணிக்குச் சொந்தக்காரனாகவும்ääபெரிய போடியாரின் ஏனைய சொத்துக்களுக்கு உரித்துடையவனாகவும் காணப்படுகின்றான். காதல்ää காமம்ää சண்டித்தனம்ää சண்டைää கொலை ஆகியவற்றை எடுத்துக்காட்ட நாவலாசிரியர் இப்பாத்திரத்தை கையாண்டுள்ளார். 

“பெரிய போடியாருக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த மரஉரல் புட்டுவத்தில்ää பெரிய போடியாரின் ஏகபுத்திரரான ‘சின்னப்போடியார்’ முகம்மதனிபா உட்கார்ந்திருந்தான். இளைய தலைமுறையினரின் ‘மந்திர குமாரன்’ சாறம் அணிந்துää கண்ணைப் பறிக்கும் மஞ்சட் கலரில் நைலான் சட்டை நீளமாக அணிந்திருந்தான். கிராமத்து வழக்கத்துக்கு மாற்றமாக தலைமுடி கொஞ்சமாக வளர்த்து ‘சிலுப்பா’ வைத்திருந்தான். கையில் பென்னம் பெரிய ஜேர்மன் மணிக்கூடு கட்டியிருந்தான்.(மணி பார்க்கத் தெரியாது)ää இளவரசுப் புன்னகையுடன் சபையை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான்”

என்று நாவலாசிரியர் முகம்மதனிபாவின் தோற்றத்தை வர்ணித்துள்ளார். 

சின்னப் போடியார் முகம்மதனிபா. தனது எடுபிடியான மம்மலியின் மனைவி யம்னாவுடன் அவளது விருப்புக்கு மாறாக உறவு வைத்திருப்பதுடன்ää மீராவட்டானையின் மகள் செய்னம்புவின் மீது ஒருதலையாக காதல் கொள்கிறான். இந்நாவலில் விறுவிறுப்பான தன்மைää கதை கேட்கும் ஆர்வமும் இப்பாத்திரத்தினூடாகவே அதிகரிக்கின்றது என்று கூறமுடியும். 

“ஆணையிட்டான் சின்னப் போடியார். உடனே மம்மலி விரைந்தோடிப்போய் விற்கரத்தை பூட்டிää இளங்காளை மாடு கோர்த்துää கிண்கிணி மணியொலிக்க விரைவில் கொணர்ந்தான். முகம்மதனிவா ஒரே தாவலில் விற்கரத்தை மீதேறää எடுபிடி மம்மலியும் பாய்ந்தேற ‘ஹைய்ய்ய்யா’ ஒரே சுண்டுதலில் இளங்காளை முழு வேகமாய் வாசலை விட்டு வெளித்தாவிää பிரதான மணற்சாலையில் பறந்தது”

                        (நௌஸாத்ääஆர்ääஎம்.ää(2009)ää நட்டுமைää ப.22)

எனும் வரிகள் சின்னப் போடியார் முகம்மதனிபாவின் வீரத்தையும்ää இளமைத்துள்ளலையும் எடுத்துக் காட்டுகின்றன. 

இந்நாவலிலுள்ள அடுத்த முக்கிய பாத்திரமாக மீராவட்டானையைக் குறிப்பிடலாம். இவர் பெரிய வெளிக்கண்டம்ää மழுவன் கண்டம் ஆகிய இரு வயற் பிரதேசத்துக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்ட ‘வட்டை விதானை’ யாக கடமை புரிகின்றார். இவர் ஒரு நேர்மையானவராகவும்ää இறை நேசர்கள் மீது பற்றுக் கொண்டவராகவும் காணப்படுகின்றார். பெரிய போடியாரின் மதிப்பிற்குரியவராகவும்ää நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவும் காணப்படுவதோடுää இக்கிராமத்தில் தனது பெயரை எழுதத் தெரிந்தவராகவும் இவரை வாசகர் மனதில் ஒரு பதிவினை நாவலாசிரியர் ஏற்படுத்துகிறார். 

“நான் என்னத்தச் செல்ற சின்னப் போடியார்? எனக்கிட்டத்தான் ரெண்டு மகள் இல்லியே. உள்ளதும் ஒரே மகள்…நா என்ன செய்யிற?... இத்துன பெரச்சினயும் அவளால தான் வெருது”6

என்று மீரா வட்டானை கூறுவதுää அவருடைய நடுநிலையான தன்மையினை எடுத்துக் காட்டுகிறது. 

இந்நாவலில் மீராவட்டானையின் மகள் செய்னம்பு கூட ஒரு முக்கியமான பாத்திரமாக வார்க்கப் பட்டுள்ளாள். தந்தையில் தங்கியிருப்பவளாகவும்ää தனது சிறு வயதில் தாயை இழந்தவளாகவும்ää முறை மச்சான் உமறுலெவ்வையின் மீது காதல் கொண்டவளாகவும் காணப்படுகிறாள். இவளுடைய தோற்றத்தை நாவலாசிரியர் 

“முருங்கைக் கிளைகளைத் தனது பதினாலு வயதுக்குரிய இளமைத துள்ளலுடன்ää எட்டித் துள்ளி துள்ளி அவள் இழுத்துச் சவட்டி முறிக்கையில்ää அவளது கணுக்காலில் கட்டியிருந்த தாமரைப்பூ கொலிசம் ‘கிலீங்…கில்லீங்’ கெனச் சிணுங்கின. சதாவும் செம்மருதாணியிட்டு ஓரமெல்லாம் சிவந்திருந்த அவளது பாதங்கள் வெளிறிச் சிவந்துää வர்ணம் காட்டின. வலது கையில் அணிந்திருந்த முகப்பணிக் காப்பும்ää இடக்கையில் பூட்டியிருந்த வெள்ளிக் கைக்கட்டும் பளீர் பளீரென மின்னின…வீட்டிலிருந்ததால்ää முக்காடு இல்லாத கூந்தலில்ää சேர்த்துக் கட்டியிருந்த கரு ஊதா நாகவள்ளிச் சிறு பூக்கள் ஒன்றிரண்டாய்க் கீழே உதிர்ந்தன. குக்கிராமத்திற்கே உரித்தான உறுதியும் கட்டிறுக்கமுமான வாளிப்பான இளமையுடல்ää வில்லென வளைந்தும் நிமிர்ந்தும் ஒத்துழைக்கää இளம் வயதுக்கான கற்பனையில் இலயித்திருந்த பெரிய கனவு விழிகளில் இனம்புரியாத மருட்சி மின்னியது. நினைவெல்லாம் தன்னை நோக்கி எய்யப்படும் பலவந்த விருப்ப அம்புகளை தடுக்க முடியாத நிலையில்ää குழப்பமான எண்ணங்களில் மூழ்கித் தத்தளித்தது”

என்று செய்னம்புவினுடைய அழகையும்ää எண்ணங்களையும் எடுத்துக் காட்டுகிறார்.  

இந்நாவலின் மற்றொரு முக்கிய பாத்திரம் மம்மலி. இவன் சின்னப் போடியாரின் எடுபிடியாகவும்ää சின்னப் போடியார் எதைச்சொன்னாலும் உடனே செய்கின்ற அடிமையாகவும் நாவலாசிரியர் இவனை படைத்துள்ளார். 
“அவனது காலடியில் அவனது ‘எடுபிடி’ அடிமை மம்மலி அதிசயமாகää சால்வையும் சாறமும் அணிந்து முகம்மதனிபாவின் ஜேர்மன் மணிக்கூட்டையே பார்த்க் கொண்டிருந்தான்.(அதற்குள் சுற்றியோடும் விமானம் எப்போது ஓயும் என வியந்து கொண்டிருந்தான்.)”7

மம்மலிää சின்னப் போடியாரை எதிர்ப்பவர்களைää எதிர்க்கக் கூடியவனாகவும்ää சின்னப் போடியாருடன் சேர்ந்து அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க நினைப்பவன். தனது மனைவியுடன் சின்னப் போடியார் முறைகேடான வகையில் வைத்த உறவினை அறிந்த பின்னர்ää காட்டவ்லியாப்பாவின் கொடியேற்ற விழாவின் போது தனியே கூட்டிச் சென்றுää அவனை கொலை செய்து விடுகின்ற தன்மானம் மிக்கவனாகவும் இந்நாவலில் மம்மலி வார்க்கப் பட்டுள்ளான். 

“சின்னப் போடிய தனியாக் கூட்டிட்டுப் போய்ää அவன்ட ஈரப்பளுவுல கத்தியால குத்தி கொடல உருவி சாகவெச்சிட்டாரு என்ட புருசன்…தெரியுமா ஒனக்கு”
என்று யம்னா செய்னம்புவிடம் நடந்த உண்மையை கூறுவதிலிருந்துää சின்னப் போடியாரைää மம்மலி தான் கொலை செய்தான் என்பது உறுதியாகிறது. 
நட்டுமை நாவலில் புனையப் பட்டுள்ள பெண் பாத்திரத்தில் முக்கியமான பாத்திரமாக மம்மலியின் இளம் மனைவி யம்னா வார்க்கப் பட்டுள்ளாள். இவள் சுறுசுறுப்பானவளாகவும்ää வயதில் மூத்தவர்களை மதிக்கக் கூடியவளாகவும்ää செய்னம்புவிற்கு ஆதரவாகவும் இருக்கின்றாள். இவளுடைய தோற்றத்தினை நாவலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 
“பத்தொன்பது வயதின் இளமை மதர்த்த உடல்ää வேலைப் பயிற்சிகளால் உறுதியான கட்டுடன் ஆரோக்கியம் வெளிக் காட்டியது. ஆயினும் வயிறு சற்றே முன் தள்ள ஆரம்பித்திருந்தது. யம்னா இரண்டு மாதக் கர்ப்பிணி”

                        (நௌஸாத்ää ஆர்ää எம்.ää(2009)ää நட்டுமைää ப.44)

இந்நாவலில்ää‘அத்தர் பாவா’ எனப்படும் ஒரு தீர்க்கதரிசியினையும்ää அவருடைய அருள் வாக்கு முதலானவற்றையும் நாம் அறிந்து கொள்ளலாம்.இந்நாவலிலுள்ள மக்கள்ää வாழ்க்கைää திருமணம்ää எதிர்காலம் முதலான அம்சங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்ää இவரிடம் சென்று தெரிந்து கொள்ளும் வழக்கத்தினையுடையவர்களாக காணப்பட்டனர்.
“கீழே வெற்றுத் தரையின் மீது விரிக்கப் பட்டிருந்த ஒரு மான் தோலின் மீது மஹான் அத்தர் பாவாவின் உருவம் மிக மிக அமைதியுடன் அமர்ந்திருந்தது. கண்கள் மூடியிருந்தன. ஒரு நீண்ட பச்சைச் சீலையை உடுத்தி அதனையே மேல் நோக்கி இழுத்து மேல் மூடியிருந்தார். தலைமயிர் ஜடா முடியாக வளர்ந்து நரையும் கறுப்பும் செம்பட்டையுமாகத் தாறுமாறாக நீண்டு தொங்கிக் கொண்டிருந்தன. தாடியும் மீசையும் ஒரு போதும் மழிக்கப் படாமல் இரண்டறக் கலந்து பின்னி ஒழுங்கற்றுத் தொங்கின”

எனும் கூற்று அத்தர் பாவா எனும் மஹானின் உருவத்தை நம் மனக்கண் முன் படமாக காட்டுகிறது. 

இந்நாவலினுடைய பாத்திர வார்ப்புப் பற்றிää

“பொதுவாக நாவலைப் பொறுத்த வரை பாத்திரங்களின் நீட்சி ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது. இதில் நாவலாசிரியர் கவனஞ் செலுத்துவதைத் தவிர்த்துää வாசகர்களின் மனதிலிருந்நு பாத்திரங்கள் நினைவிழந்து விடாது தக்க வைத்துக் கொள்வதில் கூடிய கவனத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை இந்நாவலில் வரும் அளவான பாத்திரங்களினூடாக நாம் புரிந்து கொள்ள முடிகின்றது”8
என்று எம்.எம். எம். நூறுல் ஹக் குறிப்பிட்டுள்ளார். 


4.4 கதை சொல்லும் பாங்கு 

நட்டுமை நாவலில் 1930 காலப்பகுதியில் வாழ்ந்த கிழக்கு முஸ்லிம் மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் கலாசாரம்ää பண்பாட்டு அம்சங்கள் பல கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். நாவலிலுள்ள உரையாடல்ää ஆசிரியர் கூற்று என பலவாறாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இந்நாவலானது ஞானமுத்து நொத்தாசியாரின் நன்கொடை உறுதி வாசிப்பில் ஆரம்பமாகிறது. 
“…இத்தால் சகலருமறிக. இன்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தியாறாம் வருடம் புரட்டாதி மாதம் ஐந்தாம் திகதி வாசிக்கும் நன்கொடை உறுதி…இதனடியிற் சம்மாந்துறை முதலாம் குறிச்சி ஆதம்பாவாப் போடியார் அகமது லெவ்வைப் போடியார் ஆகிய நான் எனது ஒரே புத்திரரான ஷைகுறிச்சி அகமது லெவ்வைப் போடியார் முகம்மது அனீபா என்பவர் மீது இயல்பாகவே கொண்டுள்ள அன்பு பட்சமின்னு மென்னை ஏவும் பல முகாந்திரங்களே காரணமாக ரூபா ஆயிரத்தைந்நூறு விலை மதிப்புள்ள இதன் கீழ்க்கூறுமாதன இடாப்பில் விபரிக்குமாதனத்தைக் குறித்த அகமது லெவ்வைப் போடியார் முகம்மதனிபாவுக்கு என்னால் மாற்றவல்ல தழிக்க முடியாத அறுதி நன்கொடையாகக் கொடுத்துமொப்படைத்தும் விட்டேன்…”
(நௌஸாத்ää ஆர்ää எம்.ää(2009)ää நட்டுமைää ப.17)

இந்நாவலில் இயல்பான நடையினை நாவலாசிரியர் பயன்படுத்தியுள்ளார். உதாரணமாக 

“உள்ளறையில் பெரிய போடியார் வீட்டுப் பெண்கள் கலகலத்தனர். எட்டிப்பார்த்தனர். வயற்காரர்களின் மனைவியர் சுறுசுறுப்பாக எடுபிடி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மிதுஹாம்மா அவர்களை அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தாள்”

என்னும் வரிகளை எடுத்துக் காட்டலாம். 
இந்நாவலில் சுருக்கமான உரையாடல்களே அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. இத்தன்மை கூட இந்நாவலுக்கு வலுச்சேர்க்கும் என்று கூற முடியும்.
“என்னடா மம்மலி …பேக்கத கதைக்காய்” மறுபடி கேட்டார் மீராவட்டானை.
“ஏன் காக்கா சின்னப் போடியாரு செய்னம்புவக் கேட்டா குடுக்க மாட்டீங்களா?”
“சின்னப் போடியாரு கேக்கச் சொன்னாரா உனக்கிட்ட?”
“இல்ல…ஆனா கேட்டா?”
“கேட்டா பொறகு பாப்பம்…”

இவ்வுரையாடல் கூட சுருக்கமாகவே அமைந்துள்ளது. எளிதில் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய உரையாடல் நடை அதிகமான இடங்களில் பயன் படுத்தப் பட்டுள்ளது. 

நாவலாசிரியர்  கிராமிய பேச்சு மொழியினை பொருத்தமான இடங்களில் கையாண்டுள்ளார். 

“டே அலி…அன்னா செய்னம்பு மச்சி நிக்கா. நான் போய் கதச்சிட்டு வாரன். நீ வெராத ஏனண்டா நீ அவள்ள வாப்பா மீரா வட்டானைக்கி அடிச்சண்டு ஒன்னுல கோவம் அவளுக்கு…நா மட்டும் போய் வாரன் நீää இப்பிடி அஞ்சலியோட நில்லு. என்னயும்டால்ää விசில் அடி செரியா?”9
உமறுலெவ்வையின் வாயிலாகää இக்கூற்றில் கிராமிய பேச்சு வழக்கினை அறிந்து கொள்ள முடியும்.

இந்நாவலில் பயன்படுத்தப் பட்டுள்ள சொற்களில்ää யதார்த்தப் பூச்சுää மாயமான ஒரு நடைää கிராமியத்தளத்தில் இயங்கும் இயல்பான கதையோட்டம் என்பவற்றைக் காணலாம். இதனை பின்வரும் வரிகள் எடுத்துக் காட்டும்.

“சனங்களின் அதிர்ச்சி ஒலிகளுக்கு மத்தியில் செய்னம்புவும் திடுக்கிட்டுப் போனாள். மீராவட்டானை நம்ப முடியாத நடுக்கத்துடன் பெரிய போடியாரைப் பார்த்தார். முக்குலத்துக் கிழவிää அதிர்ச்சியுடன் செய்னம்புவை பிடித்துக் கொண்டாள். சனங்களிடையே நின்று கொண்டு செய்னம்புவையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்த உமறுலெவ்வையின் வியப்பு தாளாமல் விறைத்துப் போனான். சனங்கள் உச்ச கட்ட வியப்புணர்ச்சியில்ää வாய் பிளந்திருந்தனர். மறுபடி பெரிய போடியார் கூடியிருந்தோர் மத்தியில்ää யாரையோ கண்களால் தேடினார்”

இந்நாவலில் இயல்பான நடைää சுருக்கமான உரையாடல்ää கிராமிய பேச்சு மொழியினை பொருத்தமாக கையாளல்ää சொற்களில் எதார்த்தப் பூச்சுää மாயமான ஒரு நடைää கிராமியத்தளத்தில் இயங்கும் இயல்பான கதையோட்டம் ஆகியவற்றினூடாக கதை சொல்லப் பட்டுள்ளது. 


4.5 மொழி நடை 

நட்டுமை நாவலின் மொழி நடையானது சிறப்பித்துச் சொல்லும் இயல்பானதும்ää ஜனரஞ்சகமானதாகவும் அமைந்துள்ளது. பெரிய போடியார்ää சின்னப் போடியார்ää மம்மலிää யம்னாää செய்னம்புää மீராவட்டானைää உமறு லெவ்வைää முக்குலத்துக் கிழவிää அத்தர் பாவா ஆகிய பாத்திரங்களினூடாகää வௌ;வேறு வகையான மொழி நடையினை ஆசிரியர் கையாண்டுள்ளார். 

இந்நாவலின் ஆரம்பமானதுää அகமது லெவ்வை எனப்படும் பெரிய போடியாரின் 92ஏக்கர் காணியை தனது மகன் முகம்மதனிபாவுக்கு நன்கொடையாக எழுதும் உறுதி மொழியினை எடுத்துக் காட்டுகிறது. 

“…இத்தால் சகலருமறிக. இன்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தியாறாம் வருடம் புரட்டாதி மாதம் ஐந்தாம் திகதி வாசிக்கும் நன்கொடை உறுதி…இதனடியிற் சம்மாந்துறை முதலாம் குறிச்சி ஆதம்பாவாப் போடியார் அகமது லெவ்வைப் போடியார் ஆகிய நான் எனது ஒரே புத்திரரான ஷைகுறிச்சி அகமது லெவ்வைப் போடியார் முகம்மது அனீபா என்பவர் மீது இயல்பாகவே கொண்டுள்ள அன்பு பட்சமின்னு மென்னை ஏவும் பல முகாந்திரங்களே காரணமாக ரூபா ஆயிரத்தைந்நூறு விலை மதிப்புள்ள இதன் கீழ்க்கூறுமாதன இடாப்பில் விபரிக்குமாதனத்தைக் குறித்த அகமது லெவ்வைப் போடியார் முகம்மதனிபாவுக்கு என்னால் மாற்றவல்ல தழிக்க முடியாத அறுதி நன்கொடையாகக் கொடுத்துமொப்படைத்தும் விட்டேன்…”
இந்நாவலில் உலவும் பாத்திரங்களின் மொழி நடையானதுää கிராமத்து மக்களின் பேச்சு வழக்காக அமைந்துள்ளது. இதனை பின்வரும் வரிகள் தெளிவு படுத்தம். 

“இன்னஞ் செல ஆக்கள் இரிக்கானுகள்…பெரிய படிப்பாம்… ஆனா வசதி ஒண்டும் இல்ல…ஆக்களும் குழப்படிக்குப்படி ஆக்கள். மாமிர மகன் எண்டத்துக்காக ஓம் பட்டால்ää மறுகா அழிஞ்சாய்…புள்ள நீ”
(நௌஸாத்ää ஆர்ää எம்.ää(2009)ää நட்டுமைää ப.31)

இந்நாவலில் பொத்துவில் பீர் முகம்மது அண்ணாவியாருடைய பொல்லடி நிகழ்ச்சிää காட்டவ்லியாப்பாவின் கொடியேற்ற விழாவின் இறுதி நாளன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அண்ணாவியாரின் உரையாடல் மூலமாகää அவருடைய பொல்லடி நிகழ்ச்சிக்கான மொழியினை அறிந்து கொள்ளலாம். 

“போடியார்…மொதல்ல ‘கீச்சன் போர்’ அடிக்கவா…இல்ல ‘தேன் கூடா’…? என்று தன்னிரு கைகளிலும்ää கற்பனைத் தடிகளால் பிடித்துக் காற்றில் அடித்துக் காட்டியபடி கேட்டார்”
பொல்லடியின் போது பீர்முகம்மது அண்ணாவியார்
“செல்வம் பெருகிடும்;உம்மாந்துறைப் பற்றின்
செல்வம் விளங்கிடும் போடி வங்கிசமே…எ…ஏ…”10
என்று பாடுகின்றார். இவருடைய பேச்சில்ää பாடல்களில் ஒரு வகையான மொழிநடையினை ஆசிரியர் கையாண்டுள்ளார்.
தீர்க்கதரிசியாக மக்களால் நம்பிக்கை வைக்கப்பட்ட ‘அத்தர் பாவா’வினுடைய பேச்;சுக்களிலும் வேறு ஒரு வகையான மொழிநடை பயன்படுத்தப் பட்டுள்ளது. 

“அருமையுள்ள பெண்ணிவளுக்கு சுருக்கும் துன்ப வினையிதாம் கொடுக்கும் கொலை பாதகங்கள்…ஆயுள் தரிபடும் காராக்கிருகம்…சு10டாக மேனியிலேää ஒன்றிரண்டாய் உதிரும்…நிசியினில் ஏறும்…இணையாகத் திரிந்தவனே பகையுறவேää மாற்றன்புடையோன்ääஈர் மாதத்தில் கைப்பற்றப் பலனுண்டு”
என்று தன்னிடம் வந்த முக்குலத்துக் கிழவிää செய்னம்பு ஆகியோருக்கு அத்தர் பாவா அருள் வாக்கு கூறுகின்றார். இந்த அருள் வாக்கில்ää ஒரு வகையான மொழிநடை கையாளப் பட்டுள்ளது. 

உமறுலெவ்வைää செய்னம்பு ஆகியோரின் உரையாடல்கள் மூலமாகää கிராமிய காதலர்களின்ää காதல் மொழியினை அறிந்து கொள்ளலாம். உமறுலெவ்வைääசெய்னம்புவை ‘ஆக்கள்’ என்று சொல்லி அழைப்பதும்ää அது போல செய்னம்புää உமறுலெவ்வையை ;ஆக்கள்’ என்றழைப்பதும்ää யம்னாவிடம் கதைப்பது போல கதைப்பது கூடää கிராமியக் காதலர்களின் மொழியாகும். 

“யம்னா லாத்தா… அப்பிடியெண்டால் இப்பிடிக் கதைக்கிற ‘ஆக்கள்’ இந்தக் காட்டுப் பள்ளியில சத்தியம் பண்ணுவாகளா? என்று அவசரமாகக் கேட்டான்.”
“நம்பிக்கை இல்லாத ‘ஆக்களுக்கு’த்தான் சத்தியம் என்றது முதுகு சிரிப்புடன்…”

 (நௌஸாத்ää ஆர்ää எம்.ää(2009)ää நட்டுமைää ப.66)

இந்நாவலில் காட்டவ்லியாவின் கொடியேற்ற விழா கொண்டாடப் படுகிறது. அவ்விழாவின் போதுää புதுப்புதுக் கடைகள் அவ்விடத்தில் தோற்றம் பெற்றன. அக்கடை வியாபாரிகளின்ää வியாபார மொழிகள் கூட சிறப்பாக பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனை வியாபார மொழி என்றே நாம் கூற முடியும். 

“மருதமுனையிலிருந்து ஆடை வகைகளுடன் பாடியிறங்கியிருந்தார் மௌலான முதலாளிää சந்திரபடிää மோகினிப் பட்டுää அரமண மூட்டுää அசில் பட்டுää குட்டாப் பட்டுச் சாறம்களும்ää கைத்தறிச் சாறம்களும் பற்பல வர்ணங்களில் அடுக்கியிருந்தார். சதா சிரித்துக் கொண்டிருந்தார்”
(நௌஸாத்ää ஆர்ää எம்.ää(2009)ää நட்டுமைää ப.58)

கண்டியிலிருந்துää வண்டியி;ல் தாவளம் கட்டி வந்த கிதுரு நானாவும்ää அவரது இல்லாள் பீவிää பாத்திமாவும் நவீன வெளிநாட்டுப் புடவைக் கடை பரப்பியிருந்தனர். மாடா வண்ணச் சோமன் எள்ளுப்பட்டுää முக்கடுகுச் சோமன்ää வெண்பட்டுää தோம்புப் புடவைää சுங்கொடிää மூங்கில் பட்டுää கல்குத்தா ஜவுளிகள்ää வத்தாவி நூற் சேலைகள்ää அத்துராசி அடுக்குகள் என வகையாகää சீர் சீராக அடுக்கியும் சிலதைத் தொங்க விட்டும்…”11
எனும் வரிகள் வியாரிகளைப் பற்றியும்ää வியாபாரப் பொருட்களைப் பற்றியும்ää அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்; என்ற தகவலையும் எடுத்துரைக்கின்றது.

இந்நாவலில் ‘கிளியும் கிளியும் கிண்ணரம்’ என்ற மொழிää கிராமங்களில் உடன்படும் விடயத்துக்காக பயன் படுத்தப் படுகின்றது. இது கிராமங்களில் காணப்படும் வழக்கமே. 

“இவடத்த இருக்காதங்க. கொஞ்ச நாளா இவடத்த கரும் பொடையன் ஒண்டு சுத்தித் திரியிது” என்று மம்மலியிடம் யம்னா கூறுகிறாள். இவளுடைய வார்த்தையில் மறைமுகமாகக் கூறுகின்ற தன்மை காணப்படுகின்றது. ‘கரும் பொடையன்’ என்று சின்னப் போடியார் முகம்மதனிபாவையேää யம்னா குறிப்பிடுகிறாள். சில விடயங்களை மறைமுகமாக சொல்லும் மொழிநடை கிராமத்து மக்களிடம் காணப்படுகின்றது என்பதனை ஆசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். ‘வாருவக்கட்டுக்கு பட்டுக் குஞ்சத்த கட்டினாப் போல இரிக்கும்’ஆகிய ஓரிரு பழமொழிகளே இந்நாவலில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

இந்நாவலின் மொழிநடையினைப் பற்றி எம்.எம்.எம். நூறுல் ஹக் 

“நட்டுமை என்ற தலைப்பு தொடக்கம் இந்நாவலின் பாத்திரங்களின் உரையாடல் முறை வரை தென்கிழக்கு முஸ்லிம் மக்கள் பயன்படுத்தும் வழக்கு மொழி நடையில் கையாளப் பட்டிருப்பதுää இந்நாவலின் சிறப்புக்களில் பிரதான ஒரு விடயமாகும்”12 
என்று கூறியுள்ளார். 

இந்நாவலில் வௌ;வேறு பாத்திரங்களினூடாகää வௌ;வேறு வகையான மொழி நடையினை நாவலாசிரியர் கையாண்டுள்ளார். நாவலுக்கு இத்தகைய மொழி நடை ஒரு புதிய வலுவைக் கொடுத்திருக்கிறது. எளிமையான மொழி நடையினை இடத்திற்கேற்றாற் போல பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.  


அடிக்குறிப்புக்கள். 
01. நௌஸாத்ääஆர்ääஎம்.ää(2009)ää நட்டுமைää ப.125
02. மேலதுää ப.29
03. மேலதுää ப.147
04. மேலதுää ப.148
05. மேலதுää ப.17ää18
06. மேலதுää ப.76
07. மேலதுää ப.18
08. நூறுல் ஹக்ääஎம்ääஎம்ääஎம்.ää(2010.12.15)ää‘எங்கள் தேசம்’ää ப.21
09.நௌஸாத்ääஆர்ääஎம்.ää(2009)ää நட்டுமைää ப.65
10. மேலதுää ப.97
11. மேலதுää ப.58ää59
12. நூறுல் ஹக்ääஎம்ääஎம்ääஎம்.ää (2010.10.14)ääதீரன் ஆர்.எம்.நெஸாத்தின் ‘நட்டுமை’ கடந்த
   காலத்தின் நிழல் பிரதி’ ஞாயிறு தினக்குரல்ää ப.31













நட்டுமை--ஆய்வுக் கட்டுரை---இயல் - மூன்று

கிழக்கு முஸ்லிம்களின்  பாரம்பரிய வாழ்வியலைத்
தெளிவுறுத்தும்  நட்டுமை நாவல்-
சமுகவியலடிப்படையான விமர்சன நோக்கு-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் சிறப்புக்கலைமானிப் பட்டத்தினது இறுதியாண்டுப் பரிட்சையின்  ஒரு பகுதியினை புர்த்திசெய்யும் முகமாக சமர்;பபிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. 2008-2009-

ஏ.எல். முஹமட் அஸ்மத்.

துமிழ்ப்பிரிவு. மொழித்துறை கலைகலாசார பீடம்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒலுவில்.2014


இயல் - மூன்று



மூன்றாவது இயல்

3.0 கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதில் நட்டுமை
 நாவலின் பங்கு.
3.1 தொழில்
3.2 நம்பிக்கைகள்
3.3 உணவு
3.4 உடை
3.5 வீடு
3.6 திருமணம்
3.7 பழக்கவழக்கங்கள்
3.0 கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதில் நட்டுமை 
நாவலின் பங்கு. 


3.1 தொழில்

      கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரியத்தொழிலான விவசாயம் இந்நாவலின் முக்கிய அம்சமாக காணப்படுகிறது. இவ்விவசாயத்தினை வைத்துக்கொண்டு நாவலின் கதை நகர்த்தப்பட்டுள்ளது. வுpவசாயத்தை வைத்தே பிரச்சினைகளும் எழுகின்றன. 

      நாவலின் ஆரம்பமாக பெரிய போடியாரான அகமதுலெவ்வை போடியார் தனது  ஒரே ஒரு ஆண்  வாரிசான மகன் முகம்மது அனிபாவுக்குää தனது 92 ஏக்கர் நிலத்தினை நன்கொடையாக வழங்குவதாக நொத்தாசியார் ஞானமுத்தினுடைய கூற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

“…….இத்தால சகலருமறிக. இன்று ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தியாறாம் வருடம் புரட்டாதி மாதம் 5 ம் திகதி வியாழக்கிழமையன்று வாசிக்கும் நன்கொடை உறுதி…..”1

      கிழக்கு முஸ்லிம்களில் பெரும்பாலானோர் விவசாயத்தினேயே பிரதான  தொழிலாக கொண்டுள்ளனர். விவசாயத்துடன் தொடர்புடைய சில பேச்சுவழக்கு சொற்களை பின்வருமாறு நோக்குவோம்

போடி -  நில உடமையாளர்கள்;;;;;;ää நிலத்தையும் பணத்தையும் மூலதனமாகக் கொண்டவர்கள்;ää உடலுழைப்புடன் நேரடியாக சம்மந்தப்படாதவர்கள். இவர்கள் ‘போடியார்’ என மரியாதையாக அழைக்கப்பட்டனர்;
வயற்காறன்-  போடியார் நிலத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவன். இவர்கள் போடியாரின் பண மூலதனத்துடன் தனது உடலுழைப்பினைச் செலுத்தி   பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்.
கூலி விவசாயிகள் -  உழுதல்ääவிதைத்தல்ääஅறுவடைசெய்தல்ää சு10டடித்தல் முதலிய வேலைகளை இவர்களே செய்வர். இவர்களின் கூலி நெல்லாகவோ அல்லது பணமாகவோ கிடைக்கும்.
முல்லைக்காரன் - வயற்காரனை விட போடியாரின் வயலை மேற்பார்வை செய்பவன். பெரிய போடிமார் தமக்கென ஒரு முல்லைக்காரனைக்கொண்டிருப்பர்.
கண்டம்ääவெளிவட்டை -  பலருடைய வயல்களை உள்ளடக்கிய ஒரு வயற்பிரதேசம்
வட்டைவிதானை -  ஒவ்வொரு வயற்பிரதேசத்தின் நீர்ப்பாய்ச்சல்ääபாதுகாப்பு நிருவாகத்துக்கு பொறுப்பாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பேச்சு வழக்கில் இவர் ‘வட்டானை’ என அழக்கப்பட்டார்.
விதானை– காலணித்துவ காலத்தில் அறிமுகமான சொல். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரியே விதானை என அழைக்கப்பட்டார். பிரித்தானிய ஆட்சியாளர்கள்ää சில விதானைமாருக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கியிருந்தனர்.
இவர்கள் ‘பொலிஸ் விதானை’ என அழைக்கப்பட்டனர். இது பேச்சு வழக்கில் ‘பொலிசானை’ என மாறிற்று.

இந்நாவலில் பிரதான இரண்டு வட்டைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் பெரிய      வெளிவட்டைää மழுவன் கண்டவட்டை ஆகியவை காணப்படுகின்றன. இவ்வட்டைக்கான நீர் பயனியன் அணைக்கட்டில் இருந்தே பெறப்படுகிறது. இந்த இரு வட்டைக்கும் ‘வட்டானை’யாக மீராவட்டானை காணப்படுகிறார். பெரிய வெளிப்பிரதேசத்தில் பெரிய போடியாரின் மகன் முகம்மது அனிபாவாகிய சின்னப்போடியாருக்குää 92 ஏக்கர் காணியும் மழுவன்கண்டத்தில் 10 ஏக்கர் காணியும் உள்ளது. மழுவன் கண்டத்தில் 5ää10 ஏக்கர்களை உடமையாக் கொண்ட சிறு போடிமார்களும் குத்தகைக்காரர்களும் விவசாயத்தினை மேற்க்கொள்கின்றனர்.

    கோடை காலத்தில் மழை இல்லாத காரணத்தினால் வழமை போல் நீர்ப்பிரச்சினை ஏற்படுகிறது.வழமை போல் பெரிய வெளிக்கு நீரினை முதலில் பாய்ச்சிவிட்டு பிறகு மழுவன் கண்டத்திற்கு பாய்ச்சுவோம் என்று கூறிய மீராவட்டானையிடம்ää மழுவன் கண்ட விவசாயிகள் மீராவட்டானையின் இறந்து போன ஒரே தங்கையின் மகன்ää உமறுலெவ்வையின் தலைமையில் அவருடன் பேசவந்தனர். இதற்கான தீர்வினை பெரிய போடியாரின் கூற்றில் இருந்த அறியலாம்.
“எல்லாரும் நல்லாக் கேட்டுக்கங்க……தண்ணி வெசயத்துல ரெண்ட சாராரும் இப்படி எணங்கியிருக்காக ஒண்டு மீராவட்டனையை மழுவன் கண்டத்து வட்டவிதானை வேலையிலிருந்து நீக்கி புது ஆள் வெய்க்கிறääரெண்டாவது வழம போல பெரிய வெளிக்கித்தான் மொதல்ல நீர்ப்பாய்ச்சல் செய்யுற  செரியா?”2
     இந்நாவலில் விவசாயம்ää விவசாயத்தினால் வரும் நீர்ப்பிரச்சினைகள்ää ஒவ்வொரு வட்டைக்கும் பொறுப்பான வட்டானைää விவசாயிகள்ää கூலிவிவசாயிகள்ääபோடிமார்;ää போடிமாரின் வீட்டில் விவசாயிகளின் மனைவியர் வேலைகளைச் செய்தல் முதலான அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

      1930 களில் இந்நிலமைகள் காணப்பட்டாலும் தற்காலத்தில் இந்நிலமைகளில் பாரிய மாற்றங்கள் காணப்படுகின்றன. ‘போடிமார்’என்ற பிரிவினர் தற்காலத்தில் காணப்பட்டாலும் அகமது லெவ்வை என்ற போடியார் போன்ற போடியாரை காண்பது மிகவும் அரிது. விவசாயிகளின் மனைவியர் இன்று போடியார் வீட்டில் வேலை செய்வது என்ற வழக்கம் ஒழிந்து விட்டது. கூலிவிவசாயிகள்ää வட்டானை ஆகிய அம்சங்கள் காணப்பட்டாலும் அன்று போலல்லாமல் இன்று பல மாற்றங்களை தாங்கியுள்ளது.

3.2  நம்பிக்கைகள்.

   ஆரம்ப காலங்களில் கிழக்கு முஸ்லிம்களிடையே பல நம்பிக்கைகள் காணப்பட்டன. அவைகளை இன்று சிந்திக்கும் போது மூடநம்பிக்கைகளாக தெரிகின்றன. சில நம்பிக்கைகள் கதையோட்டத்தின் இடையிடையே பேசப்பட்டும் வந்துள்ளன.

“இரண்டு வருடங்களுக்கு முன்னால் தாய்க்காரி கூழாவடிச்சந்தையில் உறையும் கரிபைரவன் பார்வ பட்டு திடீர் சுகவீனமுற்று காலச்சென்று விட்டதில் இருந்து செய்னம்பு தாயில்லாப்பெண்ணானாள்”3

எனும் ஆசிரியரின் கூற்றில் இருந்து மீராவட்டானையின் மனைவியின்  இறப்புக்கான காரணமாக அம்மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை தெளிவாகிறது.
   வலிமார் எனப்படும் இறை நேசர்களிடம் பிரார்த்தனை செய்வது மற்றும் அவர்களுடைய நினைவு நாட்களில் விழாக்கொண்டாடுவது கூட ஒரு நம்பிக்கையாக இருந்தது. இப்படியான விழாக்களைக் கொண்டாடுவதன் மூலமும்ää விழாவின் இறுதி நாள் மக்களுக்கு ‘நார்சா’ எனப்படும் அன்னதான நிகழ்வினூடாக வலிமார்களின் அருளைப்பெற முடியும் என்பது அக்கால மக்களின் நம்பிக்கை. இந்நாவலில் காட்டவ்லியாவின் கொடியேற்ற விழா குறிப்பிடப்   பட்டுள்ளது.

   இவ்விழாவின் போது பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப்பட்டும் மக்களின் ஆராவாரத்தினையும் பின்வரும் வருணனையில் இருந்து அறியலாம். 
“காட்டுப்பள்ளி கொடியேற்று விழா ஊரே புதிதாக பிறந்திருந்தது. புது உற்சாகமாக பூரித்து புத்தாடை அணிந்தது. காட்டுப்பள்ளி வாயல் முற்றமெங்கும் வெண்ணிறச்சேலை பந்தலிட்டுää சோடனைகளாக தென்னை குருத்தோலைகள் வழி நெடுக இழுக்கப்பட்டு இருந்தன. வலது பக்கத்தில் நடப்பட்டிருந்த நாற்பத்தெட்டடி உயர மினராக்கம்பத்தில் ஏற்றபட்டிருந்த நீளக்கொடி வேகக்காற்றில் படபடத்து ஆடியது…… சனக்கூட்டம் திமுதிமுத்தது. பெண்களுக்கு ஒதுக்கிய பிரத்தியேக இடம் காணாமற்போய் ஆண்கள்ääபெண்கள்ääசிறுவர்ääவாலிபர் என எல்லாம் கலந்து போய் சனங்கள் வேடிக்கை பார்ப்பதில் முண்டியடித்தனர்.”4

   இத்தகைய திருவிழாவின் இறுதி நாள் அன்று பொல்லடி நிகழ்வும் நடைபெறுவது வழக்கம். இந்நாவலில் பொத்துவில் பீர் முகம்மது அண்ணாவியாருடைய பொல்லடி வெகு சிறப்பாக நடைபெற்று மக்கள் அந்நிகழ்வில் தன்னையே மறந்து காணப்படுகின்றனர். இதனை ஆசிரியர் 
“எடுத்த எடுப்பிலேயே வசனக்கட்டு உச்சத்துக்குத்தாவ உற்சாகம் மீறிய பொல்லடி இளைஞர்கள் உச்ச வேகத்தில் சுழன்றடித்தனர்…… பார்வையாளர்களின் நரம்புகள் முறுக்கேறித் துடித்தன”5
என்று குறிப்பிடுகிறார்.

  அக்கால மக்கள் எதிர்காலம்ääதிருமணம்ääஅபிவிருத்தி முதலானää எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விடயங்களை அறிந்துகொள்ள மஹான்களிடம் செல்வர். இந்நாவலில் மஹான் “அத்தர்பாவா” எனும் மஹா தீர்க்கதரிசியினை முக்குலத்து கிழவியுடன் செய்னம்பு செல்வதிலிருந்து தெளிவாகிறது. பேய்ää பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகன் கூட அக்கால மக்களிடம் அதிகமாக காணப்பட்டது.

சின்னப்போடியார் முகம்மதுஅனிபாவும் அவனுடைய எடுபியான மம்லியும்  இறந்ததில் இருந்து அவர்கள் ஆவியாக அலைவதாகவும் முக்குலத்துக்கிழவியின்கதையில் இருந்து தெளிவாகிறது. இதற்காக வீட்டில் உள்ளவர்களையும்ää வீட்டையும் காவல் செய்ய நாக ப10சணிக்கோயில் வண்ணக்கரை தேடிச்சென்று அவரிடம் வேப்பிலைääமஞ்சள்ääகுங்குமச்சிலை முதலான பல பொருட்களை வீட்டில் வைத்து இருப்பதும் அவர்களுடைய நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

இந்த நம்பிக்கைகள் இன்று மூடநம்பிக்கையாக காணப்படுவது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் தவிர்க்கப்படவேண்டிய விடயமாகவும் உள்ளது. இத்தகைய நம்பிக்கைகள் தற்காலத்தில் மிக குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.


3.3 உணவு

கிழக்கு முஸ்லிம்களின் பிரதான பாரம்பரிய உணவுகளில் அரிசியே பிரதானமானது. அரிசியிலும் பல இனங்கள் காணப்படுகின்றன. பெருநெல்ää கருப்பன்ääசினட்டிää பச்சைப்பெருமான் ஆகியன பிரதான வகையாகும். வீட்டில் நெல்லை சேகரித்து வைக்கின்ற பழக்கம் அக்கால மக்களிடம் காணப்பட்டது.  இதற்காக கொட்டுää சாக்குப்பட்டறைääநிலஅட்டுவம்ääகால்அட்டுவங்களினூடாக நெல்லை சேகரித்தனர். 
“நெல் பற்றாக்குறை ஏற்படும் போது குரக்கன்ää சோளம்ää மரவள்ளிää வற்றாளைää கொட்டிக்கிழங்குääசுக்கட்டிக்கிழங்குää தாமரைக்கிழங்கு ஆகியனவும் உணவுப்பொருட்களாக இருந்தன. தொட்டம்ää முப்பனை (மொனராகல) ஹிங்குரான ஆகிய சிங்களப்பிரதேசங்களில்  உப தானிய பொருட்கள் பெறப்பட்டன. கலப்படமற்ற இவ்வுப தானியப் பொருட்கள் கறிää பிட்டுää கஞ்சி ஆகிய வடிவங்களில் பயன்படுத்தப்பட்டன. குரக்கன் கறியும் பனையான் மீன் கறியும் மிகப்  பிரசித்தமான உணவாகும்.”6

என்று அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எனும் நூலில் இருந்து கிழக்கு முஸ்லிம்களுடைய உணவுகளை அறிய முடிந்துள்ளது.

கறி என்ற கூறும் போது பெரும்பாலான வீடுகளில் ஒரு கறியே சமைப்பர். ஆணம்ää பாலாணம்ää சுண்டல்ää கடையல் என்ற பிரதான வகையாகும். வசதி படைத்தவர்களின் வீட்டில் இரண்டு கறிகளும் சமைக்கப்பட்டன. வரால்ää வாழைää கொக்கிச்சான்ää பனையான்ää குறட்டை முதலான நன்னீர் மீன்களும் மணலைää சள்ளல்ää கெளுத்திää இறால் முதலான களப்பு மீன்களும்ää கறி சமைக்க பயன்பட்டன.

   இத்தகைய மீனினங்களைப்பற்றி நட்டுமை நாவல் குறிப்பிட்டுள்ளது.

“சுற்றி சுழித்தோடும் பட்டிப்பளைக் கால்வாயின் தளும்…தளும்…பும் தாளலயம். கால்வாயில் ஓடிவந்து விளையாட்டுக்காட்டும் விரால்ää வாளைää கொக்கிச்சான்ää பனையான்ää குறட்டைää சுங்கான்ää கயல்ää செத்தல்ää பொட்டியான்ää கிழக்கன்ää செங்கணன்ää மணலைää சள்ளல்ää மாங்காய்ச்சள்ளல்ää கொய் முதலான பல்வகை மீன்களும்…”7
என்று கிராமத்திலுள்ள மீனினங்களையும் இந்நாவல் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

   கடல் மீன்பிடிப்புகள் அக்காலத்தில் மிகக்குறைவாகவே காணப்பட்டது. ஏனென்றால் அதற்கான வசதிகள் இன்று போல் அன்றில்லை. இன்று கடல் மீன் கறியே பிரதான மீன் கறியாகவும் காணப்படுகிறது. ஆனால் அன்று குளத்துää ஆற்று மீன்களே அதிகம் சமைக்கப்பட்டன. இறைச்சியை காடுகளில் வேட்டையாடி மிதமாகப்பெற்றனர். மான்ää மரைää காட்டுமாடுääஆகியவற்றில் இருந்து இறைச்சியை அளவுக்கு அதிகமாக பெற்றனர். பசுமாடுகள்ää ஆடுää கோழி என்பன உணவுக்காக அறுக்கப்பட்டன.

   மரக்கறி உணவுகளை உண்ணும் பழக்கம் மிக்குறைந்த அளவிலேயே இருந்தது. நாட்டு மரக்கறி வகைகளான கத்தரிää பயிற்றைää அவரைää முருங்கை ஆகியனவே பிரதான மரக்கறிகள்.  வள்ளல்ää பொன்னாங்கனிää முல்லைää திராய்ää முசுட்டைää முருங்கையிலை ஆகிய இலைக்கறிகளையும் உண்டனர். இந்த நட்டுமை நாவலில் கூட முருங்கையிலையினை செய்னம்பு பறிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

   வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை உபசரிக்க அக்காலத்தில் பலகாரங்களும் தேனீரும் பயன்படுத்தப் பட்டன. அகமது லெவ்வைப்போடியாரின் வீட்டுக்கு வந்தவர்களுக்கு “கோழிக்கால் அலங்காரப்பன்தட்டில் தேன் நிறம்பிய தேன் குழல்ää பொன்னெழுத்து வெள்ளித் தட்டில் கமகம எண்ணெய் மணத்துடன் பொன் நிறத்தில் பொரிக்கப்பட்ட மொறு மொறு ‘வாடா’ வந்தது. அதனைத்தொடர்ந்து தாராக்கால் கவடத்தில் பயிற்றம் துவையலுருண்டைகள் பெரிது பெரிதாக மாப்பதத்துடன் வந்தன.”8

முதலான பலகாரங்களை கொடுத்து உபசரித்தனர்.இத்தகைய உபசரிப்பு முறைகள் அக்கால முஸ்லிம் மக்களிடம் காணப் பட்டன.

   தேனீரை குவளைகளில் லவங்க வாசனை கமக்க சு10டான சாயத்தேனீரும் கருப்பெட்டியும் வீட்டுக்கு வந்தவர்களுக்கு கொடுப்பதனையும் இந்நாவலின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

   இந் நட்டுமை நாவலினூடாக அக்கால மக்களுடைய உணவுகள்ää வீட்டுக்கு வந்தவர்களுக்கு கொடுக்கும் பலகாரம் மற்றும் தேனீர் முதலானவற்றினை அறிந்து கொள்ளலாம். இத்தகையவற்றைக்  கொண்டு வீட்டுக்கு வருபவர்களை ஆதரிப்பது அக்கால முஸ்லிம்களின் பாரம்பரியமாக இருந்தது.


 3.4 உடை

கிழக்கு முஸ்லிம்களில் ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட தடித்த சாறன் அல்லது வெள்ளை நிற வேட்டி அணிந்து கொள்வர். அந்த சாறனை பெல்ட் எனும் பட்டியால் கட்டிக்கொள்வர். இந்த சாறன்களில் பல வகை காணப்படுகின்றன. சந்திரப்பட்டிää மருதமுனைச்சாறன்ää குட்டாப்பட்டுச்சாறன்( மாப்பிள்ளை அணியும் சாறன்) என்பன காணப்பட்டன. இவ்விதமான சாறன்களை சற்று உயர்த்தி உடுத்துக் கொள்வார்கள்;.

   ஆண்கள் எல்லோரும் சட்டை அணிந்ததாக கூற முடியாது. ஏனென்றால் உடம்பைச்சுற்றி சால்வையால் மூடுவது வழக்கமாக இருந்தது. நட்டுமை நாவலில் பெரிய போடியாரின் ஆடையினைப்பற்றி ஆசிரியர் 
“சிவப்பு பெரிய கண்டாங்கி சாறனுக்குள் பெரிய கை பெனியனை உள்விட்டு நாலங்குல அகலத்தில் மதராசு இடைப்பட்டி அணிந்திருந்தனர். மழிக்கப்பட்ட தலை மீது அணிந்திருந்த துருக்கித்தொப்பியின் உச்சத்தில் தங்க முலாம் மணிகள் ஆடின. கால்களில் சு10ரியமாரா மரத்தாலான மிதியடிகள்”9

என்று குறிப்பிடுவதில் அவர் அக்காலத்தில் அணிந்துள்ள ஆடையினையும் காலுக்கு மரத்தாலான மிதியடிகள் போடுவதனையும் அறிந்து கொள்ளலாம். 
பெண்கள் சிறு வயதில் இருந்து சேலை கட்ட தொடங்குவர். இவர்கள் தங்கள் முழு உடலையும் சேலையால் உடுத்து மூடி முக்காடு போட்டுக்கொள்வார்கள்;. காட்டவ்லியாவின் கொடியேற்ற விழாவின் போது தோன்றிய கடைகளில் பால்சோமன்ää கடுகுவண்ணச்சோமன்ää மருதமுட்டைச்சோமன்ää சந்திரபடிää பட்டுச்சோமன் முதலான சேலைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டதில் இருந்து அக்காலப்பெண்களின் சேலைவகைகளை அறிந்து கொள்ள முடியும்.

   இந்த சேலையை மட்டும் அணியும் பழக்கம் சிறிது காலம் மாற்றமடைந்து பாவாடை சட்டை முதலானவற்றையும் பெண்கள் அணிந்துள்ளதை நட்டுமை நாவல் தெளிவுபடுத்துகிறது. செய்னம்பு அணிந்திருந்த ஆடையினைää

“பச்சைப்பாவாடையையும் நீண்ட ஒரு சட்டையும் சிவப்புத்தாவணியால் தலை முழுவதும் போர்த்தியிருந்தாள்”10 என்று ஆசிரியர் கூறுவதில் இருந்து சேலைக்குப்பிறகு பாவாடைää சட்டை முதலான ஆடைகளையும் பெண்கள் அணிந்துள்ளனர் என்று தெளிவாகிறது.இவர்களின் ஆடையின் மூலம் கிழக்கு முஸ்லிம்களின் ஆடையினை அறிந்து கொள்ளலாம். 


3.5வீடு

ஆரம்பகாலங்களில் வீடுகள் களிமண்ணால் கட்டப்பட்டிருந்தன. இலுக்குääவைக்கோல்ääகிடுகுஆகியன கூரைகள் வேயப்பயன்பட்ன. வீடுகளில் இரண்டுஅல்லது மூன்றுஅறைகள் காணப்பட்டன. இவ்வறைகளில் “தென் பக்கத்துஅறை‘காப்பு’ அல்லது  ‘மஞ்சு’ என்றும் நடுஅறை‘உள்வீடு’ வடக்குஅறை‘ஆலவீடு’என்றும் பெயர் பெறும். வீட்டின் மேற்குப்   பக்கத்தில் அகலம் குறைந்தகோடித் திண்ணையும் மறைத்துஆனைக்கிடுகுஎன்ற இரட்டைக்கிடுகுகளாகத் தொங்கவிட்டிருப்பார்கள்”11 என்றும் பெயர் பெறும்.
இந்நாவலில் மம்மலியின் வீட்டின் அமைப்பானதுபின்வருமாறுகாணப்பட்டது
“ஆனைக் கிடுகுகளினால் வளைத்துஅடைக்கப்பட்டு இலுக்குப்புல் கூரைக்குவேயப்பட்டுதளப்பத்துமட்டைகளால் பலப்படுத்திபளபளகளிமண்ணினால் செப்பமிட்டதளத்துடன் இரண்டேஅறைகள்”12 ஏழைகளின் வீடுகள் இவ்வாறுகாணப்ட்டாலும் போடிமாரின் வீடுகள் கல் வீடுகளாகக் காணப்பட்டன. கல்வீடுகள் அக்காலத்தில் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.

“பெரியபோடியாரின் பெரியகல்  வீட்டின் முன் கூடத்தில்….”13எனும் கூற்றுஅதனைதெளிவுபடுத்தும். மேலும் போடிமாரின் வீடுகளின் திருமணம் முதலானவிசேடநிகழ்வின் போதுபயன்படுத்தப்படும் பாய்கள் ääவிளக்குளக்குகள் பற்றியெல்லாம் இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பெரியபோடியாரின் வீட்டில்ää
“பெட்டிகள்ää அடுக்குத் தட்டுகள்ää பிரமாண்டமானமரப்பெட்டகம்ää அதற்குமேலே அசவுகட்டிஅடுக்கப்பட்டிருந்ததோட்டுப் பாய்கள்ääசபைப்பாய்கள் ääமெத்தைப்பாய்கள்ää கீழே தரை முழுவதும் குத்துவிளக்குகள்ääகந்துவிளக்குகள்ääமயில் விளக்குகள்ääதூக்குவிளக்குகள்ääஇரட்டைத் தட்டுவிளக்குகள்ääஅலங்கரிக்கப்பட்டசேவரக்கால்ääஇரண்டு இரட்டைஆராத்திவிளக்குகள்ääபல்தரப்பட்டபடிக்கங்கள்”14 முதலானவை காணப்பட்டதாக  ‘யம்னா’வுடைய கூற்றில் இருந்துதெரிந்துகொள்ளலாம்.
களிமண் வீடுääகல் வீடுஆகியவைääஅக்கால முஸ்லிம் மக்களின் பாரம் பரியத்தினைதெளிவுபடுத்துகின்றனஎன்று கூறமுடியும்.

3.6  திருமணம்

திருமணமானதுääஅக்காலமக்களிடையேஒருவிழாவாகவேகாணப்பட்டது. போடிமார்களின் வீட்டுத்திருமணம் என்றால் பெரும் கலகலப்பாக இருக்கும். ஏழைகளின் வீட்டுத்திருமணமாக இருந்தால் சாதாரணமாகநடாத்தப்படும் என்றாலும் அதற்கானசிலசடங்குகள்ää பாரம்பரியங்களைசெய்தேநடாத்துவார்கள்.

நட்டுமைநாவலில் உமறுலெவ்வைக்கும் செயனம்புவுக்கும் நடைபெறும் திருமணத்தினுடாகஅவர்களுடையபாரம்பரியமுறைகளைஅறிந்துகொள்ளமுடியும். வீட்டின் முற்றத்தில் பந்தல் அமைத்தல்ääதென்னங் குருத்தோலைகளின் அலங்காரத் தோரணங்கள்ää வாழை மரத் தோரணத்துடன் தென்னம் பாளைஓன்றுபூரணமாகவிரிந்துசெம்புக் குடத்தில் ப10வரிசிரித்தது. பந்தலில் தோட்டுப்பாய்கள் விரிக்கப்பட்டுää சபைப் பாய்கள் விரிக்கப்பட்டுதிருமணவீடுஅலங்கரிக்கப்படடிருந்தது.

ஆல வீட்டிற்குள் நன்றாகஅலங்கரிக்கப்பட்ட சேவரக்கால் மணப்பெண் அமரவும்ää தாலிகட்டவும் தயார் படுத்தப்பட்டது. மணப்பெண்ணைச் சுற்றிச் சிறுமிகள்ääபெண்கள் கூட்டம் ‘குரவை’ ஒலியெழுப்பிஅமர்ந்திருந்தனர். மாப்பிள்ளை இரவுத் தொழுகைக்குப்பின்னரேமணப்பெண்ணின் வீட்டிற்குஅழைத்துவருவது வழக்கமாக இருந்தது. 

மாப்பிள்ளைக்கும்ää மணப்பெண்ணிற்கும் முதல் உணவாக கூவும் பருவச்சேவல் இறைச்சிக்கறியும்ää விரால் மீன் பொரியலும்ää வண்டுப்பிட்டும் அதி மணத்துடன் தயாராகின. வீட்டுக்குவருவோரைமீராவட்டனைää
“மகிழ்ச்சியுடன் புத்தம் புது இரட்டைமூட்டுச்சாரமும் கைபெனியனும் சீனப்பட்டுச்    சால்வையும் அணிந்துவருவோரைவரவேற்றுக்;கொண்டிருந்தார்”15என்பதில் திருமணத்திற்கு புத்தாடைஅணிந்துääவருவோரைவரவேற்கும் பழக்கம் அக்காலமக்களிடம் காணப்பட்டதனைஅறிந்துகொள்ளலாம்.

திருமணவீட்டில் இரவானதும் கடல் லாம்புகள்ääவாடகைக்குவாங்கவிடுகின்ற‘பெற்றோல் மெக்ஸ்’விளக்குகள்ää வீதி முழுவதும் கடல் லாம்புளைக் கொண்டுவெளிச்சத்ததைஏற்படுத்துகின்ற முறையும் காணப்பட்து. அக்காலத்தில் மின்சார வசதிகள் காணப்படவில்லை.
மாப்பிள்ளை கூட்டிவரும் போதுääபட்டாசுகள் வெடிப்பதுமää; பறையர்கள் தவில்ääநாதஸ்வரம் முதலானகருவிகளினூடாக ஒலியெழுப்புவதும்ääபெண்கள் ‘குரவை’ஒலியெழுப்புவதும்ää பக்கீர் வாவாக்களின் ‘வையத்து’ ஓதல்களும் இம்பெறும்.


3.7 பழக்கவழக்கங்கள்

   கிராம மக்களிடம்  சில பழக்கவழக்கங்கள் அவர்களின் உடம்போடு ஒட்டியது போன்று காணப்படுகின்றன. இந்நட்டுமை நாவலில் கூட கிழக்கு முஸ்லிம் கிராம மக்களுடைய பழக்கவழக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. 

  ஆண்கள் எபபோதும் பீடி அல்லது சுருட்டினை புகைக்ககூடியவர்களாகவும் காணப்படுவர். இந்நாவலில் உள்ள பெரிய போடியாரின் வாயில் “ஜேர்மன்சுருட்டு சொருகப்பட்டு இடைவிடாது புகைந்து கொண்டிருந்தது”17 எனும் கூற்று அதனை தெளிவுபடுத்தும். பெண்கள் வெற்றிலைää பாக்கு போடுபவர்களாகவும் காணப்பட்டனர். 

  கிராமப்புறங்களில் ஏதாவது ஒரு செய்தியினை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்றால் பறையடித்துக் கூறுவது வழக்கம். இத்தகைய பறையை அடிக்க கிராமத்தால் ஒருவன் நியமிக்கப்பட்டிருப்பான். பெண்கள் தன் தலைமுடியில் சிக்கு எடுப்பதற்கும்ää பேன் போன்றவற்றையும் எடுப்பதற்கும்ää மாலை நேரங்களில் தமக்கு தெரிந்த பெண்ணுடன் சொல்லி ‘தலைபார்த்தல்’ எனும் வேலையை செய்வார்கள். இதன் போது ‘மாட்டுக்கொம்பு’ சீப்புää தேங்காய்எண்ணெய் முதலானவற்றையெல்லாம் பயன்படுத்துவர். இந்த நாவலில் செய்னம்புக்கு யம்னாääதலை பார்க்கின்றாள். இத்தகைய பழக்கவழக்கங்களையும் கிராம மக்கள் கொண்டுள்ளனர்.

   மக்கள் எங்கு செல்வதாக இருந்தாலும் அவர்கள் நடையாக அல்லது மாட்டுவண்டியில் செல்வர். இந்நாவலில் சின்னப்போடியார் விற்கரத்தையில் செல்வதை பின்வரும் கூற்று தெளிவுபடுத்துகிறது.  “ஒரே தாவலில் விற்கரத்தை மீதேறி எடுபிடி மம்லியும் பாய்ந்தேறி…”18

கிராமத்தில் ஏதாவது ஒன்று கூடல் இடம் பெறுவதென்றால் பெரியபோடியாரின்  வீட்டில் நடைபெறுவதும்ää அங்கு பெரிய போடியாரின் பேச்சுக்கு அனைவரும் கட்டுப்படக் கூடியவர்களாகவும் காணப்பட்டனர். இத்தரகய கட்டுப்படும் தன்மை கிராம மக்களிடம் காணலாம். ஆண் பிள்ளைகளுக்கு நடத்தப்படும்‘விருத்தசேதன’ நிகழ்வில் ஆண்கள்ää பெண்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கின்ற பண்பும் கிராம மக்களிடம் காணப்பட்டது. இதனை பின்வரும் கூற்று தெளிவுபடுத்தும் “அவவும் ஒங்கட பொஞ்சாதி மைமுனா லாத்தாவும் மம்மாக்காண்ட மகன்ட ‘ஸின்னத்து’ ஊட்ட போறாக”19

    வீட்டுக்கு வருபவர்களுக்கு சு10டான தேனீர் பரிமாறுவதும்ää இல்லாவிட்டால் இளநீருடன் அதன் பருக்கைகளையும் இட்டு அதில் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சீனியையும் கலந்து கொடுப்பதும் வழக்கமாக இருந்தது. செய்னம்பு வீட்டுக்கு வந்த மம்மாலிக் காக்காவுக்கு தேனீர் கொடுப்பதை பின்வரும் கூற்று தெளிவுபடுத்தும்.“நீரைக் கொதிக்க வைத்தாள்ää எலுமிச்சை இலைத்துளிர்களை அதில் போட்டாள்….. வாசம் கமகமத்தது. வெள்ளிக்கேத்தலில் நிறையச்சாயம் விட்டு ஊற்றினாள் கருப்பட்டிக் கட்டி ஒன்று கையிலெடுத்தாள்.”20

       இந்த நாவலினூடாக அக்கால கிழக்கு முஸ்லிம் கிராம மக்களுடைய பழக்கவழக்கங்கள்ää அவர்களின் உபசரிப்பு முறைää தலைமைக்கு கட்டுப்படும் விதம்ää விழாக்களுக்கு சென்று அதனை சிறப்பிக்கின்ற தன்மை முதலானவற்றை  அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.


அடிக்குறிப்புக்கள்.
01. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 17
02. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 51
03. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 29
04. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 56
05. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 97
06. ஜெமீல் எஸ். எச். எம்.ää (ஜுலைää 1997)ää அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள்ää ப. 164
07. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 45
08. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 21
09. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 17
10. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 23
11. ஜெமீல் எஸ். எச். எம்.ää (ஜுலை 1997)ää அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள்ää ப. 167
12. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 44
13. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 17
14. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 50
15. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 140
16. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 142
17. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 18
18. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 22
19. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 30
20. நௌஸாத் ஆர். எம்.ää (2009)ää நட்டுமைää ப. 31

நட்டுமை-- ஆய்வுக் கட்டுரை-- . இயல் - இரண்டு

கிழக்கு முஸ்லிம்களின்  பாரம்பரிய வாழ்வியலைத் 
தெளிவுறுத்தும்  நட்டுமை நாவல்-
சமுகவியலடிப்படையான விமர்சன நோக்கு-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் சிறப்புக்கலைமானிப் பட்டத்தினது இறுதியாண்டுப் பரிட்சையின்  ஒரு பகுதியினை புர்த்திசெய்யும் முகமாக சமர்;பபிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. 2008-2009- 

ஏ.எல். முஹமட் அஸ்மத். 

தமிழ்ப்பிரிவு. மொழித்துறை கலைகலாசார பீடம். 
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம். 
ஒலுவில்.2014

இயல் - இரண்டு


இயல் இரண்டு
2.0 ஆர்.எம்.நௌஸாத்தும் அவருடைய இலக்கியப் படைப்புக்களும்
2.1 ஆர்.எம்.நௌஸாத் பற்றிய அறிமுகம்
2.2 ஆர்.எம்.நௌஸாத்தின் இலக்கியப் படைப்புக்கள்
   2.2.1 வானொலி நாடகங்கள்
   2.2.2 சிறுகதைகள்
   2.2.3 கவிதைகள்
   2.2.4 நாவல்கள் 
2.3 ஆர்.எம்.நௌஸாத் தனது இலக்கியப் படைப்புக்களினூடாகப் பெற்ற   ;
   வெற்றிகள்
2.4 ஆர்.எம்.நௌஸாத்தின் இலக்கியப் படைப்புகள் பற்றி வெளியான
   விமர்சனங்கள்


2.0 ஆர்.எம்.நௌஸாத்தும் அவருடைய  இலக்கியப் படைப்புக்களும்.
2.1 ஆர்.எம்.நௌஸாத் பற்றிய அறிமுகம்.
ஆர்.எம்.நௌஸாத் எம்.எஸ்.ஹாஜறாவுக்கும் இஷட்.கே.றாசிக்காரியப்பருக்கும் மகனாக 1959.09.05 இல் சாய்ந்தமருதில் பிறந்தார். இவர் கல்முனை ஸாஹிறா கல்லூரியில் கற்றார். 1975 இல் பாடசாலை வெளியீடான “அம்பு” சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியதன் மூலமே எழுத்துலகுக்கு உட்பிரவேசித்தார்.
 ஒரு தபால் அதிபராக இலங்கையின் பற்பல பகுதிகளிலும் சுமார் 31 வருடங்கள் சேவையாற்றிய பின்பு தற்போதுää அவருடைய சொந்த ஊரான சாய்ந்தமருது தபாலகத்தில் பொறுப்புத் தபாலதிபராக கடமை புரிகின்றார். இவர் ‘அம்பு’ சஞ்சிகையில் எழுதிய வாசகர் கடிதத்திற்குப் பிறகு துணுக்குகள்ää கேள்வி-பதில்ää உருவக்கதைää குறுங்கதை ஒன்றிரண்டு சிறுகதைகள் எழுதினாலும் 1990 இற்குப் பின்னர் ஒன்றும் எழுதாமல் ‘இலக்கிய நெடுந்தூக்கம்’ கொண்டிருந்தார். இக்காலப்பகுதியில் படிப்புää தொழில்ää திருமணம்ää குடும்பம் என்று அவருடைய வாழ்க்கை போயிற்று. இருப்பினும் அவர் தோன்றும் போதெல்லாம் ஏதாவது எழுதிக்கொண்டும் அதனை செவ்வை பார்த்துக் கொண்டும் இருந்தார். அதிகமாக புத்தகங்களை வாசிக்கின்ற பழக்கத்தையும் கொண்டிருந்தார். 

        ஆர்.எம்ääநௌஸாத் 2000 ஆம் ஆண்டில் ‘வல்லமை தாராயோ’ எனும் சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டார். அதிலிருந்து மீண்டும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவர் தனி ஒரு துறையில் மட்டும் நின்று எழுதாமல் வானொலி நாடகங்கள்ää கவிதைகள்ää கட்டுரைகள் முதலானவற்றையெல்லாம் எழுதுகின்ற தனித்திறமையினை கொண்டவராக திகழ்கின்றார். இவர் ‘வல்லமை தாராயோ’ எனும் சிறுகதைத் தொகுதியையும் ‘வெள்ளி விரல்’ என்னும் ஒரு சிறுகதைத் தொகுதியினையும் வெளியிட்டுள்ளார்.

இவர் 12 வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். இந் நாடகங்கள் இலங்கை முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்டன. ‘தூது’ என்னும் சிற்றிதழில் சில கவிதைகளையும் எழுதியது மட்டுமல்லாது அவ்விதழின் ஆசிரியராகவும் கடமை புரிந்துள்ளார். இவர் ‘வானவில்லிலே ஒரு கவிதை கேளு’ää‘பள்ளி முனைக்கிராமத்தின் கதை’ää‘நட்டுமை’ ஆகிய நாவல்களை இலக்கிய உலகுக்கு தந்துள்ளார். இன்னும் சில நாவல்களை எழுதியும் வருகின்றார்.

              இவருடைய இலக்கியப்படைப்புக்கள் தமிழுக்கு அணி சேர்க்கும் என்று கூறலாம். இவர் ஈழத்து எழுத்தளர்களுள் பல துறைகளிலும் ஈடுபாடு காட்டிக் கொண்டு வருபவர் என்று கூறலாம். இவர் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட எழுத்தாளர்களுள் முக்கிய இடத்தைப் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.
2.2 ஆர்.எம்.நௌஸாத்தின் இலக்கியப்படைப்புக்கள்

 ஆர்.எம்.நௌஸாத் அவர்கள் 21ஆம் நூற்றாண்டு எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தபால் துறையில் 31 வருட காலமாக சேவை புரிந்து வரும் ஓருவர். வேலை நேரங்கள் தவிர்த்து ஏனைய நேரங்களில் தனது எழுத்துக்களின் மூலமாக அழகியää இரசனை மிக்க பல இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவர் வானொலி நாடகங்கள்ää சிறுகதைகள்ää கவிதைகள்ää நாவல்கள் என பல்வேறு இலக்கியப் படைப்புக்களைப் படைத்துள்ளார். தனது படைப்புக்களினூடாக வாசகர்களை தனது படைப்புக்குள்ளே இழுத்துச் செல்லக்கூடிய ஆற்றலை சிறப்பாக பெற்றுள்ளார். 
இவருடைய படைப்புக்களில் சிறந்த கருää வடிவம்ää பேச்சு வழக்குச் சொற்கள்ää பழமொழிகள்ää இடையிடையே நகைச்சுவை உலவும் வகையில் எழுதியுள்ளார். இவரின் மூலமாக தமிழில் இலக்கியங்கள் கிடைத்துள்ளன என்று கூறுவது பொருத்தமானதாக இருக்கும். ஈழத்து இலக்கியவாதிகளின் பட்டியலில் இவர் பரந்த இடத்தைப் பிடிக்காவிட்டாலும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி இவருடைய இலக்கியப் படைப்புக்களை நோக்குவோம்.

2.2.1 வானொலி நாடகங்கள்

      நாம் இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்றே அன்று வானொலி நாடகங்களும் காணப்பட்டன. இதனைப் பற்றி நௌஸாத் 
“ஆ… அது ஒரு  பொற்காலம்! இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு நேயர்களிடம் இருக்கும் வரவேற்பு அப்போது வானொலி நாடகங்களுக்கு இருந்தன. வானொலி நாடகங்களுக்காக நேயர்கள் காத்துக் கிடந்தனர். வானொலி நாடகங்களின்; குறியீட்டொலி கேட்டே தம் கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது”1
என்று குறிப்பிட்டுள்ளார்.

நௌஸாத்தின் முதல் வானொலி நாடகம் ‘வாக்கு’ முஸ்லிம் சேவையில் 1985 இல் ஒலிபரப்பானது. தொடர்ந்தும் அவர் 1990 வரை சுமார் 12 வானொலி நாடகங்களை எம்.அஸ்ரப்கான் அவர்களின் நெறியாள்கையில் எழுதியுள்ளார். “இந்நாடகங்களில் ‘ஒரு கிராமத்தின் கவிதை’ எனும் வானொலி நாடகம் சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பானது.”2என்று நௌஸாத் குறிப்பிட்டுள்ளார். 

               இவர் ஆராத்திக் கல்யாணம்ää காகித உறவுகள்ää களவட்டிää ஒரு கிராமத்தின் கவிதைää நினைப்பது ஒன்றுää ஏற்றம்ää நம்பிக்கை முதலான பெயர்களில் வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். இவருடைய சில வானொலி நாடகங்களைப் பற்றி விரிவாக நோக்குவோம்.

             முதலில் இவருடைய ‘ஆராத்திக் கல்யாணம்’ என்னும்; நாடகத்தினைப் பற்றி நோக்குவோம். இந்நாடகமானது சீதனத்தைப்பற்றியும் அதிகமாக சீதனத்தை கேட்கும் மாப்பிள்ளை வீட்டாரைப்பற்றியும்ää அதனை கொடுக்காமல் திண்டாடும் பெண் வீட்டாரின் நிலைமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

இவ் வானொலி நாடகத்தில் உதுமான் (பெண்ணின் தந்தை)ää சலுகா (மாப்பிள்ளையின் தாய்)ää பைசானா (மாப்பிள்ளையின் தங்கை)ää முஸ்வா முதலாளி (சலுகாவின் கணவனின் நண்பன்) ஆகிய பாத்திரங்களினூடாக கதை நகர்த்தப்பட்டுள்ளது.

     சுப்பர் புரோக்கர் எதையும் சுப்பர் என்று கூறுவதனாலேயேää அவனை எல்லோரும் இப் பெயர் கொண்டழைத்தனர். இவன் உதுமானின் மகளை சலுகாவின் மகனுக்கு பெண்ணாக கொண்டு வருகிறான். மாப்பிள்ளை வீட்டார் சீதனமாக வீடுää வளவுää நகைää பணம் ஐம்பதாயிரம் என்று கேட்கää தனது வருமானத்தினால் அத் தொகையை கொடுக்க முடியாது என்று பெண்ணின் தந்தை கூற அப்போது முஸ்வா முதலாளி வந்து நாற்பதாயிரமாக்கி நடுநிலையில் நின்று முடிவினை  கூறுகின்றார். மாப்பிள்ளை மோட்டார் வண்டியும வாங்கிக் கேட்க அதனையும் கொடுக்கின்றார்.

                உதுமான் பெண் பார்க்க வந்தவர்களை பலகாரம்ääபழம்ää பிஸ்கட்ää கற்கண்டுää குளிர்பானம்ää இனிப்புää வெற்றிலைää பாக்குää பாய்ää படிக்கம்ää சக்கரைää வெடிக்கட்டு முதலானவற்றைக் கொண்டு சிறப்பாக உபசரிக்கின்றார். மாப்பிள்ளையின் தங்கை பைசானா மருதாணியை பெண்ணுக்கு போட்டு விட்டு ஆராத்தியையும் எடுக்கின்றாள். பின்னர் பகல்வர்த்தி கொழுத்துகின்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

             மாப்பிள்ளை வீட்டார்ää வாங்கிக் கொடுத்த மோட்டார் வண்டி பழையதொன்றும்ää உதுமானின் வீட்டுக்கு பூசப்பட்டுள்ள வர்ணப் பூச்சு பட்டிக் காட்டு நிறம் என்றும்ää குறை கூறியதுமில்லாமல் புதிய மோட்டார் வண்டி வாங்கித்தர வேண்டும்ää இளம் நிறத்தில் வீட்டுக்கு வர்ணம் பூச வேண்டும்ää மாப்பிள்ளையின் தங்கைக்கு தங்க நகைகள் போடவேண்டுமென்று நிபந்தனைகளை விதிக்கää அதனை நிறைவேற்ற முடியாமல் வாக்கு வாதங்களில் திருமணம் தடைப்படுகின்றது. 

                      உதுமான் சுப்பர் புரோக்கரைப் பார்த்து “கலியானம் முடியக்கொள என்ட சிறு வால் மட்டும் தான் மிஞ்சும்ää மாப்பிள்ளை என்ன இன்ஜினியரா? ஜிலாக்குத்தரா? கரிக்கட்டி சொத்தைக்கு கொம்பனி சைக்கிள் வேணுமாம் கொம்பனி சைக்கிள்”3என்று கூறுவதனூடாக அவர்களுடைய பேச்சு வழக்கினை அறிந்து கொள்ளலாம். ஆர்.எம்.நௌஸாத் சிறந்த முறையில் பேச்சு வழக்கினை கையாண்டுள்ளார் என்று கூறமுடியும். 

‘காகித உறவுகள்’ என்னும் இன்னொரு வானொலி நாடகத்தினைப் பற்றி நோக்குவோம். இந்நாடகமானது தன்மானத்தை பெரிதாகவும் உயிர் மூச்சாகவும் நினைக்கின்ற குடும்பத் தலைவனைப் பற்றியும் அவனுடைய தன்மானத்தால் மகளுக்கு கேட்கப்பட்டிருந்த திருமணம் தடைப்படுகின்ற துன்பத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

இவ் வானொலி நாடகத்தில்; றசாக் மாஸ்டரின் குடும்ப அங்கத்தவர்களே கதாபாத்திரங்களாக காணப்படுகின்றனர். றசாக் மாஸ்டர் (குடும்பத் தலைவன்)ää சுகறா(மனைவி)ää றியாஸ்(மகன்)ää பாத்திமா (மகள்ää இவர் திருமணம் கேட்கப்பட்டுள்ள பெண்)ää ஆதிகா (இளைய மகள்)ää அர்சாத் (மாப்பிள்ளை) ஆகியோர் இந் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக காணப்படுகின்றனர்.

                 பாத்திமாவை அர்சாத்துக்கு பெண்ணாக கேட்கப்பட்டிருந்தது. அர்சாத்தின் தந்தையார் திருமணத்திற்கு பின்னர் கேட்டிருந்த சீதனக்காசு இருபத்தைந்தாயிரத்தை திருமணத்திற்கு முன்னரே தரும்படி கேட்டதனால்ää றசாக் மாஸ்டரும் அவருடைய மனைவியும் பணத்தை எவ்வாறு கொடுப்பது என்பதனை நினைத்து திண்டாடினார். 

               இந்த நேரத்தில் சுகறா தனது கணவனான றசாக் மாஸ்டரைää மாப்பிள்ளை வீட்டில் போய் தவணை கேட்டு வரும்படி கூற தன்மானத்தை பெரிதாக நினைத்து றசாக் மாஸ்டர் அதனை மறுக்கின்றார். சிறிது நேரம் கழிந்த பின் சுகறாää தாய்ää தந்தையை மதிக்காமல் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்த தன்னுடைய மகன் அர்சாத்துடைய வீட்டுக்குச் சென்று பணம் கேட்கää பணத்தை தந்தையை வந்து வாங்கும்படி கூறுகிறான்.
அப்போது சுகறா 

“என்னடா சொன்னää வெல பேசிறியாடா? வெல நீயும் ஒரு மகனாடா! அவர்ர மதிப்பு உனக்கு தெரியலடாää கோடி பணம் கொட்டிக் குடுத்தாலும் தன்மானத்தை இழக்காத றஸாக் மாஸ்டர பொஞ்சாதிடா நான்”4
என்று கூறிவிட்டு வீட்டிற்கு செல்கிறார். இதனை அறிந்த றசாக் மாஸ்டர் “மக்குää மாடு என்ட தன்மானம் காத்துல பறக்குது”5 என்று மனைவியுடன் கோபப்படுகிறார்.

     மாப்பிள்ளை அர்ஸாத்ää தன்னுடை தந்தையின் சீதனக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திருமணத்தை நடத்துவதற்காகவும் தன்னிடமுள்ள இருபத்தைந்தாயிரம் ரூபாவை றசாக் மாஸ்டரிடம் கொடுத்து தன்னுடைய தந்தையிடம் நீங்கள் கொடுப்பது போல் கொடுக்கவும் என்று கூறää றஸாக் மாஸ்டர் இந்த பணத்தை நான் வாங்கினால் எனது தன்மானத்தை நான் இழந்து விடுவேன் என்று கூறிää அப்பணத்தை வாங்க மறுக்கின்றார். அதனால் மகளுடைய திருமணம் தடைப்பட்டு விடுகின்றது. மகளும் தந்தையின் தன்மானத்தை விற்று தனக்கொரு வாழ்க்கை தேவையில்லை என்று கூறி தனது விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறாள். இதுவே இக்காகித உறவுகள் என்னும் வானொலி நாடகத்தின் கதையாகும்.

            இந் நாடகத்தில் சுகறாää றஸாக் மாஸ்டரின் உரையாடல்களின் மூலமாக அவர்களுடைய பேச்சு வழக்கினை அறியலாம்.

“சுகறா நீ இன்னும் சின்னப்புள்ள மாதிரித்தான் பேசுற. இந்த கல்யாணம் செய்றதுக்குää இந்த மாப்பிள்ளையை எடுக்கிறதுக்கு நாம பட்டபாடு ஒனக்கு தெரியாதா?”
(நௌஸாத்ääஆர்.ääஎம்.ää(1985-1990)ää வானொலி நாடகம்)
“ஏ மகனா?யாருடைய மகன் ஓ மகனா? மகனாம் பெரிய மகன் பெத்து வளர்த்த நன்றி துளி கூட இல்லாம அவன் விரும்பின ஒருத்தியோட….”
                    (நௌஸாத்ääஆர்.ääஎம்.ää(1985-1990)ää வானொலி நாடகம்)
நௌஸாத் அவருடைய வானொலி நாடகங்களில் மக்களின் வாழ்வியல் அம்சங்களை பேச்சு வழக்கினூடாக சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். 



2.2.2 சிறுகதைகள்

நௌஸாத் ‘வல்லமை தாராயோ’ எனம் சிறுகதைத் தொகுதியினை முதன் முதலாக 2000 ம் ஆண்டில் வெளியிட்டார். இது எட்டுச் சிறுகதைகளை உள்ளடக்கியது. இச் சிறுகதை விமர்சனம்ää மற்றும் இரசனைக்;குறிப்பு எழுதுகின்ற அறிஞர்களால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படாமல் முடங்கி விட்டது. பற்பல இலக்கிய போட்டிகளில் பரிசு பெற்ற 12 சிறுகதைகளைத் தொகுத்து ‘வெள்ளிவிரல்’ என்னும் பெயரில் தொகுதியாக வெளியிட்டார். இது 2001 இல் அரச சாகித்திய விருதையும்ää மாகாண சாகித்திய விருதையும் பெற்றது.  

            நௌசாத்திடம் சிறுகதைகளில் வார்ப்பு நிலை பற்றி கேட்டபோதுää
“இது விரிவான விடயம். ஒரு சிறுகதையின் வெற்றிக்கு  பல காரணங்கள் இருந்த போதிலும் என்னைப் பொறுத்த வரையிலும் இதுவரை அறியப்படாத தளங்களில் இருந்தும்ää அறியப்பட்ட தளங்களில் உள்ள தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கின்றேன். முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்கிறேன். அப்புறம் அவர் என்னை வாங்காமல் போகமுடியாதபடி செய்து விடுவது எனது கதை தந்திரம்” என்று குறிப்பிடுகிறார்.

இவர் 18ற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவருடைய‘வல்லமை தாராயோ’ எனும் தொகுதியில் மலர்வு 74 உதிர்வு 98ää சாந்திää கனவுப்பூமிää நுஸ்ரீஓம்ää ஸீனத்ää இலகிமாää அணிலே அணிலே! ஓடிவாää நல்லதொரு தூரோகம் ஆகிய சிறுகதைகள் உள்ளன. வெள்ளி வரல் தொகுதியில் தாய் மொழிää வதனமார்ää வெள்ளி விரல்ää விட்டு வடுதலையாகிää வேக்காடுää கல்லடிப்பாலம்ää மீள் கதவுää கால வட்டம்ää தலைவர் வந்திருந்தார்ää நல்லதொரு துரோகம்ää ஸீனததும்மாää சாகுந்தலம் ஆகிய சிறுகதைகள் உள்ளன. ‘வல்லமை தாராயோ எனும் தொகுதியில் வந்துள்ள சில சிறுகதைகள் ‘வெள்ளி விரல்’ எனும் தொகுதியிலும் அமைந்துள்ளது.

இவருடைய சில சிறுகதைகளைப்பற்றி விரிவாக நோக்குவோம். ‘வெள்ளி விரல்‘ எனும் சிறு கதையானது மக்களிடம் காணப்படுகின்ற பேய்ää பிசாசுää சூனியம் முதலான நம்பிக்கைகளால் பூசாரிமாரை நம்பிப் போவது அவர்கள் மந்திரம் என்ற பேரில் பல பொருட்களை வாங்கிவரும்படி கேட்டுää அதனைக் கொண்டு மந்திர உச்சாடனங்கள் செய்து மக்களை நம்பவைப்பதுääஇளம் பெண்களுடன் பூசாரிமார் தகாத முறையில் நடந்து கொள்வதனையும் சுட்டுகின்றது.

இச்சிறுகதையில் “ம்மா……உன்ட பேத்திக்குப் பெரிசா ஒன்டுமில்ல வருத்தம்.ஆனா இவளுக்கு தின்கி;ற சாமான் ஒண்டல பில்லி சு10னியம் செஞ்சி உள்ளுக்கு குடுத்திருக்கு. அது உள்ளுக்கு இருக்குற மட்டுக்கும் இப்படித்தான் ஆண்களின் உடம்பு பட்டால் தீப்பற்றி எரியும். அதை வெட்டி விட்டால் தான் இது அடங்கும் குளிராகும்”7“இதெல்லாம் எங்க பாபா தேடி எடுக்கிற நாங்க”8ஆகிய பேச்சு வழக்கினை அறியலாம். 

                  நௌஸாத்தின் ‘மீள்கதவு’ என்னும் சிறு கதை யுத்தத்தில் தனது கையை இழந்த ஒருவன் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் அங்கயீனருக்கான பணத்தைப் பெறää அலுவலகரிடம் சென்று அவமானப்படுவதனையும்ää அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பணத்தைப் பெற அவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டிய தேவைக்குள்ளாவதை எடுத்துக்காட்டுகின்றது. 

                   இச் சிறுகதையில் வினாக்களை அலுவலகரிடம் கேட்பது போலவே இதன் ஆரம்பம் காணப்படுகின்றது. அதிகாரிகள் சிங்களம்ää தமிழ் இரண்டு மொழிகளையும் பேசுவதனையும் காணமுடிகின்றது. 
“மே…. மச்சான் பொட்டக் என்டக்கோ… மொனஹரி கியனவா முக்குத் தேருன்நே…”9
                  இவருடைய சாந்;தி எனும் சிறுகதையானது திருமணம் முடித்த இளம் தம்பதியினருக்கு இரண்டு வருடங்களின் பின் ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கின்றது. அக் குழந்தைக்கு தந்தை ஒரு பெயரை சூட்ட நினைக்க தாய் வேறு ஒரு பெயரை சு10ட்ட நினைக்கிறாள். இதனால் குடும்பத்தில் ஏற்படுகின்ற சிறு பிரச்சினைகளும் காட்டப் படுகின்றது.

“நாமென்ன அறபா கதைக்கம் அறபுல பெயரு வைக்க”10“ப்பிடிப் பெயரு நம்மட ஆக்களுக்கு இல்லையே மாஸ்டர். நல்ல இஸ்லாமான பெயரப் பார்த்து வெய்ங்களன். இது என்ன சாதிப்பேரு… சாந்தின்டா சிவாஜிர படம்”11
ஆகிய நயமிக்க பேச்சினை நௌஸாத் கையாண்டுள்ளார்.
2.2.3 கவிதைகள்

ஆர்.எம்.நௌஸாத் கவிதைகள் சிலவற்றையும் எழுதியுள்ளார். அந்த வகையில் 1982ம் ஆண்டிலேயே ‘தூது’ எனும் சிற்றிதலுக்கு ஆசிரியராக இருந்தார். 1-16 இதழ்கள் வரைää அவருடைய நண்பர் றபீக்குடன் சேர்ந்து வெளியிட்டார். தூதில் ஒரு சில கவிதைகளையும் எழுதியுள்ளார். 
             கவிதைத் துறையில் தங்களுடைய படைப்புக்களைனப் பற்றி கேட்ட போது 
“1985 களில் போர்க்காலச் சு10ழலில் உற்பவித்த ரோணியோக் கவியேடுகளில் அன்புடன் இன்னாலில்லாஹ்ää தீவை என்றெல்லாம் தூள் கிளப்பிக் கொண்டிருந்தாலும் ‘தூது’ என்ற பெயரில் 16 இதழ்களை அச்சில் கொணர்ந்தேன். இது ஒரு கவிதைச் சிற்றிதழ் தூதில் ஆசிரியர் தலையங்கங்களை குறும்பாää வெண்பா வடிவங்களில் எழுதிப் பரிசோதித்தேன். பின்னர் ஹைக்கூ கவிதைகளுக்காகவே ‘புள்ளி’ என்ற சிறிலங்காவின் முதல் ஹைக்கூ கவியேட்டை நண்பர் றபீக்குடன் இணைந்து கொணர்ந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

           தூதில் வெளியாகிய இவருடைய சில கவிதைகளை நோக்குவோம்ää 1985ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகிய தூதில் எட்டாவது இதழில் ‘யமுனைக் கரையில் நுரைப்பூக்கள்’ என்னும் கவிதையினை எழுதியுள்ளார். இயற்கையிடம் கேள்வி கேட்பதாகவும் இறுதியில் பதிலை அவர் கூறுகின்ற பாங்கில் இக்கவிதையினை புணைந்துள்ளார். இயற்கையிடம் பேசும் போது ஒரு பெண்ணிடம் பேசுவது போல் பாவனை செய்து பேசுகிறார். அக்கவிதையின் சில வரிகள் பின்வருமாறுää
“ராதே….
கரு
     மேகம் மறைத்து விட்ட 
ஒரு
     துண்டுப் பிறை நிலவாய்
உன்
வெள்ளைச் செவி கூடச்
     சுற்று
சிவந்திருப்பதேனடி”12
                         இவருடைய அடுத்த கவிதை தூதின் 13வது இதழில் 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டது. இது‘நமோ… நமோ…விடுதலைப் புலிகள்’ என்ற கவிதையாகும். இக் கவிதை விடுதலைப்புலிகளினுடைய ‘தனிநாட்டு’ கோரிக்கையை வைத்து புனையப்பட்டுள்ளது. இதனை பின்வரும் கவி வரிகள் புலப்படுத்தும்.
“பாதி மாங்காய் வேண்டி 
கத்தி தூக்கிய கணங்கள்…
போதி மரம் வீழ்த்த
போதித்த உபதேசங்கள்…
களப்பலி வீரரின்
சாகசக் கதைகளால்
சின்ன மனசுகளில் ஊன்றிய 
வீரமுளைகள்…”13

          1988 ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான தூதில் ‘அபாபீல்களும் யானைப் படைகளும்’ எனும் ஒரு கவிதையையும் நௌசாத் எழுதியுள்ளார். இனத்துவேசம்ää இனப்பாகுபாடு முதலானவற்றால் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகளையும்ää துயரத்தையும் உள்ளடக்கியதாக இக் கவிதை புனையப்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டும் எமக்கு சுதந்திரமான வாழ்வு கிடைக்கும் என்று ஆறுதல் கூறுவதாகவும் இக் கவிதை அமைக்கப்பட்டுள்ளது. ‘இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான்’ என்று இக்கவிதையின் ஆரம்பம் காணப்படுவது முஸ்லிம் மக்களுடைய மனதில் நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது. இக்கவிதையின் சில வரிகளை நோக்குவோம்ää

“உம்மாவும்ää ராத்தாவும் முக்காடிட்டு…
   ஒரே வீட்டில் ‘இத்தா’இருப்பார்கள்…
கடைக்குப் போன காக்காவைக்
கடத்திப் போன சேதியும் வரும்
   துப்பாக்கிக் குண்டுகளால் அவருக்குத்
‘தல்கீன்’ ஓதிய ஓசையும் கேட்கும்”14


“எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்
பொறுங்கள்….
எங்கள் ‘அபாபீல்கள்’ இப்போது தான்
தம் சொண்டுகளைக் கூராக்கவும் 
இறக்கைகளை வலிமைப்படுத்தவும் 
கிழக்கு நோக்கிப் பறக்கின்றன…’’
                 (நௌஸாத்ääஆர்.ääஎம்.ää( மார்ச் 1998)ää தூதுääப.6.)


2.2.4 நாவல்கள்

ஆர்.எம்.நௌஸாத் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிலே நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில குறுநாவல்கள்.இவருடைய முதல் குறுநாவல் ‘வானவில்லிலே ஒரு கவிதை கேளு’ என்பதாகும். இந்நாவலின் வார்ப்புää கல்லடிப் பாலத்தில் உருவானது. ஈழநாதம் பத்திரிகையில் 2005 தொடக்கம் ஏழு தொடர்கள் ஏழு வர்ணங்களாக வெளியானது. இக் குறு நாவலில்ää ஏழு வர்ணங்களின் சிறப்பினை நாவலாசிரியர் முதலில் கூறிவிடுவது தனிச்சிறப்பாகும். 
இக்குறுநாவலின் கதையானது தக்க வேலை கிட்டாத பட்டதாரி பெண் இருவருக்கு வங்கியில் வேலை கிடைப்பதும்ää பயிற்ச்சிக்காக வங்கிக்கு சென்று வருபவர்களின் வாகனங்கள் மோதி வெடிப்பதால் மரணிக்கின்ற செய்தியினையும் கொண்டதாக புனையப்பட்டுள்ளது. 

“இந்தப் பயங்கரக் கோரத்தையும்ää எரிந்த பயங்கர கோலத்தையும் மேலே வர்ணிக்கப்பட்ட வானவில் மட்டும்ää பார்த்துக் கொண்டிருந்தது. தனிமையாக அதன் வர்ணங்களும் கலைந்து கொண்டிருந்தன.வெறும் வெள்ளைக் கனவுகளாக …”15 என்று இக் குறுநாவலின் முடிவினை அமைத்துள்ளார்.

                   இவரின் இரண்டாவது குறுநாவல்; “பள்ளி முனைக் கிராமத்தின் கதை” என்பதாகும். இது 2003 தொடக்கம் முஸ்லிம் குரலில் தொடர்ச்சியாக 40 அங்கங்களாக பிரசுரமானது. இந் நாவல் 1990 களில் தென்கிழக்கின் யுத்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அக்காலத்து அரசியல் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக் கிராம மக்களின் வாழ்வியல் பற்றிய இக் குறுநாவல்ää பின்னர் தனி ஒரு முழு நாவலாக ‘கொல்வதெழுதல் 90’ என்ற பெயரில் வெளியிடப்படவுள்ளது.

நௌஸாத்தின் மூன்றாவது முழு நாவல் ‘நட்டுமை’ ஆகும். இது கிழக்கு மண்ணில்; 1930 களில் வாழ்ந்த விவசாய மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது. கிழக்கு முஸ்லிம்களின் வட்டார வழக்கு பேச்சோசையில் ஒலிக்கும் இந் நாவல் கடல் கடந்து தமிழ் நாட்டில் சுந்தரராமச்சாமியின் நினைவு நாவல் போட்டியிலும் முதற் பரிசினைப் பெற்றது. 2009ல் காலச்சுவடு வெளியீடாக வந்தது. 

இவருடைய நான்காவது குறுநாவல் ‘சாந்தமாமா’ஆகும். இது இன்னும் பிரசுரமாகாமல் உள்ளது. இவருடைய ஐந்தாவது நாவல் ‘யுத்த பிக்குகள்’ என்பதாகும். இது தற்போது உருவாக்கத்தில் உள்ளது. 

நௌஸாத்திடம் நாவல் துறை முயற்;சிகள் பற்றிக் கேட்டபோதுää
“முஸ்லிம் குரலில் வெளியான ‘பள்ளி முனைக் கிராமத்தின் கதை’ நாவலின் தளம் ஒலுவில் கிராமத்தில் போடப்பட்டது. பரிசு பெற்ற ‘நட்டுமை’ நாவலின் கரு சம்மாந்துறையின் வயல் வெளிகளில் இருந்து கிடைத்தது. ஈழநாதம் இதழில் வெளியான ‘வானவில்லிலே ஒரு கதை கேளு’ குறுநாவலின் வார்ப்பு கல்லடிப் பாலத்தில் உருவானது. ‘சாந்தமாமா’ குறுநாவல் தீகவாவி விகாரையில் கருக் கொண்டது. இப்படிப் பல தளங்கள் பல கருக்கள் எனினும் இவை வடிவத்தாலும் செதுக்கல்களாலும் ஒரு போதும் முழுமையுறுவதாயில்லை. ஒன்றுமே எனக்கு நிறைவு தருவதாயில்லை.’’16 என குறிப்பிட்டுள்ளார். 


2.3 ஆர்.எம்.நௌஸாத்தினுடைய இலக்கியப் படைப்புக்களினுடாகப் பெற்ற
   வெற்றிகள்.

      நௌஸாத்தின் படைப்புக்களுக்கு கிடைத்துள்ள வெற்றிகள்; மிகவும் பாராட்டிற்குரியது. இவருடைய பெரும்பாலான சிறுகதைகள் விருதுகளையும் முதலாம்ää இரண்டாம் பரிசுகளையும் பெற்றுள்ளன. இவருடைய நாவல்கூட கடல் தாண்டி இந்தியாவிற்கு சென்று முதற் பரிசினையும் பெற்றுக் கொண்டது. இவர் பெற்ற வெற்றிகள் பின்வருமாறுää

1998 இல் ‘தினக்குரல்’ நாளிதழும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடக போட்டியில ‘காகித உறவுகள்’ என்னும் வானொலி நாடகத்திற்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது. 
‘ஒரு கிராமத்தின் கவிதை’ என்னும் வனொலி நாடகம் முஸ்லிம் சேவையில் 25 தடவைகள் ஒலிபரப்பானது. இது கூட அவருடைய வானொலி நாடகத்திற்கு கிடைத்த வெற்றியே.
1998 இல் ‘நல்லதொரு துரோகம்’ என்ற என்ற கிறுகதைக்கு பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்கம் முதற் பரிசாக தங்கப்பதக்கம் அளித்தது. 
இவரது ‘சாகும்-தலம்’ சிறுகதை தமிழ்நாட்டு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற் பரிசினைப் பெற்றது. 
‘கனவுப்பூமி’ என்ற இவருடைய சிறுகதைää இலங்கை சு10ழல் பத்திரிகையாளர் சங்கம் அகில இலங்கை ரீதியியல் நடத்திய சிறுகதைப் போட்டியில’ சிறப்புச் சான்றிதழை 1994ல் பெற்றது. 
2008இல் ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை நடத்திய புலோலியூர்ääக.சதாசிவம்ää ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்;டியில் ‘தாய்-மொழி’சிறுகதை முதற் பரிசினைப் பெற்றது.
2009இல் ‘ஞானம்’ சஞ்சிகை நடத்திய செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞபகார்த்த சிறுகதைப் போட்டியில் ‘வதனமார்’ என்ற சிறுகதை ஆறுதல் பரிசைப் பெற்றது. 
2008இல் கனடா ஒட்டோவா தமிழ்விழி இணைய இதழ் நடத்திய (புலம் பெயராதோருக்கான) சிறுகதைப் போட்டியில் ‘விட்டு விடுதலையாகி…’ எனும் சிறுகதை மூன்றாவது பரிசினைப் பெற்றது. 
2008இல் அக்கரைப்பற்று ‘தலைவர் அஸ்ரப் மன்றம்’ நடத்திய இலக்கியப் போட்டியில் ‘வேக்காடு’ என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது. 
2007இல் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய புலோலியூர். க. சதாசிவம் ஞாபகார்த் சிறுகதைப் போட்டியில் ‘கல்லடிப்பாலம்’ என்ற சிறுகதை ஆறுதல் பரிசினைப் பெற்றது. 
2008இல் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய புலோலியூர். க. சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் ‘மீள்தகவு’ என்ற சிறுகதை மூன்றாம் பரிசினைப் பெற்றது. 
2008 இல் ஈழநாதம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘காலவட்டம்’ என்ற சிறுகதை முதற்; பரிசினைப் பெற்றது.
1990இல் யாழ் மருதாணி கலை இலக்கிய வட்டம் தன் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘ஸீனத் தும்மா’ என்ற சிறுகதை இரண்டாம் பரிசினைப் பெற்றது.
2011இல் ‘வெள்ளி விரல்’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு அரச சாகித்திய விருதும்ää கிழக்கு மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்ட சிறப்பினை நௌசாத் கொண்டுள்ளார்.
இவருடைய ‘நட்டுமை’ என்னும் நாவல்ää தமிழ் நாடு ‘காலச்சுவடு’ இதழ் நிறுவனர்  சுந்தர ராமசாமியின் 75வது இலக்கியப் போட்டியில் முதற் பரிசினைப் பெற்றது.





2.4 ஆர்.எம். n;நளஸாத்தின் இலக்கியப் படைப்புக்கள் பற்றி வெளியான விமர்சனங்கள்

நௌஸாத்துடைய இலக்கியப் படைப்புக்களான வானொலி நாடகங்கள்ää கவிதைகள்ää சிறுகதைகள்ää நாவல் ஆகியவை பற்றி வெளியான விமர்சனங்களை பின்வருமாறு நோக்குவோம்ää
     இவருடைய ‘வெள்ளி விரல்’நூல் பற்றியும் அதற்கு கிடைத்த சாகித்திய விருதுகளைப் பற்றியும் விமர்சனங்களில் கூறப்பட்டுள்ளன. 
“சாய்ந்தமருதைச் சேர்ந்த தீரன் ஆர்.எம். நௌஸாத் எழுதிய வெள்ளி விரல் என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுதி தமிழ் நாடு காலச்சுவடு பதிப்பாக வெளிவந்தது. இந்நூலுக்கு ஒரே ஆண்டில் தேசிய அரச விருதும்ää கிழக்கு மாகாண சாகித்திய விருதும் கிடைத்துள்ளது.”17

நௌஸாத்தைப் பற்றியும் அவருடைய கதை எழுதுகின்ற திறமையினையும் பற்றி நிஸாம் என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

“தான் வாழும் சமூகக் கட்டமைப்பின் கூறுகள் மீதான தீவிரமான உணர்வுகளையுடைய ஒரு படைப்பாளியும் ஒரு வித்தியாசமான கதை சொல்லியும் ஆவர். அவர் தன் கதைகளுக்கு போர்த்தியுள்ள ஒரு ‘மாய நடையும்’ தன் கதைகளில் கையாண்டுள்ள நவீன உத்திகளும் தேர்ந்தெடுத்துவித்தியாசமான கதைக்களங்களும் பட்டவர்த்தமான உரையாடல் மொழிகளும் நம்மை அவரது கதைகளோடு மிகவும் ஒன்றிக்கச் செய்து விடுகின்றது”
         (நிஸாம்ääஎமää;ரீääஏ.ää(2011)ää வெள்ளி விரலின் முன்னுரைää ப.13)
உமாவரதராஜன் நௌஸாத்தைப் பற்றிää
“வாசகர்களில் தன் உணர்வுகளைத் தொற்ற வைக்கும் இந்த வெற்றிää எழுத்தாளர்களுக்கு இலகுவில் கிட்டுவதில்லை. இதனை இவர் சிறப்பாக கையாண்டுள்ளார் என்பது எனது அபிப்பிராயமாகும.;”18
என்று குறிப்பிட்டுள்ளார். 
நட்டுமை நாவலைப் பற்றி ஏ. எம். ஏம். ஜாபிர் என்பவர் பின்வருமாறு விமர்சித்துள்ளார். 
“நட்டுமை நாவலில் உருவாக்கப்பட்டுள்ள பாத்திர வார்ப்புக்கள் பற்றி தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். பெரிய போடியார்ää சின்னப் போடியார்ää முகம்மது அனிபா போன்ற யதார்த்த பாங்கிலான பாத்திரங்கள் இயல்பாக உரையாடி நாவலை வாசித்து முடிந்த பின்னரும் நம்மோடு வாழ்கின்றனர். நட்டுமைää கிராமிய மணத்தை மனசில் எழுப்பும் எழுத்து மழை மட்டுமல்ல. அது கிராமிய அலைகளால் இரையும் நாவல் கடல்! காலத்தால் பேசப்படும் இந் நாவலைத் தந்த தீரன் ஆர். எம். நௌஸாத் நாவலாசிரியருக்கு நமது பாராட்டுக்கள்.”
                    (ஜாபிர்ääஏääஎம்ääஎம்.ää(2010.12.19)ää‘கிராமிய அலைகளால் இரையும் கடல்’ää நவமணிää ப.06)

 நவாஸ் சொளபி ‘நட்டுமை நாவலைப்பற்றி பின்வருமாறு விமர்சித்துள்ளார். 
“குறிப்பிட்ட கால கதை மாந்தர்களின் வாழ்வியல் அம்சங்களில் அவர்களது விவசாய நிலங்கள் தவிர்ந்த பாய் இழைத்தல்ää மண்பானைää சட்டி வேலைகள்ää பனை ஓலைப் பெட்டி பின்னுதல்ää கிடுகு இழைத்தல்ää கைப்பணிப் பொருட்;கள் என்று குடிசைத் தொழில் அம்சங்கள் எதுவும் நட்டுமையில் கொண்டுவரவில்லை. இதற்கான கதைக்களங்கள் பல இடங்களில் தோற்றுவிக்கும் நட்டுமை இவ்விடயங்களை ஓரிடத்திலும் பேசாதுää கை நழுவ விட்டிருக்கிறது.
(நவாஸ் சௌபிää (2010.08.22)ää ‘தீரன் ஆர்.எம்.நௌஸாத்தின் ‘நட்டுமை’ கிராமியப் பண்பாடுகளின் நூதனசாலை’ தினகரன் வார மஞ்சரிää ப.21)
        நட்டுமை நாவலைப்பற்றி நூறுல்ஹக் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 
“நட்டுமை என்ற தலைப்பு தொடக்கம் இந் நாவல் பாத்திரங்கள் உரையாடல் முறை வரை தென் கிழக்கு முஸ்லிம்களிள் பயன்படுத்தும் வழக்கு மொழி நடையில் கையாளப்பட்டிருப்பது இந் நாவலின் சிறப்புக்களில் பிரதானமான ஒரு விடயமாகும்.”19
                              இவ்வாறு ‘நட்டுமை’ நாவல் பற்றியும் நௌஸாத்தின் திறமையினைப் பற்றியும் சிறுகதைத் தொகுதிகளைப் பற்றியும் விமர்சனங்கள் வந்துள்ளன. 


அடிக்குறிப்புக்கள்

01. ஜெகாää (2013.11.03)ää‘நாவல் எழுதுவது தனியொரு நுட்பம்’ää தினக்குரல் 
    மஞ்சரிää ப.29
02. மேலதுää ப.29
03. நௌஸாத்ääஆர்ääஎம்.ää(1985-1990)ää‘ஆராத்திக் கல்யாணம்’ääவானொலி நாடகம்
04. நௌஸாத்ääஆர்ää எம்.ää (1985-1990)ää ‘காகித உறவுகள்’ää வானொலி நாடகம் 
05. நௌஸாத்ääஆர்ää எம்.ää (1985-1990)ää ‘காகித உறவுகள்’ääவானொலி நாடகம்
06. ஜெகாää (2013.11.03)ää ‘நாவல் எழுதுவது தனியொரு நுட்பம்’ääதினக்குரல் 
    மஞ்சரிää ப.29
07.நௌஸாத்ääஆர்ää எம்.ää (2011)ääவெள்ளி விரல்ää ப.40.
08. மேலது;ää ப.41.
09. மேலதுää ப.73.
10. நௌஸாத்ääஆர்ää எம்.ää (2000)ää வல்லமை தாராயோää ப.47.
11. மேலதுää ப.55.
12.நௌஸாத்ää ஆரää;எம்.ää (ஆசிரியர்)ää (ஜுலைää1985)ää‘யமுனைக் கரையில் 
   நுரைப் பூக்கள்’ää8ஆவதுதூது சிற்றிதழ்ää ப.02. 
13.நௌஸாத்ääஆர்ää எம்.ää (ஆசிரியர்)ää (ஜுலை – அக்டோபரää;1987)ää‘நமோ.. 
   நமோ..விடுதலைப் புலிகள்’ää13ஆவது தூது சிற்றிதழ்ää ப.03. 
14.நௌஸாத்ää ஆர்ää எம்.ää (ஆசிரியர்)ää (மார்சää;1988)ää‘அபாபீல்களும் யானைப் 
   படையும்’ää 14ஆவது தூது சிற்றிதழ்ää ப.06 
15. நௌஸாத்ääஆர்ää எம்.ää (மேää2005)ää வானவில்லிலே ஒரு கவிதை கேழுää ப.18.
16. நூறுல் ஹக்ääஎம்ääஎம்ää எம்.ää (2011;.02.27)ää‘போட்டிகளில் பரிசு பெறாது திரும்பி 
வந்த எனது சிறுகதைகளை அதிகமாக நேசிக்கின்றேன்’ää செந்தூரம்ää ப.05.

17. (…………)ää (2012.12.15)ää‘வெள்ளி விரல் நூலுக்கு இரு சாஹித்திய
   விருதுகள்’ääஎங்கள் தேசம்ää ப.21.
18. நிஸாம்ää எம்ää ரீää எம்.ää (2010.10.24)ää‘ஆர். எம். நௌசாத்தின் ‘நட்டுமை’
 நடந்த காலத்தின் நிழல் பிரதி’ää ஞாயிறு தினக்குரல்ää ப.31.