Tuesday, December 13, 2016

Wednesday, December 7, 2016

ஊடகங்கள்





தினகரன் 




தினக்குரல்



விடிவெள்ளி  




வீரகேசரி



காலச்சுவடு 



காலச்சுவடு 




எங்கள்தேசம் 
 



நவமணி 





தினகரன் 


Thursday, November 24, 2016

மானா மக்கீன்




2009 இல் தமிழகத்தில் நாவலுக்குப்பரிசு பெற்ற இந்த நவீனத்தைப் படிக்கத் தவறியோர் தேடிப்பெற்றுப் பாருங்கள் !


Saturday, September 17, 2016

எஸ்எல்எம் ஹனிபா




தீரன்! மரியாதைக்குரிய பேராசிரியர் அ.இராமசாமி அவர்களைச்சந்தித்த போது உங்களின் #நட்டுமை#நாவல் பற்றி சிலாகித்துப்பேசியது எமக்கெல்லாம் பெருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள்....

Friday, July 29, 2016

கே.எஸ்.முஹம்மது ஸுஐப்

கிழக்கிலங்கையின ஆன்மாவைச் சொல்லும் நல்ல.நாவல்.நட்டுமை
----------------


காலச்சுவடு பதிப்பகம்.நாகர்கோவில்-1



காலச்சுவடு அறக்கட்டளையின் "சுந்தர ராமசாமி-75" இலக்கியப் போட்டியில் 
முதல் பரிசு பெற்ற நாவல் இது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1930-களில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நீர்ப் பாய்ச்சுவதில் ஏற்ப்பட்டபிரச்சினைகளைப் பின்புலமாக் கொண்டு கிழக்கிலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் பண்பாடு, வாழ்முறை, சமய நம்பிக்கைகள் , பள்ளிவாசல் கொடியேற்று விழா ,திருமணச்சடங்கு முதலானவற்றை அந்த மண்ணின் வாசத்துடன் நட்டுமை யதார்தத்துடன் சித்தரிக்கிறது

வயல்களில் தேக்கி.வைத்திருக்கும் நீரைத் திருட்டுத்தனமாக வரப்புகளி் பிளவுகள் ஏற்படுத்தி வடித்து விடுவதைக் குறிக்கும்‪#‎நட்டுமை‬ எனும் சொல் இலங்கையின் விவசாய கிராமங்களில் கள்ளொழுக்கத்திற்க்கும் உவமையாகப் பாவிக்கப்படுகிறது.இநதத் தலைப்பே நாவலின் மையச்சரட்டையும் குறிப்பாக உணர்த்துகிறது ...என்கிறார் பின்னட்டையில் ...‪#‎ராஜமார்த்தாண்டன்‬

கிழக்கிலங்கயைின் துள்ளல் தமிழ் படிக்க படிக்க இனிப்பதாகும்
காட்டுப்பள்ளியில்.கந்தூரி உற்சவத்தில் கடை பரப்பியிருக்கும் அககால இலஙகை வியாபாரிகள் என்னென்ன பொருட்க்களை விற்றார்கள் என்பதை மட்டும் நாவலில் இருந்து பார்க்கலாம்....
...சிங்கள நாட்டு வியாபாரி வெள்ளையும் சொள்ளையும் தொந்தி வயிறுமாக தனது மார்புகள் பெருத்த "நோனா"வுடன் இம்முறையும் வந்து ஆபரணக்கடை பரப்பியிருந்தார் ...கொண்டை மூடி...கொண்டைக் குத்திகள்...வெள்ளி அட்டியல்கள்...தங்க முலாமிட்ட சரடு..மாலை...கழுத்துக் கொடிகளுடன் பிளாஸடிக் வைரமாலைகள்...கன்னிப் பெண்களும் இளம் மனைவிகளும் அங்கேயே வாங்கி அணிந்து அழகு பார்த்தனர்....

பக்கத்தில் மருதமுனையிலிருந்து ஆடை வகைகளுடன் பாடியிறங்கியிருந்தார் மௌலானா முதலாளி.சந்திரபடி...மோஹினிப்பட்டு...அரமணமூட்டு...அசில் பட்டு...குட்டாப்பட்டு சாறம்களும் கைத்தறிசாறம்களும் பற்பல வர்ணங்களில் அடுககியிருந்தார்...சதா சிரித்துக்கொண்டிருந்தார்.
காத்தான்குடி காஸிம்முதலாளி வழமைபோல் இம்முறையும் தினுசு தினுசாகப் புடவைகள் கொணர்ந்து பரப்பி வைத்து கவர்ச்சியாக்கி காட்சிப்படுத்தி அதைக் காணவரும் பெண்களைக் கவர்ந்துகொண்டிருந்தார் பால் சோமன்...கடுகுவண்ணச் சோமன்...மருதமூட்டு சோமன்...சந்திரபடி..பட்டுச் சோமன் என்று எடுத்தெடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தார் பெண்கள் கூட்டம் அம்மியது.

கண்டியிலிருந்து வண்டியில் தாவளம் கட்டி வந்த கிதுறு நானாவும் அவரது இல்லாள் பீவி பாத்திமாவும் நவீன வெளிநாட்டு புடவைக் கடை பரப்பியிருந்தனர் மாடா வண்ணச் சோமன்...எள்ளுப்பட்டு...முக்கடுக்குச் சோமன்...வெண் பட்டு...நோம்புப் புடவை..சுங்கொடி...மூங்கில் பட்டு...கல்குத்தாஜவுளிகள்...வத்தாலி நூற்சேலைகள்...அத்துராசி அடுக்குகள்...என வகைவகையாக அடுக்கியும்.சிலதைத் தொங்கவிட்டும் விளம்பித்திருந்ததில்......

கல்முனைக்குடி உதுமான்கண்டு தின் பண்டக் கடையில் உட்க்கார்ந்து கொசு விரட்டியபடி கர்ணகடூரமாகக் கத்திக் கூப்பிட்டார்....தேன்...தேன்...வாங்க..வாங்க...திங்க வாங்க...என்று தன்பாட்டுக்கு கூவிக்கொண்டே வன்னியர் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்....
....தாம்பாப் பலகாரம்...பொன்னிறத்தில் மஸ்கட்...எள்ளுத் தூவிய துதல்கட்டிகள்...சோகி...அச்சுப்பணியாரம்...தேன்குழல் முறுக்கு...பதினாலு வகை மிட்டாய்கள்...காப்பு மிட்டாய்...முள்ளு மிட்டாய்...சவ்வு மிட்டாய்..பாம்பு மிட்டாய்...கண்ணாடி மிட்டாய்...என வர்ணமயமாக அடுக்கி பெரிய பெரிய.காகிதச் சுருள்கள் சுருட்டி சுறுசுறுப்பாக வியாபாரம் செய்தார்.தராசின அடிப்பாகத்தில் இரகஸியமாக ஒரு மஸ்கட் துண்ை.ஒடடி வைத்திருந்தார்...(ஹா...ஹா...ஹா...)

( இனி வருவதுதான் சூப்பர்...நம்ம ஐட்டம்...அது எப்போதும் இப்படித்தானோ...ஹா...ஹா...ஹா...)
.....இடது பக்க வரிசைக்கடைகளில தொழுவது எப்படி..?...மௌஸூக்கு மாலை...ஞானரத்தின வலங்காரக் கீர்த்தனம்...பீர் சாகிபு அப்பா பதப்பாடல் திரட்டு...குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் பாகம் ஒன்று...முஸ்லிம் அன்பர்களே...ஹஜ் கடமை...புத்தக அடுக்குகள் வாங்குவாரற்றுக் காட்சியளித்தன....(பக்கம் ..58-59-60)

-இப்படியாக விரிகிறது நாவலின காட்சிகள் .கிழக்கிலங்கையின ஆன்மாவைச் சொல்லும் நல்ல.நாவல்.

௦௦௦௦

Friday, June 24, 2016

மொஹிடீன் சாலி



நேற்றுத்தான் தங்களின் நட்டுமை நாவல் வாசிக்கக் கிடைத்தது. 
1932 காலப்பகுதியை கண் முன் காட்சிப் படுத்தியமைக்கு நன்றிகள்!
..

Friday, June 17, 2016

கிராமத்தான் கலிபா



நட்டுமை பற்றி கிராமத்தான் கலிபா



தீரனின் நட்டுமை நாவலை இடைவிடாமல் வாசித்துவிட்டேன். வாசிப்பின்மீதான உற்சாகத்தை நட்டுமை தந்திருக்கிறது. கிராமத்து வாழ்வியலின் அத்தனை நுனுக்கங்களையும், அசைவுகளையும் பதிவுசெய்திருப்பது தீரனின் தனித்துவத்திறமைதான்.

Sunday, May 29, 2016

எம்.ஆர். ஸ்டாலின்




"நட்டுமை" கடந்த ஒரு சில வருடங்களில் நான்படித்த புனைவுகளில் மிக
சிறந்தது. சகோதரர் நௌசாத்தின்அருமையான படைப்பு.


லபீஸ் ஷஹீத்

ட்டுமை நாவலின் மொழிகவித்துவம் கொண்டது.


நட்டுமை நாவலின் பின்னணி உழைப்பு பிரமிக்கத்தக்கது. கதை நடைபெறும்
காலப்பிரிவான சுதந்திரத்துக்கு முந்தைய
கிழக்கிலங்கையை தத்ரூபமாக சித்தரிக்கும்
மொழி வழக்கு, உணவுக் குறிப்புகள்,
பண்பாட்டுத் தகவமைப்பு என்று ஆசிரியர்
மிகவுமே பிரயத்தனப்பட்டு இருக்கிறார்.
அதீதமான உழைப்பு. யதார்த்தவாத பாணியில்
- யதார்த்தவாதம் என்ற கோட்பாட்டின்
சிக்கல்கள் ஒரு புறம் இருக்க - கதை கூறிச்
செல்கிறது நட்டுமை. ஆனால் நாவலில்
அன்றைய நிலவுடமை சமூகத்தின் உள்
முரண்கள் மெளனமாக்கப்பட்டுள்ளன.


பியூடலிசம் சார்ந்த போடியார் எனப்படும்
பாத்திரம் ரொமண்டிசைஸ் பண்ணப்பட்டுள்ளது.
அரசியல் நீக்கம் செய்யப்பட்ட தூய கலை
என்பவர்கள் இந்த நாவலை நெருடலின்றி
ரசிக்கலாம். ஆனால் சமகாலத் தன்மையுடன்
Political Correctness கொண்ட பிரக்ஞை
கொண்டவர்கள் நட்டுமை நாவலின்
கட்டமைப்பை கடுமையாக விமர்சனமே
செய்வார்கள். 

நட்டுமை நாவலின் மொழிகவித்துவம் கொண்டது. ஆனால் உள்ளடக்கம்
வரலாறு சார்ந்த இருட்டடிப்பு கொண்டது.
ஆயினும் அருமையான Pleasure of the Text
இனை தரும் பிரதியே நட்டுமை என்பதை
மறுத்திட முடியாது.

0

நட்டுமையின்பிரதான கரு களவொழுக்கம்,,, அதைச்சுற்றிகதைசுழல்வதால் ஏனைய பல விடயங்கள் விடுபட்டுள்ளன...என்பது உண்மைதான்---இதுவே என் பணிவான வாக்குமூலம்-
மிக்கநன்றி - நண்பரே... Lafees Shaheed

Friday, January 1, 2016

ஜிப்ரி ஹாசன்

தீரன் ஆர்.எம். நௌஸாத்தின் ‘நட்டுமை: புது வெளிச்சம் நம்மை நோக்கிப் பாயும்
===================



 ஆர். எம். நௌஸாத்தின் ‘நட்டுமை’ எனும் நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு விவசாய குடியான் சமூகமொன்றுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதான உணர்வை வாசகனுக்குள் இந்த நாவல் ஏற்படுத்தி விடுகிறது. குறிப்பாக கிழக்கிலங்கையின் குடியான் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கையின் பௌதீகத் தோற்றத்தையும் அதன் உட்புற அம்சங்களையும் நேர்கோடுகளால் நௌஸாத் வரைந்திருக்கிறார். 

இப்படியான கிராமிய குடியான் முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்களை நமது சில படைப்பாளிகள் சிறுகதைகளில் தொட்டிருக்கிற போதிலும் ஒரு நாவல் வடிவமாக எனக்கு அதனை வாசிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுதான்.


இவரது ‘நட்டுமை’ எனும் இந்நாவல் காலச்சுவடு பதிப்பாக 2009ல் வெளிவந்துள்ளது. சுந்தரராமசாமி நினைவு நாவல் போட்டியில் முதலிடம் பெற்ற நாவல் இது.

தீரன் ஆர்.எம். நௌஸாத்தின் படைப்புகள் மீது எனக்கு எப்போதும் ஈடுபாடு இருந்தே வந்துள்ளது. அநேகமாக அவரது எழுத்துகள் கிழக்கிலங்கை குடியான் முஸ்லிம்களின் ஒரு காலகட்ட வாழ்க்கையை அமரத்துவமுடைய இலக்கியப் படைப்பாக்குபவை. அந்தவகையில் நட்டுமை நாவலை கிழக்கிலங்கை விவசாய குடியான் முஸ்லிம்கள் குறித்த ஓர் இனவரைவியல் (ethnography) பதிவாகவும் கருதலாம். நாவலின் பின்னட்டையில் ராஜமார்த்தாண்டன் எழுதி இருக்கும் குறிப்புகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவேயுள்ளது.


அவரது ‘வல்லமை தாராயோ“ சிறுகதைப் தொகுப்பபை முன்பு வாசித்திருக்கிறேன். அதிலுள்ள சிறுகதைகள் சூடும் சுவாரஸ்யமும் நிறைந்தவை. அத்தெகுப்பிலுள்ள எட்டுக் கதைகளுமே எட்டு வெவ்வேறு அம்சங்களைப் பேசுபவை. அக்கதைகளின் பேசுபொருள் இன்னும் காலாவதியாகவில்லை என்பதே என் கணிப்பு.


தீரன் நௌஸாத்தின் கதைகள் அவர் வாழும் கிழக்கிலங்கையின் கிராமிய குடியான் முஸ்லிம்களின் ஒரு காலகட்ட வரலாற்றைப் பதிவு செய்வதோடு அவர்களின் அறியாமையையும் அதன் இழப்புகளையும் அதிகார வர்க்கம் சாமான்ய மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மேலும் மேலும் அவர்களை எவ்வாறு நசுக்கியது என்பதையும் அதன் மீட்சிக்கான தேவையையும் தீவிரமாகப் பேசுபவை. சுதந்திரத்திற்குப் பிந்திய ஆபிரிக்க எழுத்தாளர்களின் நாவல்களில் வெளிப்படும் அரசியல் பார்வையையோடு இவரது நோக்கும் ஒத்துப் போகிறது என்று சொல்வது ஒரு மிகையான மதிப்பீடாக அமையாது.


முஸ்லிம் குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த அவரது ஒரு பள்ளிமுனைக் கிராமத்தின் கதையிலும் வந்து சென்ற மனிதர்கள் ‘நட்டுமைக்’குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வாசிப்பின் தொடக்கத்திலேயே உணர்ந்து கொள்ள முடிகிறது. தீரனின் எழுத்துக்களில் சீரியஸ் தன்மையும் கிண்டலும் எப்போதும் ஒரு சேரக் கலந்தே இருக்கும். இந்ததத் தனித்துவம் ஒரு வாசகனை படைப்பில் தொடர்ந்தும் ஈடுபாட்டோடு வைத்திருக்க அவருக்கு உதவும் ஒரு உத்தியாகும்.


எனினும் நமது ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் அவரது படைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடம் என்ன? நமது விமர்சனப் பெருந்தகைகள் (இப்போதும் அப்படி ஏதேனும் இருந்தால்) ஒரு திறமையான படைப்பாளியை எந்த மட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்?. தமிழகத்தில் பல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகளவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. 

நோபல் பரிசு ரேன்ஞ்சுக்கு இன்று அங்கு முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையைப் பொறுத்தவை வாய்ப்பாடு போல ஒரு சில படைப்பாளிகள் மட்டுமே ஒப்புவிக்கப்படுவதும் கண்டுகொள்ளப்படுவதுமான அவலநிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தப் புறக்கணிப்பு மனோபாவத்திலிருந்து நாம் விடுபடும்போது புது வெளிச்சம் நம்மை நோக்கிப் பாயும்.

0

/முஸ்லிம் குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த 
அவரது ஒரு பள்ளிமுனைக் கிராமத்தின் கதை/ 
இதுதான் 'கொல்வதெழுதல் 91' என்ற பெயரில் நூலாக 
வெளிவந்ததென நினைக்கின்றேன்.