கிழக்கிலங்கையின ஆன்மாவைச் சொல்லும் நல்ல.நாவல்.நட்டுமை
----------------
காலச்சுவடு பதிப்பகம்.நாகர்கோவில்-1
காலச்சுவடு அறக்கட்டளையின் "சுந்தர ராமசாமி-75" இலக்கியப் போட்டியில்
முதல் பரிசு பெற்ற நாவல் இது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1930-களில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நீர்ப் பாய்ச்சுவதில் ஏற்ப்பட்டபிரச்சினைகளைப் பின்புலமாக் கொண்டு கிழக்கிலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் பண்பாடு, வாழ்முறை, சமய நம்பிக்கைகள் , பள்ளிவாசல் கொடியேற்று விழா ,திருமணச்சடங்கு முதலானவற்றை அந்த மண்ணின் வாசத்துடன் நட்டுமை யதார்தத்துடன் சித்தரிக்கிறது
வயல்களில் தேக்கி.வைத்திருக்கும் நீரைத் திருட்டுத்தனமாக வரப்புகளி் பிளவுகள் ஏற்படுத்தி வடித்து விடுவதைக் குறிக்கும்#நட்டுமை எனும் சொல் இலங்கையின் விவசாய கிராமங்களில் கள்ளொழுக்கத்திற்க்கும் உவமையாகப் பாவிக்கப்படுகிறது.இநதத் தலைப்பே நாவலின் மையச்சரட்டையும் குறிப்பாக உணர்த்துகிறது ...என்கிறார் பின்னட்டையில் ...#ராஜமார்த்தாண்டன்
கிழக்கிலங்கயைின் துள்ளல் தமிழ் படிக்க படிக்க இனிப்பதாகும்
காட்டுப்பள்ளியில்.கந்தூரி உற்சவத்தில் கடை பரப்பியிருக்கும் அககால இலஙகை வியாபாரிகள் என்னென்ன பொருட்க்களை விற்றார்கள் என்பதை மட்டும் நாவலில் இருந்து பார்க்கலாம்....
...சிங்கள நாட்டு வியாபாரி வெள்ளையும் சொள்ளையும் தொந்தி வயிறுமாக தனது மார்புகள் பெருத்த "நோனா"வுடன் இம்முறையும் வந்து ஆபரணக்கடை பரப்பியிருந்தார் ...கொண்டை மூடி...கொண்டைக் குத்திகள்...வெள்ளி அட்டியல்கள்...தங்க முலாமிட்ட சரடு..மாலை...கழுத்துக் கொடிகளுடன் பிளாஸடிக் வைரமாலைகள்...கன்னிப் பெண்களும் இளம் மனைவிகளும் அங்கேயே வாங்கி அணிந்து அழகு பார்த்தனர்....
பக்கத்தில் மருதமுனையிலிருந்து ஆடை வகைகளுடன் பாடியிறங்கியிருந்தார் மௌலானா முதலாளி.சந்திரபடி...மோஹினிப்பட்டு...அரமணமூட்டு...அசில் பட்டு...குட்டாப்பட்டு சாறம்களும் கைத்தறிசாறம்களும் பற்பல வர்ணங்களில் அடுககியிருந்தார்...சதா சிரித்துக்கொண்டிருந்தார்.
காத்தான்குடி காஸிம்முதலாளி வழமைபோல் இம்முறையும் தினுசு தினுசாகப் புடவைகள் கொணர்ந்து பரப்பி வைத்து கவர்ச்சியாக்கி காட்சிப்படுத்தி அதைக் காணவரும் பெண்களைக் கவர்ந்துகொண்டிருந்தார் பால் சோமன்...கடுகுவண்ணச் சோமன்...மருதமூட்டு சோமன்...சந்திரபடி..பட்டுச் சோமன் என்று எடுத்தெடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தார் பெண்கள் கூட்டம் அம்மியது.
கண்டியிலிருந்து வண்டியில் தாவளம் கட்டி வந்த கிதுறு நானாவும் அவரது இல்லாள் பீவி பாத்திமாவும் நவீன வெளிநாட்டு புடவைக் கடை பரப்பியிருந்தனர் மாடா வண்ணச் சோமன்...எள்ளுப்பட்டு...முக்கடுக்குச் சோமன்...வெண் பட்டு...நோம்புப் புடவை..சுங்கொடி...மூங்கில் பட்டு...கல்குத்தாஜவுளிகள்...வத்தாலி நூற்சேலைகள்...அத்துராசி அடுக்குகள்...என வகைவகையாக அடுக்கியும்.சிலதைத் தொங்கவிட்டும் விளம்பித்திருந்ததில்......
கல்முனைக்குடி உதுமான்கண்டு தின் பண்டக் கடையில் உட்க்கார்ந்து கொசு விரட்டியபடி கர்ணகடூரமாகக் கத்திக் கூப்பிட்டார்....தேன்...தேன்...வாங்க..வாங்க...திங்க வாங்க...என்று தன்பாட்டுக்கு கூவிக்கொண்டே வன்னியர் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்....
....தாம்பாப் பலகாரம்...பொன்னிறத்தில் மஸ்கட்...எள்ளுத் தூவிய துதல்கட்டிகள்...சோகி...அச்சுப்பணியாரம்...தேன்குழல் முறுக்கு...பதினாலு வகை மிட்டாய்கள்...காப்பு மிட்டாய்...முள்ளு மிட்டாய்...சவ்வு மிட்டாய்..பாம்பு மிட்டாய்...கண்ணாடி மிட்டாய்...என வர்ணமயமாக அடுக்கி பெரிய பெரிய.காகிதச் சுருள்கள் சுருட்டி சுறுசுறுப்பாக வியாபாரம் செய்தார்.தராசின அடிப்பாகத்தில் இரகஸியமாக ஒரு மஸ்கட் துண்ை.ஒடடி வைத்திருந்தார்...(ஹா...ஹா...ஹா...)
( இனி வருவதுதான் சூப்பர்...நம்ம ஐட்டம்...அது எப்போதும் இப்படித்தானோ...ஹா...ஹா...ஹா...)
.....இடது பக்க வரிசைக்கடைகளில தொழுவது எப்படி..?...மௌஸூக்கு மாலை...ஞானரத்தின வலங்காரக் கீர்த்தனம்...பீர் சாகிபு அப்பா பதப்பாடல் திரட்டு...குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் பாகம் ஒன்று...முஸ்லிம் அன்பர்களே...ஹஜ் கடமை...புத்தக அடுக்குகள் வாங்குவாரற்றுக் காட்சியளித்தன....(பக்கம் ..58-59-60)
-இப்படியாக விரிகிறது நாவலின காட்சிகள் .கிழக்கிலங்கையின ஆன்மாவைச் சொல்லும் நல்ல.நாவல்.
௦௦௦௦