Tuesday, March 25, 2025

வி.எம். ரமேஷ். முகநூலில்...

 V.m. Ramesh

February 22 
அருமையான வாசிப்பு அனுபவம். ஈழத்தில் வெளிவந்த அவதானத்துக்குரிய குறுநாவல்களின் வரிசையில் நட்டுமை தனித்துவமானதாக நிச்சயம் இருக்க வேண்டும். 1930 காலங்களில் ஈழத்து கிழக்கிலங்கையில் இஸ்லாமிய பாரம்பரிய கிராமமொன்றில் நிகழும் நம்பிக்கைகள், கலை,கலாச்சார பண்பாட்டு வெளிகளை பசுமையோடு காட்டும் சுமார் 150 பக்கங்களை கொண்ட அற்புதமான குறுநாவல் நட்டுமை.
இந்நாவல் வாசிப்பின் கிராமிய பாரம்பரிய மொழி, பாத்திர வார்ப்பு, கதைக்கருவென மும்முனையில் அதன் அகத்தை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் ஒரு வாசகனுக்கு. பிரதேச அல்லது கிராமிய மொழிகளின் கலை என்பது பிசகில்லாமல் அச்சொட்டாக அதன் அமைப்பின் அழகியல் குன்றாமல் பயன்படுத்துவதிலேயே தங்கியிருக்கிறது. இந்த புனைவின் முழுதும் மீரான் வந்து போய்கொண்டே இருந்தார் மனதில். இஸ்லாமிய கிராமிய பாரம்பரிய மொழி மட்டும் பண்பாட்டுகளை புனைவில் மீரானிடமே கண்டடைந்தேன். அவ்வளவு அன்பும் ஈடுபாடும் அந்த மொழியின் மீரானுடாகவே ஏற்பட்டது. நௌஸாத்தின் இந்த படைப்பில் இன்னும் இன்னும் அதன் ஈரமும் ஈர்ப்பும் உணர்ந்தேன். மக்களின் பண்பாட்டு பாரம்பரிய மொழியை கையாண்டிருப்பார். அந்த மொழிக்காகவே அதன் சாத்தியப்பாடிற்காகவே இந்த நாவலை வாசித்தேன். கிழக்கிழக்கை கிராமிய புனைவு மொழியில் நட்டுமை அகராதியாக இருக்க வேண்டும்.
மற்றையது பார்த்திர வார்ப்பு ஒரு புனைவிற்கு இவ்வளவு கச்சுதமாக பாத்திரங்கள் ஒத்துபோவதை இந்த நாவலில் தான் உச்சகட்டமாக அண்மையில் வாசித்தவற்றில் கண்டேன். ஆர்.எம் நௌஸாத் ஒரு லெஜண்டாக அந்த இடத்திலேயே மின்னுகிறார். அனாவசியமான எந்த உரையாடல்களையோ பாத்திரங்களோ அதன் அகப்புற சூழலோ தீரன் காட்டவும் இல்லை கையாளவும் இல்லை. முக்குலத்து கிழவி வரும் இடங்களெல்லாம் அட்டகாசம் அசகாய ஈரோயினி அவள்தான் கிராமத்தின் ஈரத்தை அவள்தான் உச்சத்தில் பொழிய செய்கிறாள். அதிலும் அவள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றால் போல பாடும் பாடலும் ஓங்கி அழும் ஒப்பாரியும் அது இடம்பெறும் இடமும் டைமிங் அதி அற்புதம். நௌஸாத்தை மிக உயரத்தில் கொண்டு நிறுத்தும் இடங்கள் அவை. அதற்காகவே தாராளமாக ஜே ஜே போடலாம் தீரனுக்கு.
மேலும் நாவலின் கதை கரு பாரம்பரியமான பண்ணை முறையாக இருக்க வேண்டும். இந்த போடியார் வம்சக் கதை ஆங்கிலேயரின் காலம் நிகழ்வதால் அங்கேயே எம்மை அழைத்து செல்கிறார். கதை முன்கூட்டிய தீர்மானத்தை கொடுத்தாலும் புனைவு திரும்பும் இடங்களில் எல்லாம் சின்னதாய் வாசகனுக்கு அனுமானத்தையும் தாண்டிய திருப்பத்தை வைத்திருப்பது நாவலை ஒரே மூச்சில் வாசிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. கட்டாயம் வாசிக்க வேண்டிய. நாவல்.