நிறைவான நாவல் "நட்டுமை"
பஹ்மியா ஷெரீப்
Fahmiya Shareef is with R.M. Nowsaath.
பெயரே வாயில் நுழைய மாட்டேங்குதே..கதை மனசில் நுழையுமா என்கிற சந்தேகத்துடனேயே நாவலை கையிலெடுக்கிறேன்..
கையில் எடுத்தது எடுத்ததுதான் கடைசிப்பக்கம் வரை நிறுத்தாமல் நிறுத்தவிடாமல் மந்திரத்தால் கட்டுப்போட்டு அழைத்துச்செல்கிறது நட்டுமை..
கதை அழகு...கதை சொல்வது அதனிலும் பேரழகு.அந்த கலை அவ்வளவு எளிதில் யாருக்கும் கைகூடுவதில்லை..
ஆனால் தீரர் கதை சொல்வதில் தீரன்தான்...
1930களில் தொடங்குகிறது...
நட்டுமை...அப்படியே டைம் மெசினில் ஏறிச்சென்று நாமும் அந்த மண்ணில் அந்த கதா பாத்திரங்களோடு வாழ்ந்துவிட்டு வந்தாற்போல் கதை முடிந்த பின்னும் மம்மலியும் மைமுனாவும்...பெரிய போடியும் சைனம்புவும் பசளக்கெளவியும் நம்மைச்சுற்றி நடமாடித்திரிகிறார்கள்.
எங்கள் ஊர் ஜுனைதா சரீபின்
சின்ன மரைக்கார் பெரியமரைக்கார் நாவல் படித்தபோதும் இதே உணர்வு ஏற்பட்டது. கிழக்கு முஸ்லிம்களின் அன்றைய பாரம்பரிய வாழ்க்கை முறையினை, நிலச்சுவாந்தர்களின் எச்ச சொச்சத்தினை,உடுத்து மகிழ்ந்த ஆடைகளின் பெயர்களை, அலங்கரித்து வாழ்ந்த ஆபரண வகைகளை,பரிமாறிய பண்டபாத்திரங்களை, கால்வாயில் குதித்த மீன் வகைகளை,கல்யாணத்தில் பகிர்ந்த இனிப்பு வகையறாக்களை, இசைத்து ரசித்த இசைக்கருவிகளை, மத நம்பிக்கைககளை, மூட சாஸ்திரங்களை என்று ஒரு வரலாற்றையே ஆவணப்படுத்தியிருக்கிறார் தீரர்.
மொத்தத்தில் "நட்டுமை" கிளியும் கிளியும் கிண்ணாரம்..
நிறைவான நாவலைத்தந்த சகோதரர் நௌசாத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்....
000